அதிபர் மனைவி கற்பம் யார் காரணம்?

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமாவின் 2வது மனைவி நோம்புமெலா டுலி கர்ப்பமாகியுள்ளார். ஆனால் அதற்கு டுலியின் பாடிகார்டுதான் காரணம் என பெரும் பரபரப்பும், சர்ச்சையும் வெடித்துள்ளது.

சம்பந்தப்பட்ட பாடிகார்டு தற்போது உயிருடன் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அவர் தற்கொலை செய்து கொண்டதால் பிரச்சினை பெரிதாகியுள்ளது.

தென் ஆப்பிரிக்க அதிபர் ஸூமாவுக்கு வயது 68 ஆகிறது. இவருக்கு மொத்தம் மூன்று மனைவிகள். முதல் மனைவி பெயர் சிசாகலே குமாலோ. 2வது மனைவிதான் டுலி. மூன்றாவது மனைவியின் பெயர் டொபோகா மடிபா. கடந்த ஆண்டுதான் மடிபாவை மணந்து கொண்டார் ஸூமா.

சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்தார் ஸூமா. அவருடன் 2வது மனைவியான 35 வயதான டுலியும் உடன் சென்றிருந்தார். இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய நிலையில்தான் டுலியின் கர்ப்பம் தொடர்பான சர்ச்சை வெடித்துள்ளது.

டுலிக்கு பாடிகார்டாக இருந்தவர் பின்டா தோமோ. இவர் மூலம்தான் டுலி கர்ப்பமடைந்துள்ளார் என்பதுதான் அந்த சர்ச்சை. இதனால் ஸூமா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். இருப்பினும் இதுகுறித்து வெளியான செய்திகளை அவர் மறுத்துள்ளார். இது உலகக் கோப்பைப் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கும், தனக்கும் சங்கடத்தை ஏற்படுத்த நடக்கும் சதி என்று அவர் கூறியுள்ளார்.

ஸூமா மூலம் டுலிக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளனர். தற்போது அவர் மூன்றாவது முறையாக கர்ப்பமாகியுள்ளார். ஸூமாவுக்கு தனது மூன்று மனைவியர் மூலம் 20 குழந்தைகள் உள்ளனர். தற்போது டுலிக்குப் பிறக்கப் போவது ஸூமாவின் 21வது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Posted in Labels: |

1 comments:

  1. Anonymous Says:

    Enna koduma sir idhu ...............

Related Posts Plugin for WordPress, Blogger...