மதன் கலக்கிய பானம்


கண்ணொடு கண்ணைக் கலந்தாளென்றால்
களங்கம் உள்ளவள் எச்சரிக்கை
உடனே கையுடன் கைகோர்த்தாளா
ஒழுங்கங் கெட்டவள் எச்சரிக்கை
ஆடை களைகையில் கூடுதல் பேசினால்
அனுபவம் மிக்கவள் எச்சரிக்கை
கலவி முடிந்த பின் கிடந்து பேசினால்
காதலாய் மாறலாம் எச்சரிக்கை
....

உன்னுடன் இருப்பது சுகமென்றாளா
உறுதியாய்ச் சிக்கல் எச்சரிக்கை
அறுவடை கொள்முதல் என்றே காமம்
அமைவது பொதுவே நலமாகக் கொள்
கூட்டல் ஒன்றே குறியென்றான பின்
கழிப்பது காமம் மட்டும் எனக்கொள்
உன்னை மங்கையர் என்னெனக் கொள்வர்
யோசிக்காமல் வருவதை எதிர்கொள்
முன்னும் பின்னும் ஆட்டும் சகடை
ஆணும் பெண்ணும் அதுவேயெனக்கொள்
காமமெனப்படும் பண்டைச் செயலில்
காதல் கலவாது காத்துக்கொள்
....

கலவி செய்கையில் காதில் பேசி
கனிவாய் மெலிதாய்க் கழுத்தைக் கவ்வும்
வெள்ளை பளிச்சிடும் பற்கள் வேண்டும்
குழந்தை வாயை முகர்ந்தது போலக்
கடும் நாற்றமில்லாத வாயும் வேண்டும்
காமக் கழிவுகள் கழுவும் வேளையும்
கூட நின்றுவன் உதவிட வேண்டும்
....

வங்கியில் இருப்பு வீட்டில் கருப்பென
வழங்கிப் புழங்கிட பணமும் வேண்டும்
....

இப்படிக் கணவன் வரவேண்டும் என
ஒன்பது நாட்கள் நோம்பு இருந்தேன்
வரந்தருவாள் என் வரலட்சுமியென
கடும் நோம்பு முடிந்ததும் தேடிப்போனேன் பீச்சுக்கு
....

தொந்தி கணபதிகள் திரிவது கண்டேன்
முற்றும் துறந்து மங்கையரோடு
அம்மணத் துறவிகள் கூடிடக் கண்டேன்
...

மூத்த அக்காள் கணவனுக்கு
முக்கால் தகுதிகள் இருந்தும் கூட
அக்காளில்லா வேளையில் அவன்
காளத்தி வேண்டும் என்றான்
...

வரம்தரக் கேட்ட வரலட்சுமியுனக்கு
வீட்டுக்காரர் அமைந்தது எப்படி?
நீ கேட்ட வரங்கள் எதுவரை பலித்தது?
உறங்கிக்கொண்டே இருக்கும் உந்தன்
அரங்கநாதன் ஆள் எப்படி?
பிரபந்தம் சொல்லும் அத்தனை சேட்டையும்
வாஸ்தவமாக நடப்பது உண்டோ?
அதுவும் இதுவும் உதுவும் செய்யும்
இனிய கணவர் யார்க்குமுண்டோ?
உனக்கேனுமது அமையப் பெற்றால்
உண்மையிலேயே அதிர்ஷ்டசாலிதான்
நீ அதுபோல எனக்கும் அமையச் செய்யேன்
ஸ்ரீ வரலட்சுமி நமோஸ்துதே!
....

ஏழை முதல்வரின் சொத்து மதிப்பு

சென்னை: உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கருணாநிதி, அவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது அவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கருணாநிதியிடம் கணக்கு கேட்டு அதைத் தராததன் காரணமாக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அதிமுக. அதை மறந்து, 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பிலே கருணாநிதி தன்னுடைய கணக்கைக் காட்டியிருப்பது நகைப்புக்குரியதாக இருக்கிறது. இதை கடந்த நூற்றாண்டு மற்றும் இந்த நூற்றாண்டின் இணையற்ற ஜோக் என்று சொல்லலாம்.

இப்படிப்பட்ட சிறந்த நகைச்சுவைக்காக மாநில அளவிலோ, தேசிய அளவிலோ, ஏன் உலக அளவிலோ கூட கருணாநிதிக்கு விருது கிடைத்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

திருவாரூரில் இருந்து திருட்டு ரயில் மூலம் சென்னைக்கு வந்ததாக கருணாநிதியே பல முறை பேசி இருக்கிறார். இது குறித்து 'வனவாசம்' புத்தகத்தின் முதல் பதிப்பில் கருணாநிதியின் நெருங்கிய நண்பராக இருந்த கவியரசர் கண்ணதாசன் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறார். உண்மையைச் சொல்லப் போனால் கோயில் பிரசாதத்தை சாப்பிட்டு வளர்ந்தவர் கருணாநிதி.

இவர் கூட்டங்களில் பேச ஆரம்பித்த போது இவருக்குக் கிடைத்த சம்பளம் ஒரு சிங்கிள் டீயும், இரண்டு வடையும் தான். இப்படிப்பட்ட கருணாநிதி இப்பொழுது திடீரென்று 'கணக்கு காட்டுகிறேன்' என்ற தலைப்பில், தன்னுடைய குடும்பம் ஓரளவு வசதியுள்ள குடும்பம் என்று ஒரு புதிய தகவலை தற்போது வெளியிட்டு இருக்கிறார்.

16.1.1946 அன்று கமலாம்பிகா கூட்டுறவு நகர வங்கியில் பங்காளியாக சேர விண்ணப்பித்த போது, அந்த விண்ணப்பப் படிவத்தில் தனக்கு நஞ்சை, புஞ்சை நிலங்கள் ஏதுமில்லை என்றும், வீட்டு மனை ஏதுமில்லை என்றும் தெரிவித்து, தன் வசம் 'நகை, பாத்திரம் வகையறா சுமார் ரூ. 1,000' இருக்கிறது என்று கருணாநிதியே கைப்பட எழுதியிருக்கிறார்.

கருணாநிதியின் தந்தை முத்துவேலர் வசம் என்ன இருந்தது என்பதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த கூட்டுறவு மாத இதழில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

கருணாநிதியும், கவியரசர் கண்ணதாசனும் சென்னையில் இருந்து சேலத்திற்கு ரயிலில் பயணம் செய்த போது, உணவு வாங்கி சாப்பிட பணமில்லாத நிலை இருந்த போது, 'தனக்கு பசி தாங்கவில்லை' என்று கவியரசர் கண்ணதாசன் கருணாநிதியிடம் சொன்னதாகவும், அதற்கு பதில் அளித்த கருணாநிதி, அருகில் இருந்த பழக் கூடையை காட்டி 'திருடலாமா?' என்று கேட்டதாகவும், கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய 'வனவாசம்' புத்தகத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் 1949ம் ஆண்டே மாத ஊதியமாக 500 ரூபாய் சம்பாதித்ததாக கூறியிருக்கிறார். 'மணமகள்' திரைப்படத்திற்கு கதை வசனம் எழுதி 10,000 ரூபாய் பெற்றதாகவும், 'இருவர் உள்ளம்' திரைப்படத்திற்காக 20,000 ரூபாயை பெற்றதாகவும் கருணாநிதி கூறி இருக்கிறார். அப்படி என்றால் கருணாநிதி எந்த ஆண்டிலிருந்து வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து கொண்டு வருகிறார்? முதன் முதலில் வருமான வரி தாக்கல் செய்த போது அவருடைய ஆண்டு வருமானம் என்ன? அப்போது எவ்வளவு வருமான வரி கட்டினார்? ஆண்டுதோறும் செலுத்திய வருமான வரி எவ்வளவு? என்பதை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுடைய வீடுகளை விட வசதி குறைவான வீட்டில் எளிமையாக வாழ்ந்து வருவதாகவும், அரசு நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்றும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

கருணாநிதிக்கு கோபாலபுரத்திலே ஒரு வீடு, சி.ஐ.டி. காலனியில் ஒரு பங்களா; கருணாநிதியின் மகன் மு.க. ஸ்டாலினுக்கு வேளச்சேரியில் ஒரு பங்களா; சென்னை போட் கிளப்பில் ஒரு மாளிகை; பேரன் கலாநிதி மாறனுக்கு சென்னை போட் கிளப்பில் பிரம்மாண்டமான மாளிகை, பேரன் தயாநிதி மாறனுக்கு போட் கிளப்பில் மிகப் பெரிய பங்களா, மகள் செல்விக்கு பெங்களூரில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் மாளிகைகள், பண்ணை வீடுகள்; தென் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 25க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்கள், நாளிதழ்கள், வார இதழ்கள், பேரன் பெயரில் ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், சன் ஏர்லைன்ஸ்,

மு.க. அழகிரிக்கு மதுரையில் பல ஏக்கர் நிலங்கள், பண்ணை வீடுகள்; வர்த்தக பலமாடி கட்டடங்கள்; பொறியியல் கல்லூரி; மு.க. தமிழரசு, மு.க. முத்து, கனிமொழி என அனைவரும் மாடமாளிகைகளில் வாழ்ந்து கொண்டு மக்கள் சொத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றனர்.

பேரன்கள், பேத்திகள் உட்பட, கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனி ஆடம்பர மாளிகைகளும் ஏராளமான அசையா சொத்துக்களும் உள்ளன.

கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சினிமாத் துறையையே கபளீகரம் செய்துவிட்டனர். தன்னுடைய கோபாலபுரத்தின் பின் பகுதியில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 700 சதுர அடி நிலத்தை கருணாநிதி ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்.

டாடா நிறுவனம் கருணாநிதியின் துணைவிக்கு ரூ. 300 கோடி மதிப்பில் மிகப் பெரிய மாளிகை கட்டித் தர இருப்பதாக நீரா ராடியா- ராசாத்தி உரையாடல்களில் இருந்து தெரிய வருகிறது.

செல்வி மற்றும் ஸ்டாலின் மூலமாக ரூ. 600 கோடியை தயாளு பெற்றுக் கொண்டுதான் தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவியை கொடுத்ததாக அதே நீரா ராடியா உரையாடல்கள் தெரிவிக்கின்றன.

உண்மை நிலை இவ்வாறிருக்க, கருணாநிதி தன்னை யோக்கியர் போல சித்தரித்துக் கொண்டிருப்பது எள்ளி நகையாடத்தக்கது.

கருணாநிதி தன்னுடைய அறிக்கையில், 2005ம் ஆண்டு அக்டோபர் மாதம், சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் சார்பில் ரூ. 100 கோடி தரப்பட்டதாகவும், அதில் ரூ. 22 கோடி அளவிற்கு வருமான வரி கட்டியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். பத்திரிகை எரிப்பு சம்பவத்திற்கு பிறகு, 200ம் ஆண்டு இறுதியில், 'முழு' தொகை கருணாநிதிக்கு தரப்பட்டதாக பத்திரிகையில் செய்தி வெளியானது.

அதனையடுத்து 'கண்கள் பனித்தன, இதயம் இனித்தது' என்று கருணாநிதியும் அறிவித்தார். அதற்கு வருமான வரி கட்டியதாக கருணாநிதி அறிவிக்கவில்லையே?.

இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி கருணாநிதியின் ஆட்சி. வீராணம் ஊழல், பூச்சிகொல்லி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், மணல் கொள்ளை, ரேஷன் பொருட்கள் கடத்தல், கள்ள லாட்டரி சீட்டு விற்பனை என அனைத்திற்கும் மூலக் காரணமானவர் கருணாநிதி. விஞ்ஞானப் பூர்வமாக ஊழல் செய்வதில் வல்லவர் என்று சர்க்காரியா கமிஷனிடம் சான்றிதழ் பெற்றவர்.

இப்படி இருக்கும் கருணாநிதி, லஞ்சம், ஊழல் ஆகியவற்றைப் பொறுத்தவரை தான் ஒரு நெருப்பு என்று கூறியிருப்பது நகைப்புக்குரியதாக உள்ளது. பஞ்சுப் பொதியிலே தீப்பொறி பட்டால் எப்படி தீப்பிடித்துக் கொள்ளுமோ அது போல, தன்னிடம் உள்ள ஊழலை உலகம் முழுவதும் பரப்புவதில் தான் ஒரு நெருப்பு என்ற அர்த்தத்தில் கூறி இருக்கிறார் போலும்!.

பொருளாதாரம், விஞ்ஞானம், இலக்கியம், சமாதானம் போன்றவற்றிற்காக நோபல் பரிசு கொடுக்கப்படுகிறது. சிறந்த நகைச்சுவைக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டால், அந்தப் பரிசுக்குத் தகுதியானவர் கருணாநிதி தான். அந்த அளவுக்கு 'கணக்கு காட்டுகிறேன்; கண்ணுடையோர் காண' என்ற தலைப்பில் வெளி வந்துள்ள கருணாநிதியின் அறிக்கையை படித்து தமிழக மக்கள் விலா எலும்பு வலிக்க சிரித்து உடல் வலி வந்தது தான் மிச்சம்!.

