தமிழுக்கு வயது 20000

கோவை: 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மொழி தமிழ் என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கூறியுள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி நேற்று செம்மொழித் தகுதி என்ற பெயரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், தொல்காப்பியத்தின் தொடை வகைகள் மொத்தம் 13 ஆயிரத்து 699. இதில் செந்தொடைகள் என அழைக்கப்படும் தொடைகள் 8,556. இந்த தொடை வகைகளில் கூறப்படும் தமிழ் மொழியின் காலம் 7000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

அதனால்தான் தமிழ் மொழி 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது என்று தொல்காப்பியரின் சான்றுகள் கூறுகிறது. இலக்கியம் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என்றால், மொழியின் வயது 20 ஆயிரம் ஆண்டாக இருக்க வேண்டும் என்றே கருதத் தோன்றுகிறது என்றார்.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...