IPL Final - ல் A R ரஹ்மான்

மும்பை: ஐபிஎல் இறுதிப் போட்டியின்போது ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்கஸ் - மும்பை இந்தியன் அணிகள் வரும் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

மும்பை டிஒய் பட்டேல் ஸ்டேடியத்தில் போட்டி துவங்குவதற்கு முன்பு கலைநிகழ்ச்சிகள் நடக்கவிருக்கின்றன. நிறைவு விழாவும் போட்டிக்கு முன்பே நடக்கிறது.

இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது. ரஹ்மானின் தமிழ் - இந்திப் பாடல்களை பிரபல பாடகர்கள் கலந்து கொண்டு பாடவிருக்கின்றனர்.

Posted in Labels: , , | 0 comments

புலி உறுமுது புலி உறுமுது

புலி உறுமுது இந்த பாடலுக்கு நம்ம அண்ணே கவுண்டமணி நடிச்சிருந்தா எப்படி இருக்குமுன்னு சின்ன கற்பனை...

Posted in Labels: , , | 0 comments

கர்ப்ப காலத்திலும் குஜாலாக இருக்கலாம்

கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?. முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும், அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது.

கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும், எது சரி, எது தவறு என்பது குறித்த குழப்பங்களும், பயமும் கர்ப்ப காலத்தின்போது செக்ஸ் உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று விடுகிறது.

கர்ப்ப காலத்தின்போது பெண்கள் மனதளவிலான மாற்றங்களை சந்திக்கிறார்கள். உணர்ச்சிவசப்பட்டவர்களாக பெரும்பாலான பெண்கள் அச்சமயத்தில் இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் போனாலோ அல்லது திருப்திக் குறைவு ஏற்பட்டாலோ அது அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது கருவில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும்.

கணவரிடமிருந்து போதிய ஒத்துழைப்பு, ஆதரவு கிடைக்காமல் போனால் அவர்களுக்குள் பெரும் ஏமாற்றம், எரிச்சல், பசியின்மை உள்ளிட்டவை ஏற்படும். இந்த எதிர்பார்ப்புகள் செக்ஸ் உறவை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

இந்த மாற்றங்களை, பாதிப்புகளை பெரும்பாலான ஆண்கள் புரிந்து கொள்வதில்லை. அல்லது நிவர்த்தி செய்ய முயலுவதில்லை. அதற்குப் பதிலாக சிம்பிளாக டாக்டரிடம் கூட்டிக் கொண்டு காட்டுவதையே விரும்புகிறார்கள்.

கர்ப்ப காலத்தின்போது தங்களது மனைவியரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ள ஆண்கள் முன்வர வேண்டும். செக்ஸ் உறவு வைத்துக் கொள்ள விரும்பினால் முறையான, இருவருக்கும் மனம் ஒத்த நேரத்தில் அதைச் செய்ய முயல வேண்டும். மாறாக மனைவியை அதற்காக வற்புறுத்துவது கூடாது.

கர்ப்ப காலத்தின்போது பெரும்பாலான பெண்களுக்கு கணவரின் அருகாமை மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. அது உடலுறவாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் முத்தம், அன்புப் பரிமாற்றங்கள், நெருக்கமாக இருப்பது ஆகியவற்றைத்தான் பெரும்பாலான பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அதேசமயத்தில் கர்ப்ப காலத்தின்போது தாராளமாக உடலுறவு வைத்துக் கொள்ளலாம்.

அதுபோன்ற தருணங்களில் வழக்கமான முறையில் (மேலே ஆண், கீழே பெண்) செக்ஸ் உறவை வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மாறாக உல்டா முறையில் செக்ஸ் உறவை பேணலாம். அல்லது இருவரும் அமர்ந்த நிலையில் கூட செக்ஸ் உறவை மேற்கொள்ளலாம். இதன் மூலம் வயிற்றின் மீது அழுத்தம் ஏற்படாது. இது வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு நல்லது. மேலும் இயக்கமும் கூட நிதானமாக, மெதுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

