A must watch - பசி

Posted in Labels: , | 0 comments

நியான் விளக்கு வெளிச்சத்துக்குப் பின்னால் இருக்கும் இருட்டு நமக்குத் தெரிவதே இல்லை - வசந்தபாலன்

அங்காடி தெரு படம் எதிர்பார்த்தது போலவே வெற்றி பெற்றிருப்பதாக படத்தின் டைரக்டர் வசந்தபாலன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், "நாம் தினசரி சந்திக்கிற மனிதர்கள்தான் அங்காடி தெரு கதையின் நாயகர்கள். அவர்களை நாம் நின்னு கவனிச்சதே இல்லை. சந்தையில் குண்டூசி விற்கும் கடையில் இருந்து குக்கர், தங்கம் விற்கும் கடைவரை தொழிலாளர்கள் நிறைந்து நிற்கிறாங்க. கம்பெனி யூனிபார்மும், ரெடிமேட் சிரிப்புமா நம்மை வரவேற்கிற அவர்களின் முகங்களை பட்டுப்புடவை, நகை தாண்டி நாம என்றைக்காவது ஏறெடுத்துக் கவனிச்சிருக்கோமோ? நியான் விளக்கு வெளிச்சத்துக்குப் பின்னால் இருக்கும் இருட்டு நமக்குத் தெரிவதே இல்லை. இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றி தெரிஞ்சுகிட்டப்ப, எனக்கு ஆச்சர்யம் அந்த ஆச்சர்யத்தை, அனுபவத்தை 500 மணி நேரம் பதிவு செஞ்சேன். அழுக்கும், வியர்வையும் கலந்த அவர்களின் உலகத்தில் காதல், நட்பு, துரோகம், வலி, ஆச்சர்யம், நகைச்சுவை, சுவாரஸ்யம் எல்லாமே இருக்கு. ஒரு ஃபேண்டஸி கதைக்குத் தேவையான சூனியக்காரிகளும், ஆக்ஷன் படங்களுக்குத் தேவையான முரட்டு வில்லன்களும்கூட அவங்களுக்குள்ள ஒளிஞ்சுகிட்டு இருக்காங்க. வழக்கமான நடிகர்கள் இந்த கேரக்டரில் நடிக்க முடியும்னாலும், கதையின் உண்மைத்தன்மைக்குப் பக்கத்தில் ரசிகர்களைக் கொண்டு செல்ல பெரும்பாலும் புதுமுகங்களைப் பயன்படுத்தினேன்.

கற்றது தமிழ் பார்த்து ஈர்க்கப்பட்டுதான் அஞ்சலியை தேடிப் பிடிச்சேன். எப்பவும் அவர் கண்களில் எட்டிப் பார்க்கும் அந்த மென் சோகம் இந்தக் கதைக்குத் தேவையா இருந்தது. அஞ்சலியின் மொத்தத் திறமையும் இந்தப் படத்தில் தெரியும். பொரி வியாபாரம் பண்ணுகிற சாதாரண குடும்பத்திலிருந்து வந்தவர் மகேஷ். சினிமாவுக்கு ஏத்த மாதிரி தன்னை வளர்த்துக்கிட்டார். சில நேரங்களில் இயலாமை வடியும் அவரது வெறும் முகம் மட்டுமே காட்சிகளுக்குப் போதுமானதா இருந்தது. புதுமுக நடிகர்கள், நடிப்பு பயிற்சி, படப்பிடிப்பு விபத்துக்கள், காட்சிப்படுத்துவதற்கான மெனக்கெடல்கள்னு பல காரணங்களால் கொஞ்சம் தாமதமானாலும், தரமான சினிமாவாக வந்து வெற்றி பெற்றிருப்பதில் எனக்கு திருப்தி, மகிழ்ச்சி, என்று கூறியுள்ளார்.

Posted in | 1 comments

சில பகுதிகள் தினந்தோறும் 20 மணி நேரத்திற்கு மின் சாரமே இல்லாமல் இருக்கின்றன- ஜெ.

சென்னை: தமிழகத்தின் மின் நிலைமை குறித்து தெளிவற்ற நிலையில் இருக்கும் ஆற்காடு வீராசாமி,அவருடைய துறையின் மூலம் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் தெளிவாக இருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியை அடுத்து தமிழக மக்கள் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை மின்வெட்டு. சென்னையை தவிர தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு நகரமும், கிராமமும் தினந்தோறும் 6 முதல் 8 மணி நேர மின்வெட்டிற்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது.

