ராணுவ அதிகாரி மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர்

டெல்லி: இந்திய ராணுவக் குழுவினருடன் இஸ்ரேல் சென்றபோது ராணுவ ஊழியர் ஒருவரின் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் தந்தார் லெப்டினன்ட் ஜெனரல் பதவியில் உள்ள மூத்த அதிகாரி. இதையடுத்து அவரை இன்று ராஜினாமா செய்ய வைத்தார் ராணுவத் தளபதி.

இந்திய ராணுவத்தின் என்ஜினியரிங் பிரிவுக்குத் தலைமை தாங்கும் அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.நந்தா தலைமையில் ஒரு குழு தங்கள் குடும்பத்தினருடன் கடந்த மாதம் இஸ்ரேல் சென்றது.

அப்போது தனது தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளரின் மனைவியிடம் செக்ஸ் டார்ச்சரில் ஈடுபட்டுள்ளார் நந்தா.

இது குறித்து அந்தப் பெண் ராணுவத் தளபதி வி.கே.சிங்கின் மனைவியும், ராணுவ வீரர்கள் மனைவியர் நல சங்கத்தின் தலைவியுமான பாரதி சிங்கிடம் புகார் தந்தார்.

இதையடுத்து விசாரணை நடத்திய ராணுவத் தளபதி வி.கே. சிங் , புகாரில் உண்மையிருப்பது உறுதியானதால் நந்தாவை உடனடியாக பதவி விலகுமாறு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

செக்ஸ் தொல்லை தொடர்பான பிரச்சனைக்காக பதவியைவிட்டு தூக்கப்பட்டுள்ள இந்திய ராணுவத்தின் மிக மூத்த முதல் அதிகாரி இவர் தான்.

Posted in Labels: | 0 comments

நடிகர் டாக்டர் விஜய் ஒப்புகொண்டார்

சுறா படம் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட நடிகர் விஜய் ரூ 6 கோடியை நஷ்ட ஈடாக திரையரங்க உரிமையாளர்களுக்கு தர சம்மதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் சுறா படம் தோல்வி அடைந்ததாகவும் அதற்கு இழப்பீடு வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

சுறா படம் மூலம் திரையரங்க உரிமையாளர்களுக்கு ரூ.10 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகவும், எனவே இந்த படத்துக்கு முதலீடு செய்த தொகையில் ரூ.6 கோடியை திருப்பித் தர வேண்டும் என்றும் இச்சங்கத்தின் பொதுச்செயலாளர் ரோகிணி பன்னீர் செல்வம், செயற்குழு உறுப்பினர் திருச்சி ஸ்ரீதர் ஆகியோர் தெரிவித்தனர்.

ஆனால் விஜய் தரப்பில் எல்லாமே வெற்றி படங்கள் என்று கூறி வருகிறார்கள்.

ஏற்கனவே ரஜினி, விஜய டி.ராஜேந்தர் ஆகியோர் படங்கள் தோல்வியடைந்த போது திரையரங்க உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் நஷ்ட ஈடு கொடுத்தார்கள். அது போல் விஜய்யும் நஷ்டஈடு தர வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் பிடிவாதமாக உள்ளனர்.

இழப்பீடு தராவிட்டால் இன்னும் 3 வாரங்களில் செயற்குழு, பொதுக்குழுவை கூட்டி அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வோம் என்றும் அறிவித்து உள்ளனர்.

விஜய் தற்போது காவல்காரன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.அடுத்து வேலாயுதம் என்ற படத்திலும், இந்தியில் வெற்றிகரமாக ஓடிய 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார்.

நஷ்ட ஈடு வழங்காவிட்டில் இப்படங்களுக்கு எதிரான முடிவை செயற்குழுவில் எடுப்போம் என்று திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலும் விஜய் தரப்பிலும் சமரச பேச்சுவார்த்தைகள் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடைபெற்று வருவதாகவும் செயற்குழு கூட்டத்துக்கு முன் சுமூகமான முடிவு ஏற்படும் என்று நம்புவதாகவும், தியேட்டர் அதிபர்கள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

ரூ.6 கோடி வரை நஷ்ட ஈடு தர விஜய் சம்மதித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Posted in Labels: , | 0 comments

ஒரே நாளில் ஒரு லட்சம்

டெல்லி: வங்கியின் ஏடிஎம் (டெபிட் கார்டுகள்) மூலம் இனி ஏடிஎம்களில் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வரை பணம் எடுக்க முடியும்.

அதேபோல டெபிட் கார்ட் மூலம் ரூ.1.25 லட்சம் வரை பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம்.

மேலும் ரூ.3 லட்சம் வரை பணத்தை ஒரு கணக்கிலிருந்து மற்றொரு கணக்குக்கு ஒரே நாளில் மாற்றும் வசதியும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இந்த அளவு தொகையை எடுக்கவோ மாற்றவோ வாடிக்கையாளர்கள் வங்கிகள் பணி நேரத்திலேயே ஒரு வங்கிக் கிளையிலிருந்து மற்றொரு வங்கிக் கிளைக்குச் செல்ல வேண்டியுள்ளது. இதைத் தவிர்க்க நாளை முதல் (ஜூன் 1) நாளொன்றுக்கு டெபிட் அட்டைகள் மூலம் ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் ரூ.1 லட்சம் எடுக்கும் வசதியை எச்டிஎப்சி வங்கி அறிமுகம் செய்யவுள்ளது.

பிற வங்கிகளும் ஜூன் 1ம் தேதிக்குப் பிறகு அறிமுகப்படுத்த உள்ளன.

இப்போது ரூ.25 ஆயிரம் மட்டுமே டெபிட் கார்ட் மூலம் ஒரு நாளைக்கு எடுக்க முடியும். அதுவும் சில வங்கிகளில் இரு தவணைகளாக எடுக்க வேண்டும். இனி இந்த சிக்கல் வாடிக்கையாளர்களுக்கு இருக்காது.

அதே நேரம் வங்கிகளிலும் கூட்டம் அலைமோதுவது தவிர்க்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Posted in Labels: | 0 comments

QUIT SMOKING !!! (புகைப்பதை நிறுத்துவீர். )



Smoking is injurious for health



புகைப்பதை நிறுத்துவீர்.

Posted in Labels: | 0 comments

விஜய் படங்கள் தோல்வி : தியேட்டர் அதிபர்கள் அதிருப்தி!

தமிழ்நாடு திரை அரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: விஜய் நடித்த 6 படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்துள்ளது. இதனால் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை ஈடுகட்டும் வகையில் தியேட்டர் உரிமையாளர்களுக்கு விஜய் 35 சதவீதம் பணத்தை திருப்பி தர வேண்டும்.
ஏற்கனவே ரஜினிகாந்த், கமல்ஹாசன், மணிரத்னம், டி.ராஜேந்தர் போன்றவர்கள் தங்கள் படங்கள் தோல்வி அடைந்தபோது நஷ்ட ஈடு தந்திருக்கிறார்கள். அதுபோல் விஜய்யும் தர வேண்டும். இதை மனிதாபிமான அடிப்படையில், கேட்கிறோம். நஷ்டஈடு தராவிட்டால் ஜூன் மாதம் நடக்க உள்ள சங்க செயற்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட முடிவை எடுப்போம்.
இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார். பேட்டியின்போது சங்க பிரதிநிதி ஸ்ரீதர் உடனிருந்தார்.

Posted in Labels: | 0 comments
Related Posts Plugin for WordPress, Blogger...