கர்ப்பம் தரித்து 6 முதல் 12 வாரம் வரை செக்ஸ் உறவைத் தவிர்ப்பது நல்லது. அந்த சமயத்தில் உறவு வைத்துக் கொண்டால், கரு கலைந்து போய் விட வாய்ப்பாகி விடும். அதேபோல கர்ப்ப காலத்தின் கடைசி இரண்டு மாதங்களின்போதும் செக்ஸ் உறவு கூடாது. இதனால், பனிக்குடம் உடைந்து குழந்தைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

அதேபோல கர்ப்ப காலத்தின் 4 முதல் 7வது மாதம் வரை தேவைப்பட்டால் மட்டுமே செக்ஸ் உறவைக் கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தின்போது வாய் வழி செக்ஸ் உறவு மற்றும் ஏனல் செக்ஸ் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு அந்த சமயத்தில் உடல் அழகும், பொலிவும் சற்று குறைவதும், குலைவதும் இயற்கை. இதனால் அந்த சமயத்தில் தங்களது பார்ட்னர்கள் மீதான ஈர்ப்பு ஆண்களுக்குக் குறைவதுண்டு. இந்த சமயத்தில்தான் பல ஆண்கள் வேறு பெண்களை நாடுவதும் நடக்கிறது. ஆனால் இது தவறு, இந்த சமயத்தில்தான் மனைவிக்குத் துணையாக, அவருக்கு ஆறுதலாக, பரிவை பொழிய வேண்டிய தருணம் என்பதை பல ஆண்கள் மறந்து விடுகிறார்கள்.

தாரத்தின் அழகை விட தாய்மையின் அழகைத்தான் அப்போது ஆண்கள் முக்கியத்துவம் தந்து பார்க்க வேண்டும், போஷிக்க வேண்டும். மனைவியின் மன ஓட்டங்களைப் புரிந்து கொண்டு அதற்கு நல்ல வடிகாலாக இருக்க வேண்டியது ஆண்களின் கடமை.

பாதுகாப்பான முறையில், பாதுகாப்பான தருணத்தில் உடல் உறவைக் கொள்ள முடியும் என்பதைப் புரிந்து கொண்டு அதுதொடர்பான அறிவை வளர்த்துக் கொண்டால் கர்ப்ப காலத்திலும் கூட தம்பதிகள் கலகலப்பாக இருக்க முடியும்

மறைவு கேமரா, மாற்று அறையில்

துணி கடைகளில் துணி மாற்று அறைகளில் மறைவு கேமரா க்கள் பொருத்தி கண்காணிப்பது மடத்தனம்.இது பெரிய பெரிய கடைகளிலும் (பிராண்டட்) நடக்கிறது என்பது தான் அவலம்.

இந்த கேமரா பொருத்தி இருப்பதை கண்டறிய ஒரு சில வழிகளில் இது ஒன்று.

அறைக்குள் செல்லும் முன் உங்கள் செல் போனில் இருந்து கால் செய்துபாருங்கள், சிக்னல் இருந்து கால் சரியாக சென்றால், அதை மாற்று அறைக்குள் சென்று கால் செய்துபாருங்கள் கால் செல்லவில்லை என்றால் அங்கே மறிவு கேமரா பொறுத்த பட்டிக்கு என்று அர்த்தம.

எனென்றால், கேமரா பொறுத்த பட்டிருந்தால் ,
optical interference ஆள் உங்கள் செல் போனில் இருந்து போகும் சிக்னல் பதிக்கப்படும்.

ஆனால் சாமியார் அறையில் இருந்தது விலை உயர்ந்த, மேலை நாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட கேமரா என்று கூரபடுகிறது,  அதனால் அதை சாமியாரால் கடுபிடிக்க முடியல போலும்.

மாற்று அறை மிக சிறியதாக இருக்கும் என்பதால் இந்த யுக்தி நிச்சயம் செயல் பெரும்.


சுதாரித்து கொள்ளுங்கள் தோழிகள் மற்றும் தோழர்களே..

ஜக்குபாயிஸ் , இது சரத்குமார் படமல்ல, சாப்ட்வேர் படம்

Jakkuboys - The Movie from Scube Productions on Vimeo.