சில பகுதிகள் தினந்தோறும் 20 மணி நேரத்திற்கு மின் சாரமே இல்லாமல் இருக்கின்றன. இவற்றில் இரண்டு மணி நேரம் மட்டுமே அறிவிக்கப்பட்ட மின்வெட்டு. மீதமுள்ளவை நியாயமற்ற, தன்னிச்சையான அறிவிக்கப்படாத மின்வெட்டு.

இதன் விளைவாக தொழிற்சாலைகள் செயல்பட முடியவில்லை. வேளாண்மைத் தொழில் ஸ்தம்பித்து விட்டது. தேர்வு சமயத்தில் மாணவ- மாணவிகள் படிக்க முடியவில்லை.

நிலைமை இவ்வாறிருக்க இவை அனைத்தையும் அறிந்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் மாநில அதிகாரிகள் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளை வெளியிடுவதை பார்க்கும் போது மின்வெட்டு பிரச்சினையை தீர்க்கவோ அல்லது மின் உற்பத்தியை பெருக்கவோ தேவையான ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

தமிழகத்தின் மின்நிலைமை 2009ம் ஆண்டு மே மாதம் மேம்பட்டு விடும் என்று சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.

ஏப்ரல் மாதத்தில் மக்களை ஏப்ரல் முட்டாளாக்கி பரிகாசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்று தெரிவித்திருப்பார் போலும்.

சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இரண்டு மணி நேர மின்வெட்டு மே மாதம் வரையில் தொடரும் என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ந்தேதி அறிவித்தார்.

இதற்கு ஒரு வாரம் கழித்து தமிழ்நாட்டின் மின் நிலைமை 2011 வரை சீராகாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவிக்கிறார். இதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, இரண்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு 3 மணி நேரமாக அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகிறது.

இந்த அளவுக்கு தன்னுடைய துறையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர்.

இருப்பினும் தமிழகத்தின் மின் நிலைமை குறித்து தெளிவற்ற நிலையில் இருக்கும் ஆற்காடு வீராசாமி, அவருடைய துறையின் மூலம் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் தெளிவாக இருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நம்பகமான இடத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, ஆறு மில்லியன் டன் அளவுக்கும் மேலான குறைந்த வெப்பத்திறன் கொண்ட நிலக்கரி, ஒரு டன் 120 அமெரிக்க டாலர் என்ற வீதத்தில் இந்தோனேசியாவிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தால் ஆண்டு தோறும் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியாவில் கப்பலில் ஏற்றப்படும் போது ஒரு டன் உயர் வெப்பத்திறன் கொண்ட நிலக்கரியின் விலை 65 அமெரிக்க டாலர்.

கப்பல் மற்றும் சரக்குக் கட்டணமாக 20 அமெரிக்க டாலரைச் சேர்த்தால், இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு டன் உயர் வெப்பத் திறன் கொண்ட நிலக்கரியின் விலை 85 அமெரிக்க டாலர். தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை இதைவிட குறைவு.

உயர் வெப்பத்திறன் கொண்ட நிலக்கரியை விட 35 டாலர் அதிக விலை கொடுத்து, குறைந்த வெப்பத்திறன் கொண்ட நிலக்கரியை ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்குவதன் மூலம் மேலும் பெருத்த இழப்பிற்கு ஆளாக் கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு டன்னுக்கு ரூ. 1,575 இழப்பு ஏற்படுகிறது. ஆறு மில்லியன் டன்னுக்கும் மேலாக எண்ணூர் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையங்களுக்கு ஆண்டு தோறும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.

மிகப்பெரிய தொகையை கொடுத்து ஆண்டு தோறும் நிலக்கரியை கூடுதல் விலைக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்படு கின்ற இழப்பு ஆயிரம் கோடி ரூபாய். எனவே தான் தமிழ்நாடு மின்சார வாரியம் பெருத்த நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மாநில அரசின் கருவூலத்திலிருந்து இந்தோனேசியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களுக்கு அபரிமிதமாக நிதி செல்ல ஆற்காடு வீராசாமி ஏன் அனுமதி அளித்தார்?

இன்று நுகர்வோருக்கான மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திக்குமுக்காடி பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் குறைந்த நேரமே வரும் மின்சாரத்திற்கு அதிக கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டும். இதுதான் தமிழக மக்களின் கண்ணீர் காவியம் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

Posted in Labels: , | 1 comments

முயற்சி செய்யவேண்டாம்

Posted in Labels: | 0 comments

NO PAINS... NO GAINS...

Nature of Life











































NO PAINS... NO GAINS... ACCEPT THE PAIN AND FUTURE WILL BE COLORFUL
!!