தனது 60 ஆண்டுகால பொது வாழ்வில், ஏழை மக்களை ஏமாற்றி, 'தன்' குடும்ப மக்களை ஏற்றிவிட்டிருக்கும் கருணாநிதி, ஆட்சி முடியும் தருவாயில் பொய்க் கணக்கை காட்டி மீண்டும் மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்.

கருணாநிதியின் பொய்க் கணக்கிற்கு பலமான பதிலடி கொடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள்.

இவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

Posted in Labels: | 0 comments

இந்திய ஐ.டி. நிறுவனங்கள் அமெரிக்காவில் 2.5 லட்சம் வேலை வாய்ப்புகள்

இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களால் கடந்த 3 ஆண்டுகளில் அமெரிக்காவில் 2.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன.

சென்ற ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 7,000 அமெரி்க்கர்களுக்கு வேலை கிடைத்துள்ளது. இந்த தகவலை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்தார்.

டி.சி.எஸ், இன்போசிஸ் உள்ளிட்ட முன்னணி ஐ.டி. நிறுவனங்கள் உள்நாட்டில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் வலுவாக காலூன்றி அந்நாட்டிம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன.

இந்த நிறுவனங்கள் அமெரிக்காவில் கடந்த மூன்று ஆண்டுகளில் 2.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளன.

இந்நிலையில் அமெரிக்க அரசு, இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தும் வகையில், எச்-1பி உள்ளிட்ட விசாக்களுக்கான கட்டணத்தை கணிசமாக உயர்த்தியுள்ளது.

இது குறித்து ஆனந்த் சர்மா கூறுகையில், பொருளாதார மந்தநிலையின்போது, உள்நாட்டில் வேலைவாய்ப்பு குறைவதை தடுப்பது எந்த நாடும் எடுக்கும் இயல்பான நடவடிக்கை தான். அதே நேரத்தில் பிற நாட்டு நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயல்படுவது, எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.

Posted in Labels: | 0 comments

அமெரிக்காவில் பெரும் சிக்கல்

அமெரிக்கப் பெண்களின் மார்புகள் பெரிதாகி வருகிறதாம். இதனால் பிரா விற்பனையில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதுப் பெண்களுக்கு மார்பு அளவு இயல்பை விட பெரிதாக உள்ளதாம். இதன் காரணமாக கடைகளில் விற்பனையாகும் பிரா விற்பனையில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தங்களது அளவுக்கேற்ற பிராவை வாங்கிச் செல்லும் பெண்கள், சீக்கிரமே சைஸ் மாறி விடுவதால் பிராக்களை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்களாம்.

அமெரிக்காவின் முன்னணி பிரா தயாரிப்பாளரான வகோல் அமெரிக்கா நிறுவனம், கடந்த ஆண்டு 36டி என்ற பிரா வகையை அறிமுகப்படுத்தியது. அது அமெரிக்கப் பெண்களிடையே சீக்கிரமே பிரபலமானது. ஆனால் இந்த ஆண்டு அதை தூக்கி விட்டு 36 டிடி என்ற புதிய பிராவை அறிமுகப்படுத்தியுள்ளது அந்த நிறுவனம். காரணம், ஆரம்பத்தில் நன்றாகப் போய்க் கொண்டிருந்த 36டி பிரா, பின்னர் சைஸ் சரியாக இல்லை என்று பெருமளவில் புகார்கள் வந்ததால்தான் இப்போது 36டிடி என்ற அடுத்த பிராவை களம் இறக்கியுள்ளதாம்.

அமெரிக்கப் பெண்களுக்கு குறிப்பாக டீன் ஏஜ் வயதினருக்கு மார்பக வளர்ச்சி இயல்பை விட பெரிதாக இருப்பதே இந்த பிரா குழப்பத்திற்குக் காரணம் என்கிறார்கள்.

ஏற்கனவே அமெரிக்காவில் பொருளாதாரப் பிரச்சினை. இப்போது இந்த சிக்கல் வேறயா...!

Posted in Labels: | 0 comments

இந்த உலகை உருவாக்கியது இயற்பியலே - ஸ்டீபன் ஹாக்கிங்

லண்டன்: இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியது கடவுள் அல்ல, இயற்பியல்ன் கோட்பாடுகளின் விளைவுகளே காரணம் என்று கூறியுள்ளார் உலகப் புகழ் பெற்ற இங்கிலாந்து இயற்பியலாளர் பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங்.

Muscular dystrophy எனும் உடலியல் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவரான ஹாக்கிங், விண்வெளியியல் ஆய்வுக்கு ஆற்றிய சேவை மிகப் பெரியது. பிளாக் ஹோல்ஸ் குறித்த இவரது ஆய்வு மிகப் பெரியது. இவர் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' என்ற புத்தகம் மிகப் பிரபலமானது.

பிரபஞ்சம் உருவானதற்குக் காரணமான பிங் பாங் குறித்த கருத்தையும் மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தையும் இதில் அவர் விளக்கியுள்ளார்.

இங்கிலாந்தின் சன்டே டைம்ஸ் இதழின் சிறந்த புத்தக வரிசையில் தொடர்ந்து 237 வாரங்கள் முதலிடத்தில் இருந்து சாதனை படைத்தது இந்தப் புத்தகம்.

தற்போது ஹாக்கிங் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். அது இந்த பிரபஞ்சததை கடவுள் உருவாக்கவில்லை. மாறாக, இயற்பியலின் விதிகளே பிரபஞ்சம் உருவாகக் காரணம் என்று கூறியுள்ளார்.

இயற்பியலின் தவிர்க்க முடியாத விதிகளின் விளைவுகளால்தான் இந்த பிரபஞ்சம் உருவானதாக தனது சமீபத்திய 'தி கிரான்ட் டிசைன்' (The Grand Design) என்ற நூலில் எழுதியுள்ளார் ஹாக்கிங்.

இதுகுறித்து ஹாக்கிங் கூறுகையில், இந்த பிரபஞ்சம் உருவாவதற்கு முன்பு அவ்வளவு பெரிய பிரமாண்டமான வெற்றிடம் இருந்தது. எனவே யாரும் வந்து பூமியை உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுவாகவே தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது இந்த பிரபஞ்சம். இது முற்றிலும் இயற்பியல் சார்ந்ததே.

சுருக்கமாக சொன்னால் இந்த பிரபஞ்சம், சுயம்புவாக உருவானது. இதை உருவாக்க கடவுளுக்கு அவசியம் இல்லை. நமது பிரபஞ்சத்தின் அன்றைய நிலை, இன்றைய நிலை, நாம் இந்த பிரபஞ்சத்தில் வாழ முடிவது என அனைத்துக்குமே ஏதாவது ஒரு காரணம் உள்ளது. எதுவுமே மர்மம் இல்லை. எல்லாமே அறிவியல் சார்ந்தது.

பிரபஞ்சம் தானாக உருவாகவில்லை, அதை உருவாக்கியவர் கடவுள்தான். கடவுளின் சக்திதான் பிரபஞ்சத்தை உருவாக்கியது என்பது தவறு, அது சாத்தியமில்லை. கடவுள் வந்து தொட்டுக் கொடுத்து 'ஏ பிரபஞ்சமே உருவாகு' என்று கூறினார் என்று சொல்வது அபத்தமானது என்று கூறியுள்ளார் ஹாக்கிங்.

அதேசமயம், 1998ல் ஹாக்கிங் எழுதிய 'த பிரீப் ஹிஸ்டரி ஆப் டைம்' நூலில், பூமியின் உருவாக்கலில் கடவுளுக்கும் பங்கு இருக்கலாம் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், பிரபஞ்சத்தின் முழுமையான வரலாற்றை நாம் பார்க்கும்போது, அது முற்றிலும் மனிதகுலத்தின் வெற்றியாக கூறிக் கொள்ள முடியும். அதில் கடவுளுக்கும் ஒரு இடம் இருக்கலாம் என்று கூறியிருந்தார் ஹாக்கிங்.

ஆனால் தற்போது முற்றிலும் இது இயற்பியல் சார்ந்த நிகழ்வு என்று அடித்துக் கூறியுள்ளார் ஹாக்கிங்.

தனது புதிய புத்தகத்தில் அவர் கூறுகையில், பிக் பாங் காரணமாக சூரிய குடும்பமும், கோள்களும் உருவாகின. பூமியும் உருவானது. இதற்குக் காரணம், இயற்பியலின் விதிகளால் ஏற்பட்ட விளைவுகளே. இங்கு கடவுளுக்கு எங்குமே இடமில்லை. முற்றிலும் அறிவியல் சார்ந்த நிகழ்வு இது.

என் முன் இரண்டு கேள்விளை வைக்கிறேன். முதல் கேள்வி, நம்மால் புரிந்து கொள்ள முடியாத காரணங்களுக்காக கடவுள் இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினாரா என்பது.

2வது கேள்வி, அறிவியல் கோட்பாடுகளின் அடிப்படையில் பிரபஞ்சம் உருவானதா என்பது. இதில் நான் 2வது கேள்வியையே ஆதரிக்கிறேன். நீங்கள் விரும்பினால் அறிவியலின் கோட்பாடுகளை 'கடவுள்' என்று கூறிக் கொள்ளலாம். அதேசமயம் இதைத் தவிர வேறு எந்த கடவுளும் பிரபஞ்சத்துக்கு உரிமை கொண்டாட முடியாது என்பது எனது கருத்து என்கிறார் ஹாக்கிங்.

இருப்பினும் பல விஷயங்கள் இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. குறிப்பாக பிளாக் ஹோல்கள். இந்த 'இருண்ட சக்தி' பிரபஞ்சம் உருவானபோது ஏற்பட்டதா அல்லது பிரபஞ்சம் உருவானபோது அழிந்து போனதின் மிச்சமா என்பது இதுவரை விளங்கவில்லை.

தற்போதைக்கு பிரபஞ்சத்தின் வரலாறு குறித்து உலக அளவில் விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்டுள்ள ஒரே முடிவு பிக் பாங் தியரி மட்டுமே. மிகப் பெரிய வெடிப்புப் பிரளயத்தைத் தொடர்ந்து இந்த பிரபஞ்சம் உருவானதாக இந்த பிக் பாங் தியரி கூறுகிறது. 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பேரண்ட வெடிப்பு நடந்ததாக கடந்த ஆண்டு கணித்துக் கூறப்பட்டது.

தற்போது வெளியாகியிருக்கும் ஹாக்கிங்கின் நூலும் பிரபஞ்ச வரலாறு குறித்த புதிய பார்வைக்கு வித்திடும் என்கிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த இயற்பியலாளர் லியோனார்ட் லோடினோவுடன் இணைந்து இந்த நூலை எழுதியுள்ளார் ஹாக்கிங். இது செப்டம்பர் 9ம் தேதி வெளியாகிறது.

Posted in Labels: | 0 comments

இன்றைய சிந்தனை. 8

* மனிதனுக்கு எட்டுவித பந்தங்கள் இருக்கின்றன. அதை வெட்கம், வெறுப்பு, அச்சம், ஜாதிச்செருக்கு, வம்சவழிச்செருக்கு, சீலம், துயரம், உள்ளத்தில் ஒளித்துவைத்தல் என்பனவாகும். குரு கடாட்சமின்றி இவற்றை யாரும் விட்டு விட முடியாது.
* மலத்தில் உதித்து மலத்திலேயே வாழ்ந்துவருகிற புழு ஒன்று, சந்தனத்தில் எடுத்துவைத்தால் அது செத்துப்போகும். அதுபோன்று கலகப் பற்றுடைய ஒருவனை நல்லார் இணக்கத்தில் சேர்த்துவைத்தால் அவன் பெருந்துன்பத்துக்கு ஆளாவான்.

* உலக வாழ்க்கையில் சத்து ஒன்றும் இல்லை. ஆயினும் உலகப் பற்றுடையவன் அதைத் தெரிந்திருந்தும் அதை விட்டுவிடமாட்டான்.

* கயமையில் உழல்பவர்களுக்குக் கடவுள் விசுவாசம் வருவதில்லை. அவர்கள் எப்பொழுதும் சந்தேகப் பேர்வழிகள். ஆனால் சந்தேகம் யாருக்குமே அடியோடு அகன்று போவதில்லை. பிரம்மஞானம் அடைய பெற்றவனுக்குத்தான் சந்தேகம் ஒன்றும் வருவதில்லை.

* உலகில் பெரும் பற்றுதல் வைத்து சுக ஜீவனம் செய்து வருபவர்களிடம் உலகிலுள்ள கஷ்ட நஷ்டங்களைப்பற்றி மிகைபடப் பேசலாகாது.

* உலகப் பற்றுடையான் வெறும் பொய் வேஷக்காரன். கடவுளை நேசிப்பவன் போன்று அவன் பாசாங்கு பண்ணுகிறான். உண்மையின் சகலப் பொருள்களிடத்துதான் அவன் பற்றுதல் வைத்திருக்கிறான். ஈசனே அனைத்துக்கும் இறைவன் என்னும் மெய்ஞ்ஞானம் வரும் வரையில் மனிதனுக்குப் பிறவிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.

