eesal world record | ஈசல் உலக சாதனை முயற்சி.

ஈசல் படத்துக்காகத்தான் இந்த கின்னஸ் சாதனை முயற்சியாம்.

ஈசல் என்ற பெயரில் ஒரு படம் உருவாகி வருகிறது. இது ஒரு ஆவிக்கதை. ஆனால் பயமுறுத்தும் ஆவிக் கதையோ அல்லது மாயாஜாலங்கள் நிறைந்த மாந்த்ரீகக் கதையோ அல்ல. சற்று வித்தியாசமாக எடுத்திருக்கிறார்களாம்.

இப்படத்தில் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் வகையில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. அந்தப் பாட்டை 24 பேர் சேர்ந்து, 24 மொழிகளில் பாடியுள்ளனராம்.

நடிகர் பார்த்திபன் மலையாள வரிகளையும், நடிகர் சுரேஷ் கோபி தமிழ் வரிகளையும் பாடியுள்ளனர். இதுபோல ஒவ்வொரு மொழிக்காரரும், இன்னொரு மொழியில் பாடியுள்ளனர்.

இப்படி ஒரு பாடல் இதுவரை எங்குமே பாடப்படவில்லையாம். எனவே இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் என படத்தின் இயக்குநர் விஜய் ஆதித்யா கூறுகிறார்.

இப்படத்தில் ஹீரோவாக மிதுனும், ஹீரோயினாக சுனு லட்சுமியும் நடிக்கிறார்கள்.



சாதனையில் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

வேற்றுமையில் ஒற்றுமை, இதுவே உதாரணம்.

Posted in Labels: , , |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...