ஒரு தமிழச்சிக்கு தமிழ்நாட்டில் நுழைய தடையா?

சென்னை: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதி இல்லையென்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதற்கு இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்ற தாயார் பார்வதி அம்மையார் உடல் நலம் குன்றிய நிலையில் மருத்துவ சிகிச்சைப் பெறுவதற்காக மலேசியாவில் உள்ள இந்திய தூதுவர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து 6 மாத காலத்திற்கு விசா பெற்று இந்தியாவுக்கு நேற்று இரவு 10:45 மணிக்கு விமானத்தில் வந்தார்.

படுத்த படுக்கையில் பயணம் செய்த அவருக்குத் துணையாக விஜயலட்சுமி என்ற பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் விமானத்தை விட்டுக் கூட இறங்க அனுமதிக்கப்படாமல் வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 80 வயதை எட்டிவிட்ட மூதாட்டி அவர். ஏற்கனவே பக்க வாதத்தினால் பாதிக்கப்பட்டவர். இத்துடன் தனது கணவரை இழந்த பெரும் சோகத்திற்கு ஆளானவர். சிங்களச் சிறையில் கணவரோடு பல மாதங்கள் அடைக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டவர்.

பெரும்பாலான நேரங்களில் சுய நினைவை இழந்த நிலையிலே இருப்பவர். சிகிச்சைக்காக அவர் இங்கு வருவதைத் தடுத்துத் திருப்பி அனுப்பியதைப் போன்ற மனித நேயமற்ற கொடுமை வேறு இருக்க முடியாது.

இந்திய அரசு 6 மாத காலத்திற்குரிய விசாவை நேற்று காலையில்தான் அவருக்கு அளித்துள்ளது. ஆனால் அவர் சென்னையில் வந்து இறங்கியவுடன் இரவோடு இரவாக அவரைத் திருப்பி அனுப்பியதற்கு யார் காரணம்?. அவர் வருவதை இந்திய அரசு விரும்பவில்லை என்றுச் சொன்னால் விசா வழங்காமலேயே இருந்திருக்க வேண்டும்.

காலையில் விசா வழங்கிவிட்டு இரவில் திருப்பி அனுப்புவது என்பது அடாத செயலாகும். மீண்டும் ஒரு நீண்ட பயணத்தை மேற்கொள்ளுவதன் மூலம் அவருக்கு ஏதேனும் நேருமானால் அதற்கு இந்திய அரசே பொறுப்பாகும்.

பிரபாகரன் தாயார் அவர்களை வரவேற்று அழைத்துச் செல்ல நானும் வைகோ அவர்களும் சென்றிருந்தோம். அவர் வருகையை நாங்கள் யாருக்கும் தெரிவிக்கவில்லை. அவரது உடல்நலம் மட்டுமே எங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டது.

வெளியில் தெரிந்தால் கூட்டம் கூடும். அது அவரது உடல் நலனுக்குக் கேடாக முடியும் என்ற காரணத்தினால் அவர் வருகையை வெளியிடவில்லை.

விமான நிலையத்திற்கு வைகோவும் நானும் சென்றபோது நாங்கள் வருவதற்கு முன்பே அங்கு குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான காவல் படையினர் பாய்ந்தோடி வந்து எங்களை வழிமறித்துத் தடுத்தார்கள்.

விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட எல்லை வரை நாங்கள் செல்வதற்குரிய அனுமதிச் சீட்டுகள் எங்களிடம் இருந்தன. ஆனால் எங்களைப் பிடிவாதமாக அனுமதிக்க மறுத்து பிடித்துத் தள்ளும் அளவிற்கு காவல்துறையினர் அட்டூழியம் புரிந்தனர். தொடர்ந்த தள்ளு முள்ளுக்கு நடுவேதான் நாங்கள் விமான நிலையத்தின் பார்வையாளர் பகுதியையே அடைய முடிந்தது.

விமான நிலையத்தில் தனியான பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். ஆனால் சென்னை புறநகர் காவல்படையினர் அத்துமீறி செயல்பட்டு எங்களைத் தடுத்தார்கள்.