நன்றி Scube productions.

Posted in Labels: , , | 1 comments

உலககோப்பை பரிசுத்தொகை 45 கோடி

துபாய் : உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இணைந்து வரும் 2011 ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இத்தொடரில் கோப்பை கைப்பற்றும் அணிக்கு, ரூ. 18 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த உலககோப்பை தொடரை (2007) விட இரண்டு மடங்கு அதிகம். கடந்த 2007 ம் ஆண்டு நடந்த தொடரில் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி, ரூ. 9 கோடி வென்றிருந்தது. வரும் 2011 ம் ஆண்டு நடக்க உள்ள தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 45 கோடி.

Posted in Labels: , | 0 comments

ரஜினி, கமல் விருந்தினர்கள் ? ராஜபக்சே அழைப்பு ...

ஒரு அழைப்பிதழைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் சூப்பர் ஸ்டாரும் உலகநாயகனும்.

இந்த அழைப்பை அனுப்பியிருப்பவர் இருவருக்கும் மிக மிக நெருக்கமான அமிதாப் பச்சன். அப்படியென்ன அழைப்பு அது?

இலங்கையில் நடக்கும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவுக்கு சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்டதுதான்.

கொழும்பில் அடுத்த சில தினங்களில் தொடங்கும் இந்த விருது விழாவில் ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என முன்னணியில் உள்ள நடிகர்கள் சிறப்புவிருந்தினர்களாகப் பங்கேற்க வேண்டும் என்றும் அவர்களை ராஜபக்சே மற்றும் திரைப்பட விழா குழுவினர் கவுரவிப்பார்கள் என்றும் கூறப்பட்டதாம்.

விஷயம் ரஜினியின் காதுக்குப் போனதும் கடுப்பாகிவிட்ட அவர், இதுகுறித்து பதில் சொல்லக்கூட விரும்பவில்லை என்று கூறி, அழைப்பிதழைத் தூக்கித் தூரப் போட்டுவிட்டாராம்.

கமல்ஹாஸனோ அழைப்பிதழைக் கண்டு கொள்ளவே இல்லையாம். இதையெல்லாம் ஏன் வாங்குகிறீர்கள் என்றும் கோபத்தைக் கொட்டினாராம்.

விஜய் உள்ளிட்ட சில நடிகர்களும் அழைப்பிதழை வாங்கவே மறுப்புத் தெரிவித்துள்ளனர். அதாவது மொத்த முன்னணித் தமிழ்த் திரையுலக நடிகர்களும் இந்த அழைப்பை புறக்கணித்து விட்டனர்.

ஆனால் இலங்கையும் தமிழ் சினிமாவும் எந்த அளவு பிரிக்க முடியாதது என்பதை உணர்ந்த விழாக்குழுவினர், இரண்டாம் கட்ட நடிகர்களுக்கு வலை வீசி வருகிறதாம்.

இன்னொரு முக்கியமான விஷயம் -

இந்த விழாவின் தலைவரான அமிதாப் பச்சனின் மகனும் மருமகளும் ஜோடியாக இந்த விழாவில் பங்கேற்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ராவணன் படத்தின் சிறப்புக் காட்சியை இந்த விழாவில் திரையிடப் போகிறார்க்களாம்.

இதற்காக மணிரத்னத்தை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ள அழைத்துள்ளனர். ஆனால் இலங்கைக்குப் போனால், இங்கு தன் மீது பெரும் மதிப்பு கொண்டுள்ள தமிழ் ரசிகர்களின் கோபத்தைச் சம்பாதிக்க வேண்டி வருமே என்ன செய்வது என இரண்டும்கெட்டான் மனதுடன் தவிக்கிறாராம் மணி ரத்னம்.

ராவணன் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உள்ளதே என்று தனக்கு நெருங்கியவர்களிடம் கமெண்ட் அடித்துள்ளார் மணி.

சரி... இலங்கை போவீங்களா மாட்டீங்களா..? உங்க ஸ்டைல்ல, ஒரே வார்த்தைல பதில் சொல்லுங்க மணி சார்...!

