அமிதாப், ஷாரூக் கானுக்கு தபால்தலை!- இலங்கை ஏற்பாடு

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களின் தபால் தலைகள் இலங்கையில் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அபிதாப் பச்சன், ஷாருக்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய்க்கு தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

இந்திய நடிகர் நடிகைகளுக்காக இலங்கையில் தபால் தலை வெளியிடப்படுவது இதுவே முதல் முறை.

ஜூன் மாதம் இலங்கை தலைநகர் கொழும்பில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்த தபால் தலைகள் வெளியிடப்படும்.

இந்த விழாவில் அமிதாப் கலந்து கொள்வது சந்தேகத்துக்கிடமாக உள்ள நிலையில், இந்த தபால் தலை வெளியீடு பற்றி தகவல் வெளியிட்டுள்ளது இலங்கை அரசு.

வன்னி அழிப்பின் ஓராண்டினை மிகப்பெரும் விழாக்களாக மே 18 அன்று நாடெங்கும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெற வேண்டும் என்று கோத்தபய ராஜபக்‌சே உத்தரவிட்டுள்ளார். அதன் விளைவாக பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில் அமிதாப் பச்சன் கலந்து கொள்ளும் விழா, தமிழக சின்னத்திரை கலந்துகொள்ளும் இசை நிகழ்ச்சி ஆகியவையும் அடக்கம்.

இலங்கையில் நடக்கும் இந்த விழாவில் கலந்து கொள்ளக்கூடாது என்று திருமாவளவன், வைகோ, சீமான், நெடுமாறன் மற்றும் தமிழின உணர்வாளர்கள் கோரிக்கை வைத்ததையடுத்து அமிதாப் மற்றும் தமிழக சின்னத்திரை கலைஞர்கள் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர்.

இந்நிலையில் அமிதாப் மற்றும் ஷாருக்கானுக்கு இலங்கையில் தபால் தலைகள் வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





T பசங்க உருபுடவே   மாட்டானுங்க .. 


பிகாசவின் ஓவியம் 106 மில்லியன் டாலருக்கு விற்பனை

வாஷிங்டன்: பிக்காஷோவின் ஓவியமொன்று 106 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போனதன் மூலம் புதிய சாதனை படைத்துள்ளது.

கிறீன் லீவ்ஸ் அன்ட் பஸ்ட் என அழைக்கப்படும் 1932 இல் வரையப்பட்ட இந் நிர்வாண ஓவியம் நியூயோர்க்கிலுள்ள கிறிஸ்டி ஏல விற்பனை நிலையத்தில் ஏலத்தில் விடப்பட்டது. இந்த ஓவியம் 1950 இலிருந்து மறைந்த ஓவிய சேகரிப்பாளர்களான பிரான்சிஸ் மற்றும் சிட்னி புரோடிக்கு சொந்தமானதாக இருந்தது.

இந்நிலையில் தொலைபேசி மூலம் கலந்து கொண்ட போட்டியாளரொருவர் இந்த ஓவியத்தை ஏலத்தில் எடுத்தார்.

இது 106 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதன் மூலம் பெப்ரவரியில் 104.3 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போன ஓவியத்தின் சாதனையை முறியடித்துள்ளது.

இந்த ஓவியம் 7090 மில்லியன் டொலர்களுக்கு ஏலம் போகுமென எதிர்பார்க்கப்பட்டதாக ஏல விற்பனை நிலையத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

பெரிய தொகையொன்றுக்கு இந்த ஓவியம் ஏலத்தில் எடுக்கப்பட்டமையானது உலகளாவிய நிதிநெருக்கடியிலிருந்து கலையுலகம் மீண்டு வருகிறது என்பதற்கான அறிகுறியென அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

பி.பி.சி.

காதலில் சொதப்புவது எப்படி?



நன்றி கலைஞர் டிவி .

Posted in Labels: , | 0 comments

கோவையில் 9ம் வகுப்பு மாணவி ஓவியம் தீட்டி சாதனை முயற்சி

கோவை : கோவையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி 300 மீ.,ஓவியம் தீட்டி, 'கின்னஸ்' மற்றும் 'லிம்கா' சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.'யுவபாரதி பப்ளிக் பள்ளி' மாணவி பாலசவுந்தர்ய லட்சுமி(13)யின் சாதனை முயற்சியை தடாகம் ரோட்டிலுள்ள, சவுடாம்பிகை அம்மன் திருமண மண்டபத்தில், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் நேற்று துவக்கி வைத்தார்.


மாணவி பாலசவுந்தர்யலட்சுமி கூறியதாவது:எனது பெற்றோர், மசாலா பொடி தயாரிக்கும் நிறுவனம் நடத்துகின்றனர். பல்வேறு ஓவியப்போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். ஓவியம் வரைதலில் சாதனை படைக்க கோவை, தடாகம் ரோட்டிலுள்ள சவுடாம்பிகை அம்மன் திருமண மண்டபத்தில் முயற்சி மேற்கொண் டுள்ளேன். சார்ட் பேப்ரில் 300 மீ., நீளத்தில் 'கடல்சார் உயிரினங்கள்' என்ற தலைப்பில் மூன்று நாட்கள், தினமும் காலை 6.00 முதல் இரவு 10.00 மணி வரை ஓவியம் தீட்டுவேன். நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் வீதம் மொத்தம் 30 நிமிட இடைவேளை எடுத்துக் கொள்வேன். 'கின்னஸ்' மற்றும் 'லிம்கா' சாதனை புரிவதே எனது குறிக் கோள். எனது முயற்சி வெற்றி பெற்றால், 'உலகளவில் தனி நபர் வரைந்த மிக நீளமான ஓவியம்' என்ற சாதனை பெருமை கிடைக்கும்.இவ்வாறு, பாலசவுந்தர்ய லட்சுமி தெரிவித்தார்.

சாதனையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Related Posts Plugin for WordPress, Blogger...