முதலவருக்குத் தெரியாமல் இது ஒரு போதும் நடந்திருக்க முடியாது. இந்திய அரசு விசா வழங்கிய பிறகு ஏன் அவர் சென்னையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்.

உலகத் தமிழர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தேசியத் தலைவரான பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்தத் தாயாரை, தாய் தமிழகத்தை உரிமையோடு நம்பி வந்த தமிழ் மகளை கொஞ்சமும் இரக்கமில்லாமல் விரட்டியடித்ததை உலகத் தமிழர்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள் என்று கூறியுள்ளார் நெடுமாறன்.

Posted in Labels: , | 0 comments

நமது சின்னம் புலிச்சின்னம்

சென்னை: இயக்குநர் சீமான் விரைவில் அறிவிக்கவிருக்கும் தனது புதிய கட்சியின் சின்னமாக பாயும் புலி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

முற்றிலும் சிவப்பு நிற பின்னணியில் பாயும் புலி இருப்பது போல கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது.

திருச்சி திலகர் திடலில் சமீபத்தில் இந்தக் கொடியை அறிமுகம் செய்யும் விழாவில் சீமான் பேசுகையில்,

வரும் மே 18 ஆம் நாள் மதுரையை நோக்கி மிகப்பெரும் பேரணி ஒன்றை மேற்கொள்ளவிருக்கிறோம். ஈழத் தமிழ் மக்களின் போரட்டம் இராணுவ நடவடிக்கை மூலம் நசுக்கப்பட்ட இந்த நாள் தமிழ் மக்களின் வரலாற்றில் ஒரு கறுப்பு தினம்.

இந்த நாளை எமது புதிய கட்சி துக்க தினமாகக் கடைப் பிடிக்கும். நாம் தமிழர் கட்சி ஒரு மாற்றுக் கருத்துள்ள அரசியல் கட்சியாகத் திகழும். நாம் இன மற்றும் மத வேற்றுமைகளை கடந்தவர்கள்.

எமது கட்சியில் உள்ள தலைவர்கள் பொன்னாடையை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை, அதற்கு பதில் நாம் புத்தகங்களையே ஏற்றுக்கொள்வோம். தமிழீழம் என்பது ஈழத்தில் வாழும் தமிழ் மக்களுக்குரிய நாடு மட்டுமல்ல. அது உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் தாயகமாகவே அமையும்.

இலங்கை அரசு போர்க் குற்றங்களை மேற்கொண்டுள்ளதாக அயர்லாந்தில் உள்ள மக்கள் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆனால் அதனை தமிழக சட்டசபை பரிந்துரை செய்ய மறுத்துள்ளது.

18 மில்லியன் சிங்கள மக்கள் தமிழ் மக்களை வெற்றிகொண்டுள்ளனர் ஆனால் நாம் 75 மில்லியன் மக்கள் இங்கு செயலற்றுக் கிடக்கிறோம்.

இப்படி இருக்கிறோம் என்ற உணர்வு கூட இல்லாத அளவு மழுங்கடிக்கப்பட்டுள்ளோம். இந்தியாவில் உள்ள 15 மில்லியன் சீக்கியர்கள் தமது உரிமைகளைப் பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் உள்ள தமிழ் மக்கள் அதனை பெறவில்லை.

ஏன்? சீக்கியர்கள் சீக்கியர்களாகவே உள்ளனர் ஆனால் தமிழர்கள் தமிழர்களாக இல்லை.

தமிழகத்தை தமிழர்கள் ஆட்சி செய்ய வேண்டும். புலிச் சின்னம் சோழர்களில் சின்னம். அண்ணன் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சின்னமும் அதுவே. எனவே தான் நாம் அதனை வரித்துக் கொண்டுள்ளோம்.

தமிழ் மக்களை காப்பாற்ற வானத்தில் இருந்து யாரும் வரமாட்டார்கள். திரைப்படங்களிலிருந்தும் யாரும் வரப்போவதில்லை. நீங்கள்தான் உங்களின் உரிமைக்காக போராட வேண்டும். உங்கள் விடுதலை உங்களின் கையில் மட்டுமே உள்ளது.