* ஒருவனுக்கு தேகாத்ம புத்தி இருக்கும்பொழுது பிறப்பு, இறப்பு, பிணி, துயரம், இன்பம், துன்பம் ஆகியவைகளைப் பற்றிய உணர்வு இருக்கிறது. ஆனால் ஆத்மாவோ இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது

- ராமகிருஷ்ண பரமஹம்சர்.

நாம் வல்லரசு தான். சுதந்திர தின வாழ்த்துக்கள்.

நாம்நமக்குக் கிடைத்த சுதந்திரத்தை சரியாகப் பயன்படுத்துகிறோமா... இல்லையா... என்பதை காலம் காலமாக பட்டிமன்றம்நடத்தி வருகிறோம். ஆனால் பொது இடங்களில்நாம் நடந்து கொள்ளும் முறைகளோ மாறியிருப்பதாகத் தெரியவில்லை.பலர் சுதந்திரம் என்பதை - எல்லாம் தனக்கு வழங்கப்பட்டு விட்டதாகக் கருதுகிறார்கள். பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள், வாகனநெரிசலின் போது, போக்குவரத்து விதிகளைமீறுபவர்கள், அனுமதி இல்லாமல் போஸ்டர் ஒட்டுபவர்கள், கழிவுநீரை பொது இடங்களில் விடுபவர்கள், லஞ்சம் வாங்குபவர்கள், வேலை நேரத்தில் தங்கள் கடமையை செய்யாதவர்கள் என்று,"சுதந்திரத்தைக் கையில்' எடுத்துக் கொண்டவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.நாடு வல்லரசாக வேண்டும், பொது இடங்கள் "அமெரிக்கா' போன்று இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தங்களுடைய கடமையைமுழுமையாக நிறைவேற்றுகிறோமா என்று ஒருநிமிடம் யோசிக்கலாம்.


சாலைகளில்...: பலர் சரியான தடத்தில்தான் செல்கிறோமா என்பதைக்கூட கவனிப்பதில்லை. உரிய இடத்தில் "யூ டர்ன்' செய்ய பலருக்கு சோம்பேறித்தனம். குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட வேகத்தில் செல்வதில்லை. சிவப்பு எரியும் போதுநிற்பதில்லை. மஞ்சள் விளக்கு எரியும் போதே சென்று விடுவது.பலர் இண்டிகேட்டரை பயன்படுத்துவதே இல்லை. ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட்கள் பயன்படுத்துபவர்களையே "குற்றவாளிகள்' போல் பார்ப்பது. இரவில் முறையாக ஹெட்லைட் பயன்படுத்தாமல் செல்வது, குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவது என்று சாலைப் பயணத்தை மனவேதனைப்படுத்தும் விஷயங்களாக மாற்றியிருக்கிறோம். அதிலிருந்து மாற வேண்டும்.சாலையில் நடந்து செல்லும் போது கூட, மொபைல் பேசக்கூடாது. அது பெரிய ஆபத்தில் முடியும். அதேபோல் சாலை ஓரங்களில் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்வதுஅப்பகுதியை நோய்க்கிருமிகளின் கிடங்காகமாற்றுவதோடு, அதன் வழியே சென்றுவரும்பயணிகளுக்கு "இலவசமாக' அந்த இடம் நோய்களை வழங்கத் தொடங்கிவிடும்.

நடத்தைகளில்... : காரணமே இல்லாமல் கோபப்படுவோரை பார்த்திருக்கிறோம். சில்லரை கேட்கும் பயணியிடம் பஸ் கண்டக்டர் எரிந்து விழு தல், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடம் தவறாக நடத்தல், தகவல் கேட்கும் பொதுமக்களிடம் அதிகாரிகள் கோபம் காட்டுவது, நியாயமான தொகையை சொல்லும் பயணியிடம் ஆட்டோக்காரர்கள் காட்டும் கோபம் என்று எதற்கு கோபப்படுவோரை நாம் சாதாரணமாக பார்க்கலாம். மற்றவர்களுடன் எதற்கெடுத்தாலும் வில்லங்கம் பேசும் பண்பு, சண்டைக்குப் போகும் குணம் மாற வேண்டும். இன்றும் பலர் ஜாதி, மத வேறுபாடுகளைமனதுக்குள் சுமந்து கொண்டிருக்கிறார்கள்.சமுதாயம் என்பது ஒருவருக்கு ஒருவர் சார்ந்து இருப்பது. மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லாத நிலை இப்போது உருவாகி வருகிறது என்றே கூற முடியும். பஸ், ரயில், விமானப் பயணங்கள் சில நேரங்களில் நம்பும்படியாக இல்லை. நாம் நமது நாட்டின் தலைசிறந்த தலைவர்கள் மற்றும் அவர்கள் நடந்த வழி ஆகியவற்றை பின்பற்றி நமது நல் ஒழுக்கங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள இன்னொரு பிரச்னை, வரிசையை தவிர்ப்பது. மேலைநாடுகளில் பொதுவாக, நான்கு பேர் கூடினால் கூட, அவர்களாக வரிசை அமைத்துக் கொள்வார்கள். ஆனால் இங்கு கோயில் திருவிழா அல்லது பஸ் ஸ்டாண்டில் உள்ள கூட்டத்தினருக்கு வரிசை அமைக்க போலீசார்வரவேண்டியிருக்கிறது. மக்கள் தொகை அதிகமுள்ள நம் நாட்டில், வரிசை என்பது மிக முக்கியம். இல்லாவிட்டால்,முதலில் வந்தவர் கடைசியில் கூட அவருக்குரியதை பெற முடியாமல் போய்விடும். வரிசையில் செல்வோருக்கு இடையில் புகுந்துவிடுவது.வரிசையில் தெரிந்தவர் இருந்தால் அவர் தலையில் தனது சுமையைக் கட்டுவது.

மதித்து நடத்தல்... : வயதானோர், பெண்கள், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளை மதித்து நடக்க வேண்டும். அவர்களுக்கு உரிய இருக்கை மற்றும் வரிசையில் இடம் ஆகியவற்றை அளிக்க வேண்டும்.

வர்த்தகத்தில்... : சரியான பொருளுக்கு உரிய விலை நிர்ணயித்துள்ளோமா?. பொருள் தரமானதுதானா? உபயோகிப்பாளரிடம் உரிய முறையில் நடந்து கொள்கிறோமா? விற்பனையாகும் பொருள் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதுதானா? என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும்.இந்த நாட்டின் சுதந்திரம் நமக்கு மட்டுமல்ல... எல்லோருக்கும்தான் என்ற உணர்வு ஏற்பட்டால்தான் உண்மையான
சுதந்திரத்தின் சுவாசத்தை எல்லோரும் அனுபவிக்கமுடியும்.

நன்றி தினமலர்.

இஸ்லாமிய நண்பர்க்களுக்கு.

Posted in Labels: | 0 comments

10 * 16 | குழந்தை திருமணம்?

டெல்லி: 16 வயது பெண்ணும் 18 வயது ஆணும் திருமணம் செய்து கொள்வதில் எந்தத் தவறும் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

18 வயது கணவனும் 16 வயது மனைவியும் இணைந்து தாக்கல் செய்த வழக்கில் இந்தத் தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.


காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களை அவர்களது பெற்றோர் காலி செய்ய முயன்றதையடுத்து ஊரைவிட்டு ஓடினர்.

ஆனாலும் இவர்களை தேடிக் கண்டுபிடித்த பெண்ணின் பெற்றோர் இருவரையும் பிரித்தனர். மகளை தங்களுடன் அழைத்துச் சென்றுவிட்டனர்.

அவர்கள் தந்த புகாரின் அடிப்படையில் கணவர் மீது போலீசார் ஆள் கடத்தல், கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்தனர்.

இதை எதிர்த்தும் தங்களுக்கு பாதுகாப்பு கோரியும், தங்கள் பெற்றோர் மீது நடவடிக்கை எடு்க்கக் கோரியும் இந்தத் தம்பதி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், இந்தத் திருமணம் செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி அகமத், நீதிபதி ஜெயின் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழங்கிய தீர்ப்பில்,

குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவே திருமண வயது சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அதையும் மீறி பெற்றோரே நடத்தி வைக்கும் குழந்தைத் திருமணங்கள் நடந்து கொண்டு தான் உள்ளன.

பெற்றோரின் நெருக்குதல்களால் நடக்கும் சிறு வயது திருமணங்களை முழுமையாகத் தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் 18 வயது ஆணும் 16 வயது பெண்ணும் திருமணம் செய்து கொண்டதை செல்லாது என்று அறிவிக்க முடியாது. அவர்களில் யாராவது ஒருவர் இந்தத் திருமணத்தை எதிர்த்தால் தான் அது செல்லாதே தவிர, அவர்கள் விரும்பி செய்து கொண்ட இந்தத் திருமணம் செல்லும்.

வயதை காரணம் காட்டி யாருடைய திருமணத்தையும் அடுத்த நபர் தடுக்க முடியாது. மணம் முடிப்பவர்கள் மட்டுமே இந்த விஷயத்தில் முடிவெடுக்கலாம்.

நாடு முழுவதும் கெளரவக் கொலைகளும் வரதட்சணைக் கொலைகளும் நடந்து கொண்டிருக்கின்றன. மேஜரான பெண்ணுக்கோ ஆணுக்கோ நாம் பார்த்து செய்து வைக்கும் திருமணத்திலேயே பலவித சிக்கல்கள் வருகின்றன. அந்தப் பெண் கண்ணைக் கசக்கிக் கொண்டு வீட்டுக்குத் திரும்பும் காட்சிகள் எண்ணில் அடங்காதவை.

இந் நிலையில் பெற்றோர் கட்டாயப்படுத்தி நடத்தி வைக்கும் குழந்தைத் திருமணங்களையும் மேஜர் ஆகாத இளம் வயதினர் தாங்களே விரும்பி செய்து கொள்ளும் திருமணங்களையும் நாம் வித்தியாசப்படுத்தி பார்ப்பது தான் சரி. பெற்றோர் செய்து வைக்கும் கட்டாய குழந்தைத் திருமணம் மட்டும் சரி, அதே நேரத்தில் இளம் வயதினர் தாங்களே விரும்பி செய்து கொள்ளும் திருமணம் தவறு என்று எப்படி சொல்ல முடியும்?. இதனால் திருமண வயது சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதை தெளிவானதாக்குவது தான் சரியாக இருக்க முடியும். அதை ஆட்சியாளர்கள் செய்ய வேண்டும்.

இந்த சட்டம் எவ்வளவு சீக்கிரம் வருகிறதோ அவ்வளவு நல்லது. இல்லாவிட்டால் நாடு முழுவதும் நீதிமன்றங்களில் உடைந்த இதயங்களின் வழக்குகள், கண்ணீர் விடும் மகள், உயிருக்கு அஞ்சி ஓடும் மணமகன், மனம உடைந்து போன பெற்றோர்களின் வழக்குகள் குவிந்து வருவதை தவிர்க்கம முடியாது. காதல் ஒருவரின் வாழ்க்கையையோ அல்லது இரு குடும்பத்தினரின் வாழ்க்கையையோ கிரிமினல் குற்றவாளிகளாக்கிவிடக் கூடாது என்றனர் நீதிபதிகள்.

kurunji | குறுஞ்சி.

குறிஞ்சி என்றதும் மலையும் மலை சார்ந்த இடமும் என்று பாடப் புத்தகத்தின் இரண்டு மதிப்பெண் பதில் ஒன்று நினைவுக்கு வரும். மெத்த சரி. ஆனால் ஒரு மாவட்டத்துக்கே நீலகிரி என்று பெயர்



ஏற்பட இந்த குறிஞ்சி மலர்கள்தான் காரணம். நீல நிறத்தில்

பூக்கும் இந்தப் பூக்கள் அவ்வளவு வசீகரமானவை அல்ல.

நறுமணம் மிக்கவையும்கூட இல்லை. ஆனால் பூத்தால் ஒரு மலையையே நீல வண்ணமாகத் தோன்றச் செய்யும் அளவுக்குப்

பிரம்மாண்டமாகப் பூப்பவை. அதுதான் குறிஞ்சிப் பூவின் சிறப்பு.

இலக்கியத்தில் 5 வகை நிலங்கள் இருப்பதாக படிக்கிறோம். அவற்றில் முதன்மையானது குறிஞ்சி நிலம். இந்நிலம் முதன்மையானது மட்டுமல்லாமல் பல்வேறு சிறப்புகளையும் கொண்டுள்ளது.

இந்நிலத்தைக் குறித்த பெருமைகளை ஆரிய அரசனான பிரகதத்தனுக்குச் சொல்லிக் கொடுக்கும் வகையில் கபிலர் குறிஞ்சிப்பாட்டையே பாடினார் என்பது வரலாறு. நவீன தொழில் நுட்ப அறிவியல் வளர்வதற்கு முன்னரே இம்மண்ணில் மலரும், மலர்களைக் குறித்த பரந்த அறிவும் தமிழர்களுக்கு இருந்துள்ளது.