Posted in Labels: | 0 comments

சானியா இனி இந்தியாவுக்கு விளையாடமாட்டார் - பாக். டென்னிஸ்

இஸ்லாமாபாத்: சோயப் மாலிக் உடனான திருமணம் முடிந்த பின்னர் சானியா மிர்சா பாகிஸ்தானுக்காக டென்னிஸ் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் திலவார் அப்பாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
வரும் 15ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளது. டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு புகழ் சேர்த்ததோடு, ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ள 23 வயது சானியா மிர்சா, திருமணத்துக்கு பின்னர் சோயப் மாலிக்குடன் துபாயில் குடியேற திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் சானியா திருமணம் குறித்து பாகிஸ்தானின் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் திலவார் அப்பாஸ் கூறுகையில்,

'சானியா மிர்சா, மாலிக்கை திருமணம் செய்து கொள்கிறார் என்ற தகவலை கேட்டபோது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

சானியாவை நாங்கள் பாகிஸ்தானுக்கு மனமுவந்து வரவேற்கிறோம். வருங்காலத்தில் சானியா பாகிஸ்தான் குடிமக்களில் ஒருவராகி விடுவார். மேலும், எங்களுக்காக அவர் டென்னிஸ் விளையாடவும் செய்வார். சானியாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

சானியா பாகிஸ்தானுக்காக டென்னிஸ் விளையாடுகிறார் என்றால் நாங்கள் மிகுந்த பரவசமும், மகிழ்ச்சியும் அடைவோம். ஆசிய பெண்கள் கணவனின் வழியைத் தான் பின்பற்றுவார்கள். இந்த அடிப்படையில் ஒரு நாள் நிச்சயம் சானியா பாகிஸ்தானுக்காக விளையாடுவார் என நம்புகிறோம்.

இது நடந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லைங்க !

Posted in Labels: , | 2 comments

bing bang experiment, successful

ஜெனீவா : பிரபஞ்சம் எப்படி தோன்றியது என்பது பற்றிய இரண்டாம் கட்ட, 'பிக் பாங்' (பெருவெடிப்பு) பரிசோதனை வெற்றியடைந்துள்ளது.'அணுக்கள் ஒன்று திரண்டு ஒரு பந்து போல இருந்த போது, அதில் திடீரென ஏற்பட்ட பெரிய வெடிப்பினால் அந்த அணுக் கூட்டம் சிதறி பரவ ஆரம்பித்தது. அதனால் ஏற்பட்டதே இந்த பிரபஞ்சம். இப்போதும் அந்த வெடிப்பினால் இந்த பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட சில கோடி ஆண்டுகளுக்குப் பின், மீண்டும் இந்த பிரபஞ்சம் பழைய நிலைக்கு அதாவது மீண்டும் ஒன்று திரண்டு விடும்' என்பது தான், நவீன அறிவியலில் இந்த பிரபஞ்சம் தோன்றியதற்கு கூறும் காரணம். இந்தக் கொள்கை புதிய அறிவியலில், 'பிக் பாங் தியரி' (பெருவெடிப்புக் கொள்கை) எனப்படும்.இந்த பெருவெடிப்புக் கொள்கையைப் பரிசோதிப்பதற்காக, பிரான்ஸ் - சுவிட்சர்லாந்து எல்லையில் அமைந்துள்ள சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரத்தில், அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பியக் கூட்டமைப்பான, 'செர்ன்' (சி.இ.ஆர்.என்.,), பூமிக்கடியில் 27 கி.மீ., அளவில் ராட்சத சுரங்க வடிவிலான ஒரு பரிசோதனைக் கூடத்தை அமைத்துள்ளது. காந்த ஈர்ப்பு முறையில் அமைந்த இதில், அணுக்கள் மோதும் போது ஏற்படும் பிரம்மாண்ட சக்தி மதிப்பிடப்படும்.

இந்தக் கூடம், 'லார்ஜ் ஹெட்ரான் கொலைடர்' எனப்படும். கடந்த ஆண்டில், இந்தக் கூடத்தில் பெருவெடிப்புக் கொள்கையின் அடிப்படையில் அணுக்களில் உள்ள துகள்களை மோதவிட்டு முதற்கட்டப் பரிசோதனை நடத்தப்பட்டது.இந்நிலையில், புதிய அறிவியலில் பிரபஞ்சத் தோற்றம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு விடையளிக்கும் விதத்தில் இரண்டாம் கட்ட சோதனை நடந்தது. அந்தச் சோதனை வெற்றியடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதைத் தொடர்ந்து, 'செர்ன்' அமைப்பின் கட்டுப்பாட்டு அறையில் இருந்த விஞ்ஞானிகள், சோதனை வெற்றியடைந்ததைக் கொண்டாடும் வகையில் பலமாகக் கைதட்டினர்.