போரிடாமல் இந்தியா உங்களுக்கு சுதந்திரத்தை தரப் போவதில்லை. அமெரிக்கா வந்து உங்களை விடுவிக்காது. சீனாவும், ஜப்பானும் உங்களுக்கு உதவாது. சிங்கள மக்கள் உங்களுக்கு எதனையும் இலகுவாகத் தரப்போவதில்லை.

தமிழீழத்தை உருவாக்க உலகில் உள்ள எந்த நாடும் உதவிக்கு வராது. நாமே அதனை உருவாக்க வேண்டும்.

இந்தியாவின் ஆதரவின்றி தமிழீழம் உருவாகாது, ஆனால் தமிழகத்தின் அழுத்தங்கள் இன்றி இந்தியா உதவிக்கு வராது. சீமானோ, வைகோவோ, நெடுமாறனோ அல்லது திருமாவளவனோ ஆதரவுகளை தருவதால் மட்டும் தமிழீழம் உருவாகாது.

தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகியவை ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவுகளை வழங்க வேண்டும். அந்த கட்சிகளின் தலைவர்கள் விரும்பினால்தான் அது சாத்தியமாகும். ஆனால் அவர்கள் அதனை செய்யப்போவதில்லை என்பதை நாம் அறிவோம்.

அதற்க்கு நாம் என்ன வேண்டும்?

தமிழீழத்தை உருவாக்குவதற்கு இந்திய அரசை நெருக்குதலுக்குள்ளாக்கும் துணிவு மிக்க கட்சி ஒன்றே தமிழகத்தை ஆட்சிசெய்ய வேண்டும். அது தான் ஒரே வழி.

தமிழகத்தை தமிழ் மக்கள் 2016 ஆம் ஆண்டு ஆட்சி புரிவார்கள். அதுவரை நாம் அடிமைகளாக வாழ்வோம். நாம் இந்தியாவின் இறைமைக்கு பாதகமானவர்கள் அல்ல. ஆனால் தமிழகத்தை தமிழ் மக்கள் ஆட்சி செய்ய வேண்டும் என விரும்புகிறோம்" என்றார்.

Posted in Labels: , | 0 comments

மாணவனுடன் செக்ஸ் உறவு

லண்டன்: இங்கிலாந்தில், போதையில் இருந்த மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட ஆசிரியை ஒருவர் கைதாகியுள்ளார்.

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியை சேர்ந்தவர் ஹன்னா கிளின்ட்ரி (25). தனியார் பள்ளி ஆசிரியை. சம்பவத்தன்று இவர் பள்ளியில் படிக்கும் 16 வயது மதிக்கத்தக்க 3 மாணவர்களை தனது வீட்டுக்கு விருந்துக்கு அழைத்து சென்றார்.

அங்கு வைத்து அவர்களுக்கு மது பானம் கொடுத்தார். மது அருந்திய மயக்கத்தில் மாணவர்களுக்கு, ஆசிரியை ஹன்னா மீது மோகம் பிறந்துள்ளது. ஆசிரியையை முத்தமிடுவது என முடிவு செய்து போட்டி வைத்தனர்.

யார் முதலில் முத்தமிடுகிறார்களோ அவர்களுக்கு பரிசும் வைத்துக் கொண்டனர். ஆனால் அவர்களுக்குள் திடீரென பயமும், தயக்கமும் வந்தது. இருப்பினும், ஒரு மாணவன் துணிச்சலுடன் ஆசிரியைக்கு முத்தம் கொடுத்தான்.

போதை அதிகமாகிப் போனதால் மூன்று பேரும் ஆசிரியை வீட்டிலேயே இரவு தங்க முடிவு செய்தனர். அப்போது தனக்கு முத்தமிட்ட மாணவனை அழைத்து அவனுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டார் ஆசிரியை ஹன்னா.