தமிழகத்தின் மலைப்பகுதிகளில் பரவியுள்ள குறிஞ்சிப் பூக்கள் தமிழர்களின் நிலமான குறிஞ்சி நிலத்தின் அருங்கொடையாக அமைந்தது எனப் புலவர்கள் பலர் பாராட்டுகின்றனர். சோலைக்காடுகளில் படர்ந்துள்ள குறிஞ்சி செடிகளில் தலையில் நீலநிறப் பூக்கள் மணியைக் கவிழ்த்தாற்போல காட்சியளிப்பதாக கவிஞர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்கின்றனர்.

‘‘12 வருடங்களுக்கு ஒருமுறை பூக்கும் மலரான குறிஞ்சியைக் குறித்து இளங்கோவடிகளும் வேட்டுவ வரியில் பாடியுள்ளார். மதுரையை எரித்த பின்னர் கண்ணகி மலைப்பாங்கான பகுதிக்குச் செல்லும்போது, கோவலன் புஷ்பக விமானத்தில் தேவலோகம் சென்றதை குறிஞ்சி மலர்கள் பூத்திருந்த மலைப் பகுதியிலிருந்து கண்ணகி பார்த்ததாக இலக்கியம் கூறுகிறது. இதைத்தவிர சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என அனைத்து இலக்கியங்களிலும் குறிஞ்சிக்கு தனி இடமுண்டு'' என உதகை அரசு கலைக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் வி.ஆத்மஜோதி தெரிவிக்கிறார்.

‘‘உலகில் 250 வகைகளிலான குறிஞ்சி வகைகள் உள்ளன. இவற்றில் 59 வகையினங்கள் தென்னிந்தியாவிலுள்ளன. மலை மாவட்டமான நீலகிரியில் மட்டும் 31 வகைகள் உள்ளன. இதுவரை ஸ்டிரொபிலான்தஸ் என்ற தாவர குடும்பத்தின் வகையிலிருந்த குறிஞ்சி செடிகளின் தாவர இனம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.

ஸ்டிரொபிலான்தஸ் என்ற இனத்திலிருந்த பிளபோபில்லம் குந்தியானஸ் என்ற இனத்துக்கு மாற்றப்பட்டு விட்டது'' என உதகை தோட்டக்கலை தாவரவியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ராம்சுந்தர் தெரிவிக்கிறார். தற்போது நீலகிரி மாவட்டத்தில் பூத்துள்ள குறிஞ்சி மலர்கள் பிளேகாலஸ் செசிலிஸ் என்ற இனத்தைச் சேர்ந்தவை எனவும் அவர் தெரிவித்தார்.

குறிஞ்சி மலர்கள் பொதுவாக 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே பூக்கும் என்பது யாவரும் அறிந்ததாகும். ஆனால், எல்லா பூக்களும் அப்படியல்ல. சிலவகை செடிகளில் ஆண்டுக்கு ஒரு முறையாவது பூக்கும் தன்மை கொண்டவையாகும். இது பருவநிலை மாறுபாடோ அல்லது உலக வெப்பமயமாதலின் விளைவுகளோ அல்ல. இயற்கையிலேயே குறிஞ்சி மலர்களில் உள்ள பல்வேறு ரகங்களில் வித்தியாசமான காலக்கணக்கில் பூப்பவையாகும். இமயமலைப் பகுதிகளில் கிழக்குப் பகுதிகளில் ஆண்டுக்கொரு முறையும், மேற்குப் பகுதிகளில் குறித்த கால இடைவெளிகளில் மட்டுமே குறிஞ்சிப் பூக்கள் காணப்படும். இதற்கிடையே இவை ஏன் 12 வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பூக்கிறது என்பதைக் குறித்த ஆராய்ச்சிகளும் தற்போது நடைபெற்று

வருகின்றன.

ஆதிவாசி இன மக்களில் தங்களது வயதைக் கணக்கிட அவர் தனது வாழ்நாளில் எத்தனை முறை குறிஞ்சி மலர் பூத்துள்ளதை பார்த்துள்ளார் என்பதை அடிப்படையாக வைத்தே அவர்களது வயது கணக்கிடப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

‘‘தமிழனின் நாகரிகமே மலர்களில் தோன்றி மலர்களில் முடிவடைவதாகும். பிறப்பிலிருந்து இறப்பு வரை தமிழர்கள் தங்கள் நாகரிகத்தின் சின்னமாக மலர்களையே பயன்படுத்துகின்றனர்.

அதைத்தவிர பெண்களும் மலர்களுக்கு இணையாகவே ஒப்பிடப்படுகின்றனர். அதனால் பழந்தமிழர் வாழ்வில் மட்டுமின்றி இக்காலத் தமிழர் வாழ்வும் மலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அதில் குறிஞ்சி மலர்களுக்கான முக்கியத்துவம் குறிப்பிடத்தக்கது'' எனத் தோட்டக்கலை உதவி இயக்குநர் பிரகாசம் குறிப்பிடுகிறார்.

இத்தகைய குறிஞ்சி மலர்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி இனத்தை சேர்ந்த அனைத்து மலர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். இவற்றிலிருந்து பெறப்படும் தேன் அதிகளவில் மருத்துவ குணங்களை கொண்டவை என்பதால் குறிஞ்சித் தேன் என்ற சொல்லுக்கு மருத்துவ உலகில் அதிக மரியாதை உள்ளது. உலகம் முழுதும் குறிஞ்சி மலர்கள் பரவிக் கிடந்தாலும் ஆசியாவில்தான் இவற்றின் ஆதிக்கம் மிக அதிகமாகும்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள 31 வகையான குறிஞ்சி இனத்தில் நீலகிரியான்தஸ் என்ற ஒரு இனம் அழிந்துவரும் தாவரங்களின் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளது. இத்தகைய சூழலில்தான் கூடலூரில் ஜீன்பூல் பகுதியில் தற்போது பிளேகாலஸ் செசல்ஸ் என்ற வகையிலான குறிஞ்சி மலர்கள் பூத்துள்ளன.

குறிஞ்சி என்ற சொல்லை கேள்விப்பட்டிருக்கலாம். குறிஞ்சி மலர்களைக் சில இடங்களில் பார்த்துமிருக்கலாம். ஆனால் நீல மழை பொழிந்தாற்போல பரந்த வெளியில் நீல வண்ணத்தில் காட்சியளிக்கும் நீலக்குறிஞ்சி மலர்களை நேரில் கண்டால் மட்டுமே குறிஞ்சி மலருக்கான முக்கியத்துவம் நமக்கு தெரிவதோடு, எதிர்கால சந்ததியினருக்கு அதன் பெருமைகளும் தெரியவரும்.

eesal world record | ஈசல் உலக சாதனை முயற்சி.

ஈசல் படத்துக்காகத்தான் இந்த கின்னஸ் சாதனை முயற்சியாம்.

ஈசல் என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இது ஒரு ஆவிக்கதை. ஆனால் பயமுறுத்தும் ஆவிக் கதையோ அல்லது மாயாஜாலங்கள் நிறைந்த மாந்த்ரீகக் கதையோ அல்ல. சற்று வித்தியாசமாக எடுத்திருக்கிறார்களாம்.

இப்படத்தில் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. அந்தப் பாட்டை 24 பேர் சேர்ந்து, 24 மொழிகளில் பாடியுள்ளனராம்.

நடிகர் பார்த்திபன் மலையாள வரிகளையும், நடிகர் சுரேஷ் கோபி தமிழ் வரிகளையும் பாடியுள்ளனர். இதுபோல ஒவ்வொரு மொழிக்காரரும், இன்னொரு மொழியில் பாடியுள்ளனர்.

இப்படி ஒரு பாடல் இதுவரை எங்குமே பாடப்படவில்லையாம். எனவே இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என படத்தின் இயக்குநர் விஜய் ஆதித்யா கூறுகிறார்.

இப்படத்தில் ஹீரோவாக மிதுனும், ஹீரோயினாக சுனு லட்சுமியும் நடிக்கிறார்கள்.



சாதனையில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை, இதுவே உதாரணம்.

infy weds tvs?

பெங்களூர்: டிவிஎஸ் குழுமத் தலைவர் வேணு சீனிவாசனின் ஒரே மகளான லட்சுமி வேணுவை மணக்கவிருக்கிறார், இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகன் ரோஹன்.

கார்னல் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் பணியாற்றி, தற்போது ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி செய்து வருகிறார் ரோஹன். முன்பு இவர் பெங்களூர் பிஷப் காட்டன் ஆடவர் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

டிவிஎஸ் நிறுவனங்களின் தலைவர் வேணு சீனிவாசனின் ஒரே மகளான லட்சுமி, யேல் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். பின்னர் வார்விக் பல்கலைக்கழகத்தில் தயாரிப்பு நிர்வாகம் தொடர்பாக பிஎச்டி ஆய்வுப் படிப்பை முடித்தவர். சென்னையில் உள்ள சிஷ்யா பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்தவர்.

டிவிஎஸ் குழுமத்தின் சுந்தரம் கிளேட்டன் (ஆட்டோ உதிரி பாக தயாரிப்புப் பிரிவு) மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்களின் உத்திகளை வடிவமைக்கும் பொறுப்பை ஏற்று செயல்படுத்தியவர் லட்சுமி.

இந்த திருமண பந்தம் குறித்து நாராயணமூர்த்தி கூறுகையில், லட்சுமி அருமையான பெண். இந்த திருமணம் எங்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

திருமணத்தை எப்போது நடத்துவது என்பதை ரோஹனும், லட்சுமியும் பேசி முடிவெடுக்கட்டும் என விட்டு விட்டேன். இது அவர்களது பொறுப்பு. அவர்கள் முதிர்ச்சியானவர்கள், எனவே அவர்களது முடிவுக்கே விட்டு விட்டேன் என்றார் நாராயணமூர்த்தி.

தற்போது ரோஹன் சென்னைக்கு வந்துள்ளார். லட்சுமி குடும்பத்தினரை பார்ப்பதற்காக அவர் சென்னையில் முகாமிட்டுள்ளார்.

Posted in Labels: , | 0 comments

ரூ 8000 - ஒரு சேர் வாடகை

டெல்லி: காமன்வெல்த் போட்டிகளில் விளையாடியுள்ள ஊழல், முறைகேடுகள் புற்றீசல் போல கிளம்பத் தொடங்கியுள்ள நிலையில் போட்டி ஒருங்கிணைப்புக் குழு பணத்தை வீண் விரயம் செய்திருக்கும் செயல்களும் வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன.

இதுவரை எங்குமே கேள்விப்பட்டிராத வகையில் பல பொருட்களை மிக மிக உயர்ந்த வாடகைக்கு எடுத்துள்ளனர் காமன்வெல்த் போட்டி அமைப்பாளர்கள்.

உதாரணமாக, உடற்பயிற்சி செய்ய உதவும் டிரெட்மில் கருவிகளை கிட்டத்தட்ட ரூ. 10 லட்சத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனராம். அதாவது ஒரு டிரெட் மில்லின் வாடகை கட்டணம் இது. இப்படி பல டிரெட்மில்களை ஒன்றரை மாதத்திற்கு வாடக்கைக்கு எடுத்துள்ளனர்.

அதேபோல ஒரு ரெப்ரிஜிரேட்டர் வாடகை ரூ. 42,000 என பல ரெப்ரிஜிரேட்டர்களை எடுத்துள்ளனர். இது 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபிரிட்ஜ் ஆகும்.

லண்டனில் உள்ள புகழ் பெற்ற ஹாரோட்ஸ் கடைக்குப் போனால் ஒரு டிரெட்மில் அதிகபட்சம் ரூ. 7 லட்சத்திற்கு வாங்க முடியும். இந்தியாவில் ரூ. 1 லட்சத்திற்கும் சற்று கூடுதலான விலைதான் இருக்கும். ஆனால் பல லட்சம ரூபாய் பணத்தை தேவையல்லாமல் வாடகைக்கு என்ற பெயரில் விரயமாக்கியுள்ளனர்.

அதேபோல இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் கல்மாடி உள்ளிட்டோருக்காக சேர்களை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஒரு சேருக்கான வாடகைத் தொகை ரூ. 8 ஆயிரமாம். இவ்வளவு வாடகை கொடுத்து எடுக்கப்படும் சேரில்தான் கல்மாடி உள்ளிட்டோர் அமர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் இதெல்லாம் நிச்சயம் தேவை. அப்போதுதான் சர்வதேச தரம் இருக்கும் என்கிறார்கள் போட்டி அமைப்பாளர்கள்.

Posted in Labels: , | 1 comments

அதிகரிக்கும் (ஆ)பாச கொலைகள்!