இந்த வெற்றி, புதிய அறிவியலில் இயற்பியல் துறையில் பல்வேறு புதிய பரிமாணங்களை வளர்க்கும் என்று நம்பப்படுகிறது. ஒரே நாளில் இதற்கான விடை தெரியாது. காலப்போக்கில் அணுக்கூறுகள் மோதும் போது ஏற்படும் சக்திகள் குறித்த ஆய்வின் முடிவில், பிரபஞ்சம் பற்றிய அடிப்படைத் தகவல்கள் சேகரிக்கப்படும். வரலாற்றுப் பூர்வமான பிரம்மாண்டமான தகவல் சேகரிப்பு இதன் மூலம் துவங்கியது என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் .

இப்போதும் இந்தியாவை நம்புகிறோம்

சென்னை: தமிழகத்தில் மொழியையும், ஈழத்தில் நிலத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள் என்று வேதனையை வெளியிட்டுள்ளார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.


எழுகதிர்,தமிழ் நிலம் இணைந்து நடத்திய தமிழர் இந்தியர் இல்லையா? என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நூலை மாலை முரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனார் வெளியிட்டார். முதல் பிரதியை தொழிலதிபர் சுந்தரேசனார் பெற்றுக் கொண்டார்.

லண்டனில் திருக்குறள் தமிழ்ப்பள்ளி நடத்தும் தேவதாசு,​ நூலாசிரியர் அறுகோபாலன்,​டெல்லி தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் இந்திரா மணியன்,​​ பாவலர் மு.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதே விழாவில், தமிழர் மிகுதியாக இழந்தவற்றை மீட்க என்ன வழி?, வாழ்வியற் சொல் அகரமுதலி ஆகிய நூல்களும் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் பேசுகையில்,
5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழர்கள் இன்று தமிழகத்தில் மட்டுமே வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

உலகில் முதன்முதலில் தோன்றிய மொழி தமிழ்.​ இது அறிஞர்கள் பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று.​ தமிழ்நாட்டிலும் தமிழ் ஈழத்திலும் வாழ்பவர்கள் மண்ணின் மைந்தர்கள்.​ மொரிஷியஸ்,​​ பிஜி நாடுகளுக்குச் சென்றவர்கள் பிழைக்கச் சென்றவர்கள்.

இன்றைக்கு தமிழ் ஈழமும்,​​ தமிழ் இனமும் அழியும் நிலையில் உள்ளது.​ இலங்கையில் வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று ராஜபட்ச கூறிவிட்டார்.​ இலங்கை நீதிமன்றமும் அதை உறுதி செய்து விட்டது.

26,500 சதுர கிலோமீட்டர் பரப்பில் இருந்த தமிழ் ஈழம் படிப்படியாக குறைந்து இன்றைக்கு 11,500 சதுர கிலோ மீட்டர் என்ற அளவுக்கு வந்துவிட்டது.

இப்போது தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றம் நடந்துக் கொண்டிருக்கிறது.​ ஒவ்வொரு அரச மரத்தின் கீழும் புத்தர் கோயிலை கட்டத்தொடங்கியுள்ளனர்.​ தமிழர் நகரங்களில் சிங்கள கடைகளும், ராணுவ குடியேற்றங்களையும் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் தமிழ் ஈழ விடுதலைப் போர் தோற்றுவிட்டதாக யாரும் கருதி விடக்கூடாது.​ போரில் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.​ மீண்டும் 2 ஆண்டில் தமிழ் ஈழம் நிமிர்ந்து நிற்க்கும்.

தாய் தமிழகம் இந்த தருணத்தில் தன் கடமையை செய்ய வேண்டும்.​ இந்திய அரசை இப்போதும் நாங்கள் நம்புகிறோம்.​தமிழ் ஈழத்தை அழிவின் விளிம்பில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

தமிழ் ஈழம் நிலத்தை இழந்து கொண்டிருக்கிறது.​ தமிழ்நாடு மொழியை இழந்து கொண்டிருக்கிறது.​இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தும் கடமை தமிழர் அனைவருக்கும் உண்டு என்றார் அவர்.