இது வெளஇயில் தெரிய வரவே பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தியது. ஆனால் அப்படியெல்லாம் நடக்கவே இல்லை என்று மூன்று மாணவர்களும் மறுத்து விட்டனர்.

ஆனால் செக்ஸ் உறவு வைத்துக் கொண்டதை தனது தாயாரிடம் சொன்னான் அந்த மாணவன். இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து ஹன்னா கைது செய்யப்பட்டார். அவரை பள்ளி நிர்வாகம் பள்ளியிலிருந்து நீக்கியுள்ளது.

Posted in Labels: | 0 comments

நிலநடுக்கம் - பீஜிங் 300 பேர் பலி.


பீஜிங் : சீனாவில் வடமேற்கு பகுதியில் இருக்கும் கிங்காய் மாகாணத்தில் இன்று காலையில் ( உள்ளூர் நேரப்படி 7.30 மணிக்கு) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 7.1 ஆக பதிவாகியது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் பயங்கரமாக குலுங்கின. மக்கள் வீடுகளில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறினர். கட்டட இடிபாடுகளில் சிக்கி இதுவரை 300 பேர் பலியானது உறுதி செய்யப்பட்டுள்ளது. பலர் இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 8000 பேர் படுகாயமடைந்துள்ளனர்.திபெத்தில் உள்ள குவாம் டோவை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதே பகுதியில் நேற்று 5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அந்தபகுதி மக்கள் பீதிக்குள்ளாகி இருந்தார்கள். அந்த பீதி மறைவதற்குள் பெரிய நிலநடுக்கம் தாக்கி விட்டது.

மீட்பு பணியில் சுணக்கம் : நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் சற்று மந்தமடைந்துள்ளன. தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. நிலநடுக்கம் தாக்கிய பகுதியில் 89, 300 பேர் வசித்து வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயிகள்.

கடந்த 2008-ம் ஆண்டு சீனாவின் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 90 ஆயிரம் பேர் பலியானார்கள்.

சென்னை கடற்கரை ரோட்டில் பந்தய பணம் கட்டி `பைக் ரேஸ்' அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய 9 பேர் கைது கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவி கடும் எச்சரிக்கை

    சென்னை கடற்கரை ரோட்டில் பந்தய பணம் கட்டி `பைக் ரேஸ்'
அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய 9 பேர் கைது
கூடுதல் போலீஸ் கமிஷனர் ரவி கடும் எச்சரிக்கை

சென்னை, ஏப்.13-

சென்னை கடற்கரை ரோட்டில் `பைக் ரேஸ்' என்ற பெயரில் பந்தய பணம் கட்டி அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

`பைக் ரேஸ்'

சென்னை கடற்கரை ரோட்டில் அண்ணா சதுக்கத்தில் இருந்து பெசன்ட்நகர் எலியட்ஸ் பீச் வரை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பந்தய பணம் கட்டி வாலிபர்கள் சிலர் `பைக் ரேஸ்' நடத்துவதாகவும், இதனால் விபத்துக்கள் நடப்பதாகவும் போக்குவரத்து போலீசாருக்கு நிறைய புகார்கள் வந்தன. இவ்வாறு `பைக் ரேஸ்' செல்பவர்கள் அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களை ஓட்டி செல்வார்கள். இதனால் பொதுமக்களுக்கு கடும் இடையுறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னை கடற்கரை ரோட்டில் `பைக் ரேஸ்' நடக்கிறதா? என்பதை கண்காணிக்கும்படி கூடுதல் கமிஷனர் ரவி உத்தரவிட்டார். இதன்பேரில், கிழக்கு கடற்கரை ரோட்டை போக்குவரத்து போலீசார் கண்காணித்தனர். அப்போது `பைக் ரேஸ்' நடத்திய 9 வாலிபர்கள் பிடிபட்டனர்.

பறிமுதல்

அவர்களுடைய மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல், சென்னையில் `பைக் ரேஸ்' நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்கள் மீது வழக்கு போட்டு ரூ.2 ஆயிரம் அபராதம் கோர்ட்டு மூலம் வசூலிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூடுதல் கமிஷனர் ரவி எச்சரிக்கை விடுத்தார்.