நாடு முழுக்க தற்போது பரபர�பாக பேசபடும் விஷயம் கவுரவக் கொலைகள். `உயிர் ஒரு பொருட்டே அல்ல; ஜாதி மற்றும் குடும்ப கவுரவம்தான் முக்கியம்` என்பதை அந்த கொலைகள் தெள்ளத்தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன. வட இந்தியாவில் இவை அதிகம் நடக்கின்றன.


குறிபிட்ட ஒரு ஜாதியைச் சேர்ந்த ஒருவரது மகள், அதன் உட் பிரிவைச் சேர்ந்த இளைஞனை காதலித்து திருமணம் செய்து கொ�டால், மகள் என்றும் பாராமல் இருவரை�மே கொலை செய்து விடுகின்றனர். ஏன் என்றால் அதன் மரபுபடி அவர்கள் சகோதர சகோதரிகள் என்று அர்த்தமாம். அவர்களது திருமணத்தை ஆசீர்வதித்து வரவேற்றால் அவமானம், கவுரவக் குறைச்சல் ஏற்படுவதாக அவர்கள் கருதுகின்றனர். அதன்தொடர்ச்சியாக நட�பதுதான் கவுரவக் கொலைகள்.

தமிழ்நாட்டிலும் வேறுவிதமாக இந்த கவுரவக் கொலை கலாசாரம் இ�போது பரவி வருகிறது. இங்கே ஜாதி வெறிக்காக அல்லாமல் காதல், கள்ளக்காதல் பிரச்சினையால் ஏற்படும் அவமானத்தை துடை�பதாக கருதி கவுரவ கொலை செய்கிறார்கள் சில இடங்களில் இதன் பின்னணியாக சாதி�ம் இருக்கிறது.

தமிழகத்தில் கோவில்கள் நிறைந்த நகரத்தைச் சேர்ந்தவர்கள் அந்த தம்பதியர். இருவரும் ஒரே ஜாதிதான். பெற்றோர் பார்த்து முடித்த திருமணம்தான். அதுவரை, திருமண வாழ்க்கை நன்றாகவே சென்றது என்பதற்கு அடையாளமாக ஒன்றரை வயதில் ஒரு குழந்தை.

வர்த்தக நகரம் ஒன்றுக்கு வேலை செய்ய சென்ற இடத்தில் மனைவியானவள், தன்னுடன் வேலை பார்த்த இன்னொரு இளைஞனுடன் காதல் கொ�டு... கணவனை�ம், குழந்தையை�ம் மறந்து அவனுடன் சென்றுவிட்டாள். மனைவியை பழி வாங்க நினைத்த கணவன், `நம் குழந்தைக்காக - அதன் எதிர்காலத்துக்காக உன்னை மன்னித்துவிட்டேன்' என்று கூறி, அடுத்தவனுடன் இருந்த மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தான். அன்று இரவே அவளைக் கொன்று, அதை தற்கொலையாக்க அவளை எரித்தும் விட்டான்.

- மனைவி அடுத்தவனுடன் சென்றுவிட்டாள்; அதனால் தனது கவுரவம் போய்விட்டது என்று கருதிய ஒரு கணவன் செய்த கொலை இது.

ASin drama. அசின் இனி பிசின் ?

கோவை: தமிழ் இனத்தை அழித்து வரும் சிங்கள அரசின் விளம்பரதாரியாக மாறி விட்டார் நடிகை ஆசின். அவருக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியது அவசியம் என தமிழின பாதுகாப்பு கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கம் ஆகியவை அறிவித்துள்ளன.

இதுதொடர்பாக இந்த அமைப்புகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் துண்டு பிரசுரங்களாக வெளியிடப்பட்டன.


அதில்,

தமிழின அழிப்பில் ஈடுபட்டுள்ள சிங்கள அரசின் விளம்பரதாரியாக ஆசின் மாறியுள்ளார்.

இலங்கையில் படப்பிடிப்புக்கு சென்றது மட்டுமல்லாமல் முள்வேலியில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை ராஜபக்சே மனைவியுடன் சென்று சந்தித்து சிங்கள அரசை உயர்வானதாக சித்தரித்து உள்ளார்.

தமிழ் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அசின் ராஜபக்சே அரசை பெருந்தன்மை கொண்டது போல் காட்ட முயற்சிப்பது கண்டிக்கத் தக்கது. அசினுக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டியது அவசியம்.

அவர் விளம்பரப்படுத்திய பொருட்களையெல்லாம் பயன்படுத்தாமல் புறக்கணிக்க வேண்டும். தமிழ் திரையுலகமும் அசினை ஒதுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in Labels: | 0 comments

லூதியானா கவர்ச்சி புயல்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோயின்களுக்கு ஒரு எச்சரிக்கை. லூதியானாவிலிருந்து கிளம்பியுள்ள ஒரு கவர்ச்சிப் புயல், அவர்களது அடிமட்டத்தை தகர்த்து அவர்களது இடத்தை ஆக்கிரமிக்க வந்து இறங்கியுள்ளது.


பெயரைக் கேட்டால் ஏதோ தவசி என்று பழைய காலத்துப் பெயர் போல தோன்றும். ஆனால் தப்சி பன்னு, படா அழகாக இருக்கிறார். இவ்ளோ அழகாக இருக்கும் இவர் மாடல் அழகியாக இருக்காமல் போய் விடுவாரா?, தப்சியும் ஒரு மாடல் அழகிதான்.

மாடல் அழகியாக இருந்தால் ஏதாவது அழகிப் போட்டியில் கலந்து கொள்ளாமல் இருப்பார்களா?, தப்சியும் அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்தான். பேன்டலூன் பெமினா மிஸ் பளிச் முகம், சபி பெமினா மிஸ் அழகிய தோல் என இரு பட்டங்களைப் பெற்றவர் இந்த அழகு தப்சி.

அழகான பொண்ணாக மட்டும் இருக்காமல், அருமையாக படிக்கவு்ம் கூடியவராம் தப்சி. சாப்ட்வேர் என்ஜீனியரிங் படிப்பை முடித்துள்ள தப்சி, அப்படியே மாடலிங் மூலமாக இப்போது சினிமாவுக்கு வந்தே விட்டார்.

தெலுங்குதான் இவர் முதலில் நுழைந்த திரையுலகம். அங்கு இவர் நடித்த ஜும்மன்டி நாதம் ஹிட் ஆகியுள்ளதால் தப்சியும் ரசிகர்களிடையே ஹீட்டைக் கிளப்பி விட்டு விட்டார்.

தெலுங்கில் தேறியவர் தமிழுக்கும் சேவை செய்ய வேண்டுமல்லவா. அந்த இலக்கணப்படி தமிழுக்கும் வந்துள்ளார். ஒன்றுக்கு இரண்டு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தப்சி. ஆடுகளம் படத்தில் தனுஷுக்கு ஜோடியாகவும், வந்தேன் வென்றேன் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாகவும் பட்டையைக் கிளப்பவுள்ளார்.

இதுதவிர தெலுங்கிலும் பல படங்கள் ஓடி வர ஆரம்பித்துள்ளதாம். அங்குள்ள முன்னணி ஹீரோக்களுடன் தப்சியை புக் செய்ய ஆரம்பித்திருப்பதால் இலியானா அன் கோவினர் சற்று கிலியான முகங்களுடன் வலம் வருகின்றனராம்.

அப்ப தப்சியால் தமிழில் யாருக்கு ஆபத்து வரும்?. இப்போதைக்கு தமன்னாவுக்குத்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்...!

ஒபாமாவை முந்திய காகா

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை ஓவர்டேக் செய்து முந்தியுள்ளார் லேடி காகா.
பேஸ்புக் பின்பற்றுவோர் எண்ணிக்கையில்தான் ஒபாமாவை முந்தியுள்ளார் லேடி காகா.

லேடி காகாவின் குரல் வளத்துக்கு மட்டுமல்லாமல் அவரது கவர்ச்சி கட்டுக்கும் நிறைய ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில், பேஸ்புக் பின்பற்றுவோர் எண்ணிக்கையில், ஒபாமாவை விட கூடுதலான ரசிகர்களைப் பெற்றுள்ளார் காகா.

காகாவின் ரசிகர் எண்ணிக்கை 99,40,462 ஆகும். ஒபாமாவுக்கு உள்ள ரசிகர்கள் 94,44,942. ட்விட்டரைப் பொறுத்தவரை, காகாவுக்கு 47,62,938 பின்பற்றுவோர் உள்ளனர். ஒபாமாவைப் பின்பற்றுவோர் 44,22,923 பேராகும்.

பேஸ்புக்கில் ஒரு கோடி ரசிகர்களைப் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை விரைவில் காகா பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனக்கு பேராதரவு தந்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பேஸ்புக்கில் ஒரு வீடியோவை இணைத்துள்ளார் காகா. எனது பேஸ்புக்கில் இணையுங்கள், உங்களை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றும் டச்சிங்காக கூறியுள்ளார்.

Posted in Labels: | 0 comments

தமிழுக்கு வயது 20000

கோவை: 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி தமிழ் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறியுள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி நேற்று செம்மொழித் தகுதி என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், தொல்காப்பியத்தின் தொடை வகைகள் மொத்தம் 13 ஆயிரத்து 699. இதில் செந்தொடைகள் என அழைக்கப்படும் தொடைகள் 8,556. இந்த தொடை வகைகளில் கூறப்படும் தமிழ் மொழியின் காலம் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதனால்தான் தமிழ் மொழி 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று தொல்காப்பியரின் சான்றுகள் கூறுகிறது. இலக்கியம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்றால், மொழியின் வயது 20 ஆயிரம் ஆண்டாக இருக்க வேண்டும் என்றே கருதத் தோன்றுகிறது என்றார்.

Posted in Labels: | 0 comments

இந்திய கல்வெட்டுகளில் 60% தமிழே

கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் பேசிய கருணாநிதி வெளியிட்ட அறிவிப்புகள்:

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலத்தில் தமிழகத்தை சூழலியல் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என 5 வகை நிலங்களாகப் பிரித்திருந்தனர். ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு நிலப் பகுதிகள், தாவரங்கள், விலங்குகளைக் கொண்டவை.

ஐந்திணை நில வகை பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள்:

இந்த அமைப்பு இயற்கை வளம், உணவு உத்தரவாதம், உடல் நலம் காத்தலுக்கும், சித்த மருத்துவத்துக்கும் பேருதவியாக இருந்து வந்துள்ளது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை 2010ம் ஆண்டை உலக உயிரியல் பன்மை (bio diversity) ஆண்டாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் நினைவாக, தமிழக அரசின் சார்பில் ஐந்திணை நில வகைகளில் பாரம்பரிய மரபணுப் பூங்காக்கள் அமைக்கப்படும். வேளாண் விஞ்ஞானி டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் இதன் அமைப்பாளராக இருப்பார்.

இலங்கை விவகாரம்:

இலங்கையில் போர் முடிவடைந்த பிறகும் தமிழர்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பப்படாமல் முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் மறு குடியமர்வுக்கும், அந்த நாட்டுத் தமிழர்கள் தமது மொழி, இன உரிமையை நிலைநாட்டிக் கொள்ளவும் நீண்ட காலமாகக் கோரி வரும் அரசியல் தீர்வு இதுவரை காணப்படவில்லை.

மேலும், அவர்களுக்கு அவ்வப்போது அளிக்கப்படும் உறுதிமொழிகள் முறையாக நிறைவேற்றப்படாதது உலகத் தமிழர்களுக்கு வேதனையை அளிக்கிறது. எனவே இலங்கைத் தமிழர் பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசை இந்தியா வலியுறுத்த வேண்டும்.

தமிழ் வளர்ச்சிக்கு ரூ.100 கோடி:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடர்ச்சியாக, தமிழ் வளர்ச்சிக்கென்று தனியாக தமிழக அரசு சார்பில் ரூ.100 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்படும்.

தமிழை முதலில் ஆட்சி மொழியாக்க வேண்டும்:

மத்தியில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும் என்பது தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கை. மத்திய அரசு அனைத்து மாநில மொழிகளையும் ஆட்சி மொழியாக்க கால தாமதம் ஏற்படும் என்பதால் செம்மொழியான தமிழை முதல் கட்டமாக ஆட்சி மொழியாக்க வேண்டும்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக அங்கீகரிக்கக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே உயர் நீதிமன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக மத்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்.

சம்ஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஆய்வுக்கும் வழங்கப்படுவதைப் போன்று தமிழின் வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தேவையான அளவு மானியத்தை மத்திய அரசு வழங்க வேண்டும்.

இந்திய கல்வெட்டுகளில் 60% தமிழே:

நாட்டில் இதுவரை அனைத்து இந்திய மொழிகளிலும் சேர்த்து தோராயமாக ஒரு லட்சம் கல்வெட்டுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதில் குறைந்தது 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ்க் கல்வெட்டுகள். எனவே இதையும் இனி கண்டுபிடிக்கப்பட வேண்டிய கல்வெட்டுகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு மத்திய அரசு உருவாக்கத் திட்டமிட்டுள்ள இந்திய தேசிய கல்வெட்டியல் நிறுவனத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும்.

