விஜய் படங்கள் தோல்வி : தியேட்டர் அதிபர்கள் அதிருப்தி!

தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் நடித்த 6 படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளது. இதனால் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை ஈடுகட்டும் வகையில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு விஜய் 35 சதவீதம் பணத்தை திருப்பி தர வேண்டும்.
ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், டி.ராஜேந்தர் போன்றவர்கள் தங்கள் படங்கள் தோல்வி அடைந்தபோது நஷ்ட ஈடு தந்திருக்கிறார்கள். அதுபோல் விஜய்யும் தர வேண்டும். இதை மனிதாபிமான அடிப்படையில், கேட்கிறோம். நஷ்டஈடு தராவிட்டால் ஜூன் மாதம் நடக்க உள்ள சங்க செயற்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட முடிவை எடுப்போம்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார். பேட்டியின்போது சங்க பிரதிநிதி ஸ்ரீதர் உடனிருந்தார்.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...