Posted in Labels: , | 0 comments

மின்சாரம் இன்றி விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர் - பழ.நெடுமாறன்

நெய்வேலி: தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுவதால் வெளி மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின் வினியோகத்தை தடை செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன் வலியுறுத்தி உள்ளார்.

நெய்வேலியில் நேற்று நிருபர்களை சந்தித்தபோது பழ.நெடுமாறன் கூறியதாவது:

தமிழகத்தில் மின் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தொழில்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏராளமான தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலைகளை இழந்துள்ளனர்.

மின்சாரம் இன்றி விவசாயிகள் பெரும் வேதனை அடைந்துள்ளனர். இதனால் கோடை காலத்தில் பயிரிட்ட பயிர்கள் அனைத்தும் கருகி பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நெய்வேலி நிலக்கரி உற்பத்தி நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இருந்தும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 80 சதவீதம் பிற மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டுமே பயன்படுத்த பட வேண்டும்.

அண்மையில் கர்நாடக அரசு உற்பத்தி செய்யும் மின் உற்பத்தியை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதை தடை விதித்துள்ளது.

இதனை தமிழக அரசு பின்பற்றி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அனுப்புவதை தடை செய்ய வேண்டும்' என்றார்.

Posted in Labels: | 0 comments

காச நோயின் ஜீன் - இந்திய விஞ்ஞாணிகள் கண்டுபிடிப்பு ..

டெல்லி: காசநோயை ஏற்படுத்தும் மைக்கோபாக்டீரியம் டியூபர்குலோஸிஸ் பாக்டீரியின் ஜீனை இந்திய விஞ்ஞானிகள் குழு மேப்பிங் செய்து சாதனை படைத்துள்ளது. சில மாதங்களிலேயே இந்த சாதனையை அது எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய விஞ்ஞானிகள் காசநோயை ஏற்படுத்தும் ஜீனை மேப்பிங் செய்திருப்புத இதுவே முதல் முறையாகும். இதன் மூலம் ஆண்டு தோறும் இந்தியாவில் 3 லட்சத்து 30 ஆயிரம் இநதியர்களின் உயிரைப் பறித்து வரும் காச நோய்க்கு விலை மலிவான, தரமான, சக்தி வாய்ந்த மருந்தைக் கண்டுபிடிக்கும் பணிகள் எளிதாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதகுறித்து அறிவியல் தொழிலக ஆய்வு கவுன்சில் (CSIR)தலைவர் சமீர் பிரம்மச்சாரி கூறுகையில், 100 அறிவியல் மாணவர்களுடன் இணைந்து இந்த ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டிருந்தது. ஆய்வு தொடங்கிய சில மாதங்களிலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.

அடுத்த 18 முதல் 24 மாதங்களுக்குள், மருத்துப் பரிசோதனைக் கட்டத்தை நாம் எட்ட முடியும் எதிர்பார்க்கிறோம்.

இந்திய விஞ்ஞானிகளின் இந்த சாதனை மெய் சிலிர்க்க வைக்கிறது. இதுவரை இப்படி ஒன்றை நாம் செய்ததில்லை. இதில் ஈடுபட்ட அனைவரும் பிரமப்பூட்டும் வகையில் செயல்பட்டுள்ளனர். இந்த முயற்சியில் உலகில் உள்ள யாரும் நம்முடன் இணைந்து செயல்படலாம் என வரவேற்கிறோம் என்றார்.

காசநோய்க்கு உலகம் முழுவதும் ஆண்டு தோறும் பத்தரை லட்சம் பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். ஆனால் காசநோய்க்கு கடந்த ஐம்பது ஆண்டுகளாக புதிய மருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

காசநோய்க்கு புதிய வகை மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில்தான் இந்திய விஞ்ஞானிகள் குழு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted in Labels: , | 0 comments
Related Posts Plugin for WordPress, Blogger...