கடல் கொண்ட பூம்புகார் பகுதியையும், குமரிக் கண்டத்தையும் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சி செய்யத் தேவையான திட்டம் வகுத்து மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.

தமிழகத்தின் ஆட்சி மொழியாக, நிர்வாக மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் எனும் நீண்ட நாள் கனவு இன்னும் முழுமையாக நிறைவு பெறவில்லை. அதை நிறைவேற்ற அரசு அலுவலர்களும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

சிறந்த தமிழ் மென்பொருளுக்கு பூங்குன்றனார் விருது:

தமிழில் சிறந்த மென்பொருள் தயாரித்தவர்களுக்கு ஆண்டுதோறும் கணியன் பூங்குன்றனார் பெயரில் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் கூடிய விருது வழங்கப்படும்.

தமிழகத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக பாடத் திட்டங்களில் தமிழ்ச் செம்மொழி என்ற தலைப்பு அடுத்த கல்வியாண்டு முதல் இடம் பெற ஏற்பாடு செய்யப்படும்.

தமிழின் சிறந்த படைப்புகளை இந்திய மொழிகளிலும், ஐரோப்பிய, ஆசிய மொழிகளிலும் மொழிபெயர்த்து வெளியிடவும், பிற மொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்க்கவும், அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணினியியல், மருத்துவம் போன்ற அறிவியல் திறனை வளர்ப்பதற்குத் தேவையான நூல்களை பிற மொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார் கருணாநிதி.

Posted in Labels: | 0 comments

மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம்

கோவை: உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், இந்திய, தமிழக தமிழ் அறிஞர்களைக் கொண்டு மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்படும். இந்த அமைப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கோவையில் கடந்த 5 நாள்களாக நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிறைவு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:

உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், இந்திய, தமிழக தமிழ் அறிஞர்களைக் கொண்டு மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் அமைக்கப்படும்.

இந்த அமைப்பு குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும்.

மேலும் திராவிட மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் ஆகியவற்றைத் தொகுத்து நிரந்தரக் கண்காட்சி அமைக்கவும், தமிழ் மொழியின் அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கிய ஆவணக் காப்பகம் அமைத்து பராமரிக்கும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும்.

பல்வேறு தனித்தனித் தீவுகளைப் போல் இப்போது சிதறுண்டு கிடக்கும் தமிழ் ஆராய்ச்சி உலகத்தை ஒருங்கிணைக்கும் பணியையும், மொழி ஆராய்ச்சி, மொழித் தொண்டு போன்றவற்றில் தன்னலம் கருதாது செயல்படும் தமிழ் அறிஞர்களை உரிய முறையில் ஆதரித்து அவர்களைத் தமிழ் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் பணியையும் இந்தச் சங்கம் மேற்கொள்ளும்.

மேலும் உலகம் முழுவதும் உள்ள தமிழர் அறிஞர்களைப் பற்றிய விவரங்களைத் தொகுத்து கையேடு தயாரித்து வழங்குவதுடன், உலக அளவில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்பு கொள்ளும் பணியையும் தொல்காப்பியர் உலகத் தமிழ்ச் செம்மொழிச் சங்கம் மேற்கொள்ளும்.

Posted in Labels: | 0 comments

தமிழில் பெயர் பலகைகள் - இன்று கடைசி நாள்

சென்னை: தமிழில் வைக்கப்படாத பெயர்ப் பலகைகளை அகற்றும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் இன்று முதல் தொடங்கியுள்ளனர். மேயர் மா.சுப்ரமணியனே நேரடியாக களம் இறங்கி பெயர்ப் பலகைகளை அகற்றினார்.

தமிழிலிலேய வர்த்தக நிறுவனங்கள், சிறு வணிக நிறுவனங்களின் பெயர்கள் வைக்கப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி சமீபத்தில் அறிவித்திருந்தது. இது தொடர்பான பெயர்ப் பரிந்துரைப் பட்டியலையும் அது வியாபாரிகளுக்கு கொடுத்திருந்தது.

நேற்று வரை பெயர்ப் பலகைகளை மாற்றிக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை தமிழில் வைக்கப்படாத பெயர்ப் பலகைகளை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் இறங்கினர். மேயர் மா.சுப்ரமணியனே இதில் நேரடியாக ஈடுபட்டார்.

அண்ணா சாலையில்அதிகாரிகளுடன் வந்தஅவர் தமிழில் வைக்கப்படாத பெயர்ப பலகைகளை அகற்ற உத்தரவிட்டார்.

தமிழில் வைக்கப்படாத பெயர்ப் பலகைகள் அனைத்தும் அகற்றப்படும் எனவும் மேயர் அறிவித்துள்ளார்.

Posted in Labels: | 0 comments

செம்மொழி மாநாடு-கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்து விடுதலைப் புலிகள் பெயரில் இமெயில்

சென்னை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து தெரிவித்து விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைமைச் செயலகத்தின் பெயரில் இ மெயில் மூலம் வாழ்த்து அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் கருணாநிதி நன்றியும், மகிழ்ச்சியும் வெளியிட்டுள்ளார்.

இராமு.சுபன், இணைப்பாளர், தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் என்ற பெயரில் தமிழக அரசுக்கு அந்த இமெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தலைவர், துணைத் தலைவர்கள், தலைமைக் குழு, உலகத் தமிழ் செம்மொழி மாநாடு, தமிழ்நாடு என்ற முகவரியிடப்பட்டு 5 பக்கங்களைக் கொண்ட மெயிலாக அது உள்ளது.

அதில், உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டை, தமிழக அரசியலில் இருந்து பிரித்துப்பார்க்க விரும்புகிறோம். தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், இனத்தின் ஒற்றுமைக்கும் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என்பதால், அதனை வரவேற்கிறோம். மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் கருணாநிதி கருத்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

கோவையில் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வாழ்த்து வழங்கி-அந்த வாழ்த்தினூடே ஈழத்தமிழ் இனம் படுகின்ற இன்னல்களைச் சுட்டிக்காட்டி-அம்மக்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கும் பொறுப்பு-இச்செம்மொழி மாநாட்டினை நடத்துபவர்களுக்கு உண்டு என நம்புகிறோம் என்ற நம்பிக்கையையும் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும் வாய்ப்பைப் பெற்றேன்.

தாய்மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் இச்செம்மொழி மாநாட்டுக்கு எம் ஆதரவு உண்டு; இந்த மாநாடு தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு வழி கோலும் என்பதுடன் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் ஒன்றுபட்ட நிலைக்கு வலு சேர்க்கும் வகையில் அமைய வேண்டும் என்பதே எமது அவா என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

அந்த அறிக்கையில் எந்த எதிர்பார்ப்பும், குறிக்கோளும் ஒளி விடுகிறதோ அவற்றைக் காண வேண்டும், கண்டு களிக்க வேண்டும் என்ற ஆவலில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள அமைப்பின் கருத்துகளில் எள்ளளவு வேறுபாடும் எமக்கில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இலங்கையில் நடந்த அவலத்தை அருகில் இருந்த தமிழர்களால் தடுக்க முடியவில்லை என்ற வேதனை நமக்கு உண்டு என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பது தான் தேவையற்ற விவாதத்துக்கு இடமளித்துவிடுமோ என்று அஞ்சுகிறேன்.

சிங்கள ராணுவத்தால் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் என்று தமிழகம் முழுதும் கண்டன குரல்கள் எழுந்தபோது, "அவர்கள் யாரும் அப்பாவி மக்கள் அல்ல'' என்று கூறியதோடு, அவர்கள் சாகத்தான் வேண்டுமென்று சாபமிட்டவர்கள் யாரோடு கூடிக் குலவினார்கள், இன்னமும் குலவிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிக்கை வெளியிட்ட அந்த அமைப்பு ஒருக்கணம் எண்ணிப் பார்த்தால் உண்மைகள் ஆயிரம், ஒவ்வொன்றாக எதிர் நின்று சதி செய்த சண்டாளர்கள் யார் என்பதற்கு சாட்சியங்கள் கூறும்.

இந்த நேரத்தில் மேலும் அதை விளக்க விரும்பவில்லை. உண்மை எப்போதும் உறங்கி விடாது. ஒரு காலத்தில் உதறிக்கொண்டு எழுந்து பேசத்தான் போகிறது.

இதற்கிடையே எனக்குள்ள மகிழ்ச்சியெல்லாம், இங்கே சிலர் பாரதத்து காந்தாரி போலப் பதறித் துடித்து- ராமாயணத்து கூனி போல பட்டாபிஷேகத்தையே தடுத்து நிறுத்த பகிரங்கமாகவே அறிக்கை விட்டுக்கொண்டிருக்கும் போது, "இதோ தமிழர்கள் நாங்கள்; எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் எம் தாய் மொழியாம் தமிழ் மொழியின் எதிர்கால வளர்ச்சிக்காக நடத்தப்படவிருக்கும் செம்மொழி மாநாட்டிற்கு எம் ஆதரவு என்றும் உண்டு'' என்று அறிக்கை வெளியிட்டு-"தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும்-எம் இனத்தின் ஒற்றுமைக்கும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்'' என்று உளம் திறந்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருப்பது கண்டு மகிழ்ச்சியடைவதோடு அவர்களைப் பாராட்டுவதும் கடமை என கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Posted in Labels: , | 0 comments

மியான்மரில் ஒரு புரட்சித் தலைவி

ரங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சியாளர்களால் கடந்த 20 ஆண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜனநாயகப் போராளி ஆங் சான் சூ கியின் 65வது பிறந்த நாள் அவரது ஆதரவாளர்களாலும், உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக ஆர்வலர்களாலும் கொண்டாடப்பட்டது.

மியான்மரில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தி மக்களாட்சியை மலர செய்ய வேண்டும் என வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்திய அவர் 45வது வயதில் கைது செய்யப்பட்டார்.

முதலில் சிறையிலும் பின்னர் வீட்டுக் காவலிலும் அந்த ஜனநாயகப் பறவை கூண்டில் அடைக்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்துவிட்டன.

அவர் சிறையில் இருந்தாலும் மியான்மரில் சுதந்திரக் காற்றுக்காக அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

நேற்று சூ கிக்கு 65 வயது பிறந்த நாள். இதையடுத்து அவரது ராணுவத்தினரையும் மீறி நாடு முழுவதும் கேக் வெட்டி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் நாடு முழுவதும் அவரது பெயரால் மரங்களையும் நட்டனர்.

சூ கிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்துச் செய்தியும் அனுப்பியுள்ளார். அதில், சூ கியை விடுவிக்குமாறும் மியான்மர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனும் அவரை விடுவிக்குமாறு மியான்மர் ராணுவ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பிலிப்பைன்ஸ், மலேசியா, இலங்கையி்ல் உள்ள மியான்மர் தூதரக அலுவலகம் முன்பு பிறந்த நாள் கேக்குடன் சூ கியின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சூ கிக்கு 1991ம் ஆண்டுக்கான உலக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Posted in Labels: | 0 comments

தமிழ் செம்மொழி மாநாட்டுப் பாடல்

ரூ. 100 கோடியில் தொழில்நுட்பப் பூங்கா

சென்னை பல்கலைக்கழகம் சென்னை அருகே பாலவாக்கத்தில் ரூ. 100 கோடி மதிப்பிலான அறிவியல்,தொழில்நுட்பப் பூங்கா ஒன்றை அமைக்கவுள்ளது.

அதிக திறன் வெளிப்பாடுக்கான புதுமைகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று சென்னையில் நடந்தது. அதில் சென்னை பாலவாக்கத்தில் ரூ. 100 கோடி செலவில் தொழில்நுட்ப பூங்கா ஒன்றை சென்னை பல்கலைக்கழகம் அமைக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இக்கருத்தரங்கை மெட்ராஸ் மேனேஜ்மென்ட் அசோசியேஷன், சென்னை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வர்த்தகப் பிரிவு, கொன்ராட் அடேனர் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்தின. சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் திருவாசகம் கருத்தரங்கிற்கு தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசுகையில், புதுமை கண்டுபிடிப்பாளர்களை உருவாக்குவதில் சென்னை பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப வர்த்தகப் பிரிவின் பங்கு முதன்மையானது. இதுவரை 20 புதுமை கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கியுள்ளது. இனி வருங்காலத்தில் மேலும் பலரை உருவாக்கும் என்று திருவாசகம் கூறினார்.

சென்னை பாலவாக்கத்தில் ரூ. 100 கோடியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பூங்காவை சென்னை பல்கலைக்கழகம் அமைக்கவுள்ளது. அதற்குத் தேவையான நிலமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Posted in Labels: | 0 comments

பள்ளிகளில் எல்லோருக்கும் கட்டாய செக்ஸ் கல்வி

மாணவ, மாணவிகளுக்கு எளிய முறையில் ஆங்கில பயிற்சி அளிக்க பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட டி.வி.டிக்களில் ஆபாச படங்கள் இருந்ததால் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை அடுத்த எஸ்.புதூர் ஒன்றியத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது.