Posted in Labels: | 0 comments

நித்யானந்தா கைது

பெங்களூர்: இமாச்சல் பிரதேசத்தில் பதுங்கியிருந்த சாமியார் நித்தியான்நதா இன்று கைது செய்யப்பட்டார்.

அர்கி என்ற இடத்தில் பதுங்கியிருந்த அவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர். இந்தக் கைதுக்கு இமாச்சலப் பிரதேச போலீசாரும் உதவினர்.

அவரிடம் விசாரணை நடத்தி வரும் கர்நாடக போலீசார் அவரை பெங்களூர் அழைத்து வரவுள்ளனர்.

நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் இயங்கும் பெங்களூர் ஆசிரமத்தல் நடிகை ரஞ்சிதாவுடன் குஜாலில் ஈடுபட்டார் நித்யானந்தா. இது குறித்த வீடியோ வெளியானதையடுத்து கடந்த 45 நாட்களாக அவர் தலைமறைவாக இருந்தார்.

தலைமறைவாக இருந்தபடியே வீரப்பன ஸ்டைலில் வீடியோ பேட்டிகள் அளித்து வந்தார்.

அவர் மீது தமிழகத்திலும் கர்நாடகத்திலும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் பதிவான வழக்குகள் அனைத்தும் பெங்களூர் போலீசாருக்கு மாற்றப்பட்டுவிட்டன.

சமீபத்தில் தனது ஆசிரம தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாகவும் அவர் அறிவித்தார்.

இந்த வழக்குகளை விசாரித்து வரும் கர்நாடக சிஐடி போலீஸார் பிடுதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் சில வாரங்களுக்கு முன் ரெய்ட் நடத்தி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர். முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றிச் சென்றனர்.

மீண்டும் ரெய்ட்:

இந் நிலையில் நித்யானந்தாவின் ஆஸிரமத்தில் கர்நாடக சிஐடி போலீஸார் நேற்று மீண்டும் திடீர் சோதனை நடத்தினர்.

ஆஸிரம ஆவணங்களை பார்வையிட்ட அவர்கள் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர். பல மணி நேரம் சோதனையும் நடத்தினர்.

இந் நிலையில் முன் ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனு நீதிபதி ஹூங்குண்ட் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அதேபோல தன் மீதான வழக்குகளை தள்ளுபடி செய்யக்கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நித்யானந்தா தாக்கல் செய்த மனுவும் இன்றே விசாரணைக்கு வருகிறது.

இந் நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை கர்நாடகத்திற்குக் கொண்டு வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ள போலீசார் அதன் பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர்.

நித்யானந்தாவுக்கு பிடிவாரன்ட், ரஞ்சிதா எங்கே?

 படுக்கை அறை புகழ் சாமியார் நித்யானந்தாவுக்கு ஸ்ரீபெரும்புதூர் கோர்ட் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளது.

நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்யானந்தா படுக்கை அறையில் இருக்கும் காட்சிகள் வெளியானது, அவரது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நித்யானந்தா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, போலீசில் பலர் புகார் செய்துள்ளனர். இது குறித்து கர்நாடக மாநில சி.பி.சி.ஐ.டி., போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் வீராசாமிபிள்ளை தெருவைச் சேர்ந்த வக்கீல் செல்வமணி கடந்த மாதம் 11ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காவி உடை அணிந்து தவறுகள் செய்த நித்யானந்தா மீது 295ஏ சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி குணசேகர் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஆரம்பகட்ட முகாந்திரம் இருப்பதாக ஏற்றுக் கொண்டு, சாமியார் நித்யானந்தா கடந்த 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார்.

அன்று புனித வெள்ளியையொட்டி கோர்ட் விடுமுறை. எனவே, 19ம் தேதி, நித்யானந்தா, கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் நேற்று நித்யானந்தா ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார். அவரை கண்டுபிடித்து மே மாதம் 20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்ட போலீஸ் எஸ்.பி.,க்கு நீதிபதி குணசேகரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். நித்யானந்தாவுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts Plugin for WordPress, Blogger...