இந்த முகாமில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் சார்பாக மாணவ-மாணவிகளுக்கு எளிய முறையில் ஆங்கிலம் பயிற்சி கொடுப்பதற்காக டி.வி.டிகள் வழங்கப்பட்டன. இந்த டி.வி.டிக்களில் அனைவருக்கும் கல்வி இயக்க திட்டம் என்ற பெயரில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

இந்த டி.வி.டிக்ககளை எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கூடங்கள் அனைத்திலும் மாணவ -மாணவிகளுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் டி.வியில் போட்டுக் காண்பித்தனர்.

அப்போது அதில் திடீரென மலையாள கவர்ச்சி நடிகை மற்றும் பல்வேறு துணை நடிகைகள் நடித்த ஆபாசப் படங்கள் ஓடின. இதைப் பார்த்தது ஆசிரியர்களும், மாணவ, மாணவர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.

அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக ஒவ்வொரு பள்ளிக்கூடமாக சென்று இந்த ஆபாச டி.வி.டிக்களை திரும்பப் பெற்றனர்.

ஆசிரியர்களுக்கு தரப்பட்ட டி.வி.டி. கேசட்டுகளில் மலையாள ஆபாசப் பட 'பிட்டுகள்' எப்படி பதிவானது என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்லோருக்கும் கட்டாய பலியல(செக்ஸ்) கல்வி என்பது இதுதானா....

Posted in Labels: | 0 comments

தமிழனின் ரத்தத்தின் மீதுதான் இந்தியா - இலங்கை நல்லுறவு ஏற்பட வேண்டுமா ?

தமிழர்களின் ரத்தத்தின் மீதுதான் இந்தியா - இலங்கை நல்லுறவு ஏற்பட வேண்டுமா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்து தமிழர் பிரதிநிதிகள் வெளியேற்றப்பட்ட பிறகு, அந்நாட்டின் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டதால், அதனடிப்படையில் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண இயலாது.

இலங்கை தமிழர்களுக்கு சமவாய்ப்பு மறுக்கப்பட்டதுதான் இன்றைய அவல நிலைக்கு காரணம். அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும் வகையில், அரசியல் தீர்வு காணப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே சொல்வது சிங்களர்கள் ஏற்றுக்கொள்ளாததை எதையும் தமிழர்களுக்கு தரமுடியாது என்பதையே காட்டுகிறது.

ஆயுதம் ஏந்திப் போராடியும் கிடைக்காத சமத்துவம் இப்போது அனாதைகளாக இருக்கும் தமிழர்களுக்கு எப்படி கிடைக்கப்போகிறது. குறைந்த பட்சம் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி அழிக்கும் பிரச்சனைக்குக் கூட தீர்வு காணப்படவில்லை. தமிழர்களின் படுகொலை மீதுதான் இந்தியா - இலங்கை நல்லுறவு ஏற்பட வேண்டுமா?", என்று கூறியுள்ளார்.

Posted in Labels: , | 0 comments

ராஜபக்சே வருகை எதிர்ப்பு போராட்டம்-வைகோ, நெடுமாறன், திருமா, சீமான் கைது

சென்னை: ராஜபக்சே இந்தியா வருவதை எதிர்த்து தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவை நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.


சென்னையில் நடந்த போராட்டத்தின்போது இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பழ.நெடுமாறன், வைகோ, நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், இயக்குநர்கள் சீமான், டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் கைதாகினார்கள்.

ராஜபக்சே இன்று இந்தியா வருகிறார். 3 நாள் பயணமாக வரும் அவரைக் கண்டித்தும், அவரை வரவேற்கும் இந்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு கட்சிகள், தமிழர் அமைப்புகள் இன்று போராட்டத்தில் குதித்தன.

இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயககம் அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்திற்குப் போலீஸார் தடை விதித்திருந்தனர்.

இருப்பினும் தடையை மீறி பேரணியும், போராட்டமும் நடைபெறும் என வைகோ அறிவித்திருந்தார். அதன்படி இன்றுகாலை பத்து மணியளவில் மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே ஆயிரக்ணக்கான தொண்டர்கள் திரண்டனர்.

வைகோ, பழ. நெடுமாறன், நல்லகண்ணு, நடராஜன், சீமான், விஜய டி.ராஜேந்தர் உள்ளிட்டோர் தொண்டர்களிடையே பேசினர். இனப்படுகொலை செய்த கொடுங்கோலன் ராஜபக்சே ஒழிக என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை முழக்கினர்.

பின்னர் அங்கிருந்து இலங்கை துணைத் தூதரகம் நோக்கி பேரணியாக கிளம்பினர். இதையடுத்து அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கில் கைது

இதேபோல, சென்னையில் இலங்கைத் தூதரகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற புதிய தமிழகம்கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

ஓசூரில் போராட்டத்தில் ஈடுபட்ட பெரும் திரளான மதிமுக, தமிழ் தேசிய பொதுவுடமைக் கட்சியினர் கைது கைது செய்யப்பட்டனர்.


திருச்சியில் ராஜபக்சேவின் கொடும்பாவியை சிவசேனா கட்சியினர் தீவைத்து கொளுத்தினர். இதையடுத்து 13 தொண்டர்களை போலீஸார் கைது செய்துஅப்புறப்படுத்தினர்.

திருப்பூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. இதையடுத்து அக்கட்சித் தொண்டர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கரூரில் பல்வேறு தமிழர் அமைப்புகளைச் சேர்ந்த 150 பேர் ராஜபக்சேவை கண்டித்து கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தி கைதாகினர்.

நாமக்கல்லில் போலீஸ் தடையைமீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் ரயில் மறியல்

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

ரயில் நிலையம் முன்பு கருப்புக்கொடிகளுடன் திரண்ட அவர்கள் திடுதிடுவென ரயில் நிலையத்திற்குள் ஓடினர். இதை எதிர்பாராத போலீஸார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்துக் கைது செய்தனர்.

பல்வேறு கட்சிகள்சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருப்பதால் துணைத் தூதரகத்திற்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திலும் மதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தன. பல நூறு பேர் கைதானார்கள்.

43 தமிழ்ப் புலிகள் கைது

தேனியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பினர் 43 பேர்கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கையில், கருப்புக்கொடிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ குணசேகரன் உள்ளிட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாடுதுறையில் ராஜபக்சேவின் கொடும்பாவி தீவைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கைதாக மறுத்துச் சென்ற தமிழுணர்வாளர்கள்:

புதுக்கோட்டையில் நடந்த மறியல் போராட்டத்தின் போது ஒரு சுவாரஸ்யம் நடந்தது.

புதுக்கோட்டையில் நாம் தமிழர் இயக்கம், மதிமுக, சிபிஐ ஆகிய கட்சிகளூடன் மேலும் பல அமைப்பினர் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லையென்றாலும் தடையை மீறி பழைய பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்ட பேரணி நீதிமன்றம் முன்பு முடிந்தது.

நீதிமன்றத்துக்குள் நுழைந்து கோஷமிட முயன்றனர். அதற்குள் போலீசார் வந்து தடுத்து விட்டனர். இதனால் நீதிமன்ற வாசலில் நின்றே கோஷமிட்டுவிட்டு மாலையில் பெரும் போராடம் நடத்துவோம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

அவர்கள் போராட்டத்தை முடித்து விட்டு கலைந்து செல்லத் தொடங்கியபோது, அங்கு வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்மாறன், ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் எல்லோரும் தயவு செய்து வாருங்கள். உங்களை கைது செய்ய வேண்டும் என்று அழைத்தார்.

அதற்கு தமிழுணர்வாளர்கள், ஆர்ப்பாட்டம் செய்த போது கைது செய்ய வேண்டியது தானே. இப்பொழுது வந்து கூப்பிட்டால் எப்படி என்று வர மறுத்தார்கள்.

இதையடுத்து தயவு செய்து புரிந்துகொள்ளுங்கள்...வாருங்கள்..என்று தமிழ்மாறன் கூப்பிட்டார். அதற்கு அவர்களோ, அப்படி என்றால் மாலையில் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்யவிருக்கிறோம். அப்போது கைது செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றனர்.

சென்னையில் திருமாவளவன் கைது

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலைமையில் ராஜபக்சேவை எதிர்த்துப் போராட்டம் நடந்தது. இதையடுத்து அனைவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Read: In English
கொடும்பாவிக்கு செருப்படி

புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வாசலில் நாம் தமிழர் இயக்கத்தின் சிவா, கமல் ஆகியோர் ராஜபக்சே உருவமொம்மையை எரித்தனர். பின்னர் செருப்பால் அடித்தனர்.அவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரர் கைது செய்தார்.

Posted in Labels: | 0 comments

அதிபர் மனைவி கற்பம் யார் காரணம்?

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவின் 2வது மனைவி நோம்புமெலா டுலி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அதற்கு டுலியின் பாடிகார்டுதான் காரணம் என பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்துள்ளது.

சம்பந்தப்பட்ட பாடிகார்டு தற்போது உயிருடன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதால் பிரச்சினை பெரிதாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவுக்கு வயது 68 ஆகிறது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் சிசாகலே குமாலோ. 2வது மனைவிதான் டுலி. மூன்றாவது மனைவியின் பெயர் டொபோகா மடிபா. கடந்த ஆண்டுதான் மடிபாவை மணந்து கொண்டார் ஸூமா.

சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்தார் ஸூமா. அவருடன் 2வது மனைவியான 35 வயதான டுலியும் உடன் சென்றிருந்தார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையில்தான் டுலியின் கர்ப்பம் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது.

டுலிக்கு பாடிகார்டாக இருந்தவர் பின்டா தோமோ. இவர் மூலம்தான் டுலி கர்ப்பமடைந்துள்ளார் என்பதுதான் அந்த சர்ச்சை. இதனால் ஸூமா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். இருப்பினும் இதுகுறித்து வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார். இது உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கும், தனக்கும் சங்கடத்தை ஏற்படுத்த நடக்கும் சதி என்று அவர் கூறியுள்ளார்.

ஸூமா மூலம் டுலிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர் மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். ஸூமாவுக்கு தனது மூன்று மனைவியர் மூலம் 20 குழந்தைகள் உள்ளனர். தற்போது டுலிக்குப் பிறக்கப் போவது ஸூமாவின் 21வது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Labels: | 1 comments

ராணுவ அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்

டெல்லி: இந்திய ராணுவக் குழுவினருடன் இஸ்ரேல் சென்றபோது ராணுவ ஊழியர் ஒருவரின் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்தார் லெப்டினன்ட் ஜெனரல் பதவியில் உள்ள மூத்த அதிகாரி. இதையடுத்து அவரை இன்று ராஜினாமா செய்ய வைத்தார் ராணுவத் தளபதி.

இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவுக்குத் தலைமை தாங்கும் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.நந்தா தலைமையில் ஒரு குழு தங்கள் குடும்பத்தினருடன் கடந்த மாதம் இஸ்ரேல் சென்றது.

அப்போது தனது தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளரின் மனைவியிடம் செக்ஸ் டார்ச்சரில் ஈடுபட்டுள்ளார் நந்தா.

இது குறித்து அந்தப் பெண் ராணுவத் தளபதி வி.கே.சிங்கின் மனைவியும், ராணுவ வீரர்கள் மனைவியர் நல சங்கத்தின் தலைவியுமான பாரதி சிங்கிடம் புகார் தந்தார்.

இதையடுத்து விசாரணை நடத்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் , புகாரில் உண்மையிருப்பது உறுதியானதால் நந்தாவை உடனடியாக பதவி விலகுமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

செக்ஸ் தொல்லை தொடர்பான பிரச்சனைக்காக பதவியைவிட்டு தூக்கப்பட்டுள்ள இந்திய ராணுவத்தின் மிக மூத்த முதல் அதிகாரி இவர் தான்.

Posted in Labels: | 0 comments

நடிகர் டாக்டர் விஜய் ஒப்புகொண்டார்

சுறா படம் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் விஜய் ரூ 6 கோடியை நஷ்ட ஈடாக திரையரங்க உரிமையாளர்களுக்கு தர சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் சுறா படம் தோல்வி அடைந்ததாகவும் அதற்கு இழப்பீடு வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

சுறா படம் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், எனவே இந்த படத்துக்கு முதலீடு செய்த தொகையில் ரூ.6 கோடியை திருப்பித் தர வேண்டும் என்றும் இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம், செயற்குழு உறுப்பினர் திருச்சி ஸ்ரீதர் ஆகியோர் தெரிவித்தனர்.

ஆனால் விஜய் தரப்பில் எல்லாமே வெற்றி படங்கள் என்று கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே ரஜினி, விஜய டி.ராஜேந்தர் ஆகியோர் படங்கள் தோல்வியடைந்த போது திரையரங்க உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் நஷ்ட ஈடு கொடுத்தார்கள். அது போல் விஜய்யும் நஷ்டஈடு தர வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் பிடிவாதமாக உள்ளனர்.

இழப்பீடு தராவிட்டால் இன்னும் 3 வாரங்களில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம் என்றும் அறிவித்து உள்ளனர்.

விஜய் தற்போது காவல்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.அடுத்து வேலாயுதம் என்ற படத்திலும், இந்தியில் வெற்றிகரமாக ஓடிய 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார்.

நஷ்ட ஈடு வழங்காவிட்டில் இப்படங்களுக்கு எதிரான முடிவை செயற்குழுவில் எடுப்போம் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலும் விஜய் தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருவதாகவும் செயற்குழு கூட்டத்துக்கு முன் சுமூகமான முடிவு ஏற்படும் என்று நம்புவதாகவும், தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ரூ.6 கோடி வரை நஷ்ட ஈடு தர விஜய் சம்மதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Labels: , | 0 comments

ஒரே நாளில் ஒரு லட்சம்

டெல்லி: வங்கியின் ஏடிஎம் (டெபிட் கார்டுகள்) மூலம் இனி ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்க முடியும்.

அதேபோல டெபிட் கார்ட் மூலம் ரூ.1.25 லட்சம் வரை பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் ரூ.3 லட்சம் வரை பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு ஒரே நாளில் மாற்றும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த அளவு தொகையை எடுக்கவோ மாற்றவோ வாடிக்கையாளர்கள் வங்கிகள் பணி நேரத்திலேயே ஒரு வங்கிக் கிளையிலிருந்து மற்றொரு வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க நாளை முதல் (ஜூன் 1) நாளொன்றுக்கு டெபிட் அட்டைகள் மூலம் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் எடுக்கும் வசதியை எச்டிஎப்சி வங்கி அறிமுகம் செய்யவுள்ளது.

பிற வங்கிகளும் ஜூன் 1ம் தேதிக்குப் பிறகு அறிமுகப்படுத்த உள்ளன.

இப்போது ரூ.25 ஆயிரம் மட்டுமே டெபிட் கார்ட் மூலம் ஒரு நாளைக்கு எடுக்க முடியும். அதுவும் சில வங்கிகளில் இரு தவணைகளாக எடுக்க வேண்டும். இனி இந்த சிக்கல் வாடிக்கையாளர்களுக்கு இருக்காது.

அதே நேரம் வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுவது தவிர்க்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Posted in Labels: | 0 comments

QUIT SMOKING !!! (புகைப்பதை நிறுத்துவீர். )



Smoking is injurious for health



புகைப்பதை நிறுத்துவீர்.

Posted in Labels: | 0 comments

விஜய் படங்கள் தோல்வி : தியேட்டர் அதிபர்கள் அதிருப்தி!

தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் நடித்த 6 படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளது. இதனால் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை ஈடுகட்டும் வகையில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு விஜய் 35 சதவீதம் பணத்தை திருப்பி தர வேண்டும்.
ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், டி.ராஜேந்தர் போன்றவர்கள் தங்கள் படங்கள் தோல்வி அடைந்தபோது நஷ்ட ஈடு தந்திருக்கிறார்கள். அதுபோல் விஜய்யும் தர வேண்டும். இதை மனிதாபிமான அடிப்படையில், கேட்கிறோம். நஷ்டஈடு தராவிட்டால் ஜூன் மாதம் நடக்க உள்ள சங்க செயற்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட முடிவை எடுப்போம்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார். பேட்டியின்போது சங்க பிரதிநிதி ஸ்ரீதர் உடனிருந்தார்.

Posted in Labels: | 0 comments

இங்கு ரயில் வாடகைக்கு விடப்படும்

சென்னை: ஊட்டி மலை ரயிலை வாடகைக்கு எடுத்துச் செல்லும் புதிய முறை அமலாக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை போய் வர இந்த ரயிலை ரூ.50,000க்கு வாடகைக்கு எடுக்கலாம்.

இந்த ரயிலில் மொத்தம் 170 பேர் பயணம் செய்யலாம். ஊட்டி மலை ரயில் போக்குவரத்து 1908ம் ஆண்டு போக்குவரத்து தொடங்கியது. கடல் மட்டத்தில் இருந்து 6,159 அடி உயரத்தில் உள்ள இந்த மலைப் பாதையை உலக புராதன சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையத்தில் புறப்படும் இந்த ரயில் கல்லாறு, ஹில் குரோவ், குன்னூர், வெலிங்கடன், அரவங்காடு, கேத்தி, லவ்டேல் வழியாக ஊட்டியை சென்றடைகிறது.

46.16 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த மலைப் பாதையில் மொத்தம் 208 'ஹேர்பின்' வளைவுகள் உள்ளன. சிறியதும், பெரியதுமாக 250 பாலங்கள் உள்ளன. 16 குகைகள் வழியே இந்த ரயில் பயணிக்கிறது.

இந்த ரயிலல் 4 பெட்டிகளும், என்ஜினும் உள்ளன. 16 முதல் வகுப்பு இருக்கைகளும், 154 இரண்டாம் வகுப்பு இருக்கைகளும் உண்டு.

இந்த ரயிலை மொத்தமாக வாடகைக்கு விடும் திட்டத்தை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகமான (ஐ.ஆர்.சி.டி.சி.) அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து இதன் துணை பொது மேலாளர் (சுற்றுலா) ரவிக்குமார் கூறுகையில்,

ஊட்டி ரயிலை ரூ.25,000 செலுத்தி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை ஒரே நேரத்தில் 170 பேர் போகலாம். சமீபத்தில் வெளிநாட்டைச் சேர்ந்த 8 பேர் மட்டும் ரூ.25,000 செலுத்தி மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரை சென்றனர். ஊட்டி போய் வருவதற்கு ரூ.50,000 வசூலிக்கிறோம்.
ஊட்டியில் ஒருமணி நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்புவது என்றால் அதற்கு கட்டணம் இல்லை. அதற்கு மேல் ஊட்டியில் மலை ரயில் நிறுத்தப்பட்டால் ஒரு பெட்டிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.600 வீதம் காத்திருப்பு கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.


Posted in Labels: | 0 comments

கஸ்டமர் கேர் கலாசல்

கலாசல் 1


கலாசல் 2


கலாசல் 3



இந்த பதிவு மகிழ்விக்க மட்டுமே.

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை.

SSLC results in naalyedu

Tamil nadu HSC  and SSLC resutls will be on naayedu soon


useful links
SSLC தேர்வு முடிவுகள் உங்கள் பாக்கட்டில்
http://www.dinamalar.com/register.asp

HSC results
http://tnresults.nic.in/hsc/hsc.htm
http://results.oneindia.in/tn/hsc-2010/

SSLC results
http://results.oneindia.in/tn/sslc-2010/
http://tnresults.nic.in/

"லைலா" பெயர் உருவான கதை.

யார் இந்த பெயர் சுட்டுபவர்கள் ?





புதுடில்லி : தற்போது வங்கக் கடலில் உருவாகியுள்ள புயலுக்கு, "லைலா' என்ற பெயர் எப்படி வந்தது என்பது குறித்த சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளன.


இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004ம் ஆண்டில் உருவானது. இந்திய வானிலை ஆய்வு மையம், இந்தப் பிராந்தியத்தில் உள்ள சிறப்பு வாய்ந்த வானிலை ஆய்வு மையம் என்பதால், இந்தியா தவிர வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் இலங்கைக்கும் வானிலை தொடர்பான முன் அறிவிப்புகளை வழங்கும். அப்படி வானிலை பற்றிய தகவல்களைத் தரும் போது, புயல்களுக்கு என்னென்ன பெயர்கள் வைக்கலாம் என்பதை தெரிவிக் கும்படி, அந்த நாடுகளை கேட் டது. பின்னர் உறுப்பினர் நாடுகள் தெரிவித்த பெயர்களை அகர வரிசைப்படி பட்டியலிட்டுள் ளது.

இந்த பெயர்கள் சிறிய வார்த்தை கொண்டதாவும், உச்சரிப்பதற்கு எளிதாகவும் இருக்க வேண்டும். பண்பாட்டிற்கு எதிரானதாகவோ, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவோ இருக்கக் கூடாது. அப்படி உறுப்பினர் நாடுகள் தெரிவித்த 64 பெயர்களில், 22 பெயர்கள் இதுவரை உருவான புயல்களுக்கு சூட்டப்பட்டுள் ளன. தற்போதைய புயலுக்கு சூட் டப்பட்டுள்ள, "லைலா' என்ற பெயர் பாகிஸ்தானால், தெரிவிக்கப்பட்ட பெயர். அடுத்து ஒரு புயல் உருவானால், அதற்கு, "பந்து' என, பெயரிடப்படும். இந்தப் பெயரை இலங்கை அரசு பரிந்துரை செய் துள்ளது. மாலத்தீவு பரிந்துரைத்த "அய்லா', இந்தியா பரிந்துரைத்த "பிஜ்லி' ஆகிய பெயர்கள், கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல்களுக்கு வைக்கப்பட்டன.

புயல்களுக்கு பெயரிடும் வழக்கம் 20ம் நூற் றாண்டின் முற்பகுதியிலும் இருந்துள்ளது. அப்போது, ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர், தங்களுக்கு பிடிக்காத அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். அமெரிக்காவில் 1954ம் ஆண்டில் புயல்களுக்கு பெயர் சூட்டும் நடைமுறை வந்துள்ளது. வானிலை ஆய்வு மையங்கள் பல விதமான பெயர்களைச் சூட்டி குழப்பம் உண்டாக்குவதை தடுக்கவும், இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. லைலா என்றால், கருங்கூந்தல் அழகி என்று பெயர் அல்லது பாரசீக இரவு என, அர்த்தமாகும். இவ்வாறு வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறினார்.

உற்பத்தி அதிகரிப்பு !.. தடை குறைப்பு !.. கட்டணம் உயர்வு !...

நெல்லை: தமிழகத்தில் காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவு அதிகரித்திருப்பதால் மின் தடை நேர அளவை மின்வாரியம் குறைத்துள்ளது.

தமிழகத்தில் அனல்மின் நிலையம், நீர் மின் நிலையம், காற்றாலை போன்றவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மின் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் தற்போது கோடை காலம் என்பதால் மின்தேவை வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.

ஏசி பயன்பாடும் அதிகரித்துள்ளதால் மின் தேவையை பூர்த்தி செய்வதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. அதோடு நீர்மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை மூலம் மின் உற்பத்தி கணிசமாக குறைந்தது. இதனால் தமிழகம் முழுவதும் சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 1 நாளைக்கு மூன்று மணி நேரம் மின்தடையை கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அரசு செயல்படுத்தி வருகிறது. இரண்டு மாதமாக வெயிலின் உக்கிரம் அதிகமாக இருக்கும் நிலையில் மின்தடை அதிகமாக இருந்ததால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் தற்போது காற்றாலை மூலம் மின்உற்பத்தி அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் மின்வாரிய அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் அக்னி வெயில் இன்னும் நான்கு நாளில் முடியப் போகிற நிலையில் மாநிலம் முழுவதும் பரவலாக நல்ல காற்று வீசதுவங்கியுள்ளது.

காற்று அதிகமாக வீச துவங்கியிருப்பதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதுவும் நேற்று காற்றாலை மூலம் 1,800 மெகாவாட் மின் உற்பத்தி ஆனது. இதே நிலை தொடரும் வாய்ப்பு இருப்பதாக மி்ன்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் மின்தடை நேரம் 3 மணி நேரத்தில் இருந்து 1 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஒரு மணி நேரம்தான் நேற்று மின்தடை இருந்ததாக மின்வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதே நிலை தொடரும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மின் கட்டணம் உயர்கிறது:

இதற்கிடையே எரிவாயு விலை உயர்வு காரணமாக மத்திய அரசு வழங்கி வரும் மின்சாரத்துக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1 உயர்கிறது.

மத்திய அரசு நிறுவனங்களான ஓ.என்.ஜி.சி, ஆயில் இந்தியா ஆகியவை உற்பத்தி செய்யும் இயற்கை எரிவாயுவின் விலை 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது 1,000 கியூபிக் மீட்டர் எரிவாயுவின் விலை ரூ.3,200ல் இருந்து ரூ.6,818 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசின் பல மின் உற்பத்தி நிறுவனங்கள் இந்த எரிவாயுவை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்கின்றன. எனவே, மத்திய அரசு வழங்கும் மின்சாரத்துக்கான கட்டணம் யூனிட்டுக்கு ரூ.1 வரை உயர்த்தப்படும் என்று மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷின்டே கூறியுள்ளார்.

அதே போல இந்த மின் கட்டண உயர்வால் உர உற்பத்தி நிறுவனங்களின் செலவும் அதிகரிக்கும் என்பதால், உரங்களின் விலையும் அதிகரிக்கலாம் என்று தெரிகிறது.

Posted in Labels: | 0 comments

உயிரோவியம்

Posted in Labels: | 0 comments
Related Posts Plugin for WordPress, Blogger...