Posted in Labels: | 1 comments

சினிமா ஒரு glamour உலகம்



சினிமா ஒரு கிளாமர் உலகம். இங்கு ஜெயித்தால் ஆகாயத்துக்கு தூக்குவார்கள். தோற்றால் படு பாதாளத்தில் தள்ளி விடுவார்கள் என்று நடிகை நயன்தாரா கூறியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், 2003ம் ஆண்டு சினிமாவுக்கு வந்தேன். ஒரு படத்தோடு எல்லாம் முடிஞ்சிடும்னு நினைச்சேன். ஆனால் காலம் என்னை எங்கேயோ கொண்டு வந்து நிறுத்திடுச்சி. ஏகப்பட்ட பெயர், புகழ் கிடைத்திருக்கிறது. நிறைய வதந்திகளையும் சந்தித்து விட்டேன். என் படம் வெற்றிப்பெற்றால் சந்தோஷப்படுவேன். தோல்வியானால் ரொம்ப வருத்தப்படுவேன். இடைப்பட்ட காலத்தில் அப்படி வருத்தப்பட அவசியம் இல்லாமல் போச்சு. தமிழில் நடித்த ஆதவன், மலையாளத்தில் நடித்த பாடிகார்ட், தெலுங்கில் அடூர் ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து ரிலீசாகி வெற்றிப்படமாக அமைந்தன. இதைவிட பெரிய சந்தோஷம் என்ன இருக்கு. இந்த படங்களில் நடிக்கும் போது அவை ஜெயிக்கும் என்று நம்பினேன். என் கணிப்பு பலித்துவிட்டது, என்று கூறியுள்ளார்.

திருமணம் பற்றி நயன்தாரா கூறுகையில், என்னை சந்திக்கிறவர்கள் பலர் மீனா, நவ்யா நாயருக்கு திருமணம் முடிந்து விட்டது. ரம்பாவுக்கு திருமணம் நடக்கப்போகிறது. உங்கள் திருமணம் எப்போது என்று கேட்கிறார்கள். இந்த கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. திருமணம் முக்கியமானது. அது நடக்கும்போது நடக்கும். எனக்கு ஒரு வேளை காதல் திருமணம் நடந்தால் அது என் அப்பா, அம்மா, துபாயில் வசிக்கும் அண்ணன் போன்றோரின் சம்மதத்துடன்தான் நடக்கும், என்றார்.

சினிமா நடிகைகள் எது செய்தாலும் அது பரபரப்பான செய்தியாகி விடுகிறது. நான் மூக்கூத்தி அணிந்ததை கூட ஏதோ ரகசியம் இருக்கு என்று கிசுகிசுவாக்கிவிட்டார்கள். மூக்குத்தி போட்டால் நல்லா இருக்கும் என்று சொன்னதால்தான் போட்டேன். குறிப்பிட்ட ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்று நான் சொல்வது இல்லை. கதையும் கேரக்டரும் சிறப்பா இருந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன். எனக்கு எந்த பேதமும் இல்லை. என்னைப் பற்றி நிறைய வதந்திகள் வருகின்றன. அவற்றுக்கு பதில் அளிக்க விருப்பம் இல்லை. ஆரம்பத்தில் இந்த வதந்திகள் என் மனதை பாதித்தது. இப்போது பழகி விட்டேன். வருத்தப்படுவது இல்லை. என்னை நம்புபவர்கள் இருக்கிறார்கள். சினிமா ஒரு கிளாமர் உலகம். இங்கு ஜெயித்தால் ஆகாயத்துக்கு தூக்குவார்கள். தோற்றால் பாதாளத்தில் தள்ளி விடுவார்கள் என்பதை நன்றாக புரிந்து வைத்திருப்பதாகவும் நயன்தாரா கூறியுள்ளார்.

Posted in Labels: , | 0 comments

இன்டர்நெட் மூலம் அறிமுகமாகும் பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து விட வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள்.

லண்டன்: இங்கிலாந்தில் செக்ஸ் தொடர்பான நோய்களின் அதிகரிப்புக்கு ஃபேஸ்புக் முக்கியக் காரணமாக திகழ்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
செக்ஸ் நோய்கள் அங்கு பல மடங்கு அதிகரித்து விட்டதாம். இதற்கு ஃபேஸ்புக்தான் முக்கிய காரணமாக இருப்பதாக அந்த ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

இங்கிலாந்தில் சிபிலிஸ் நோயின் தாக்குதல் கடந்த காலங்களை விட தற்போது நான்கு மடங்கு அதிகரித்து விட்டதாம். இதற்கு முன்பின் அறியாதவர்களுடன் ஃபேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செக்ஸ் உறவு கொள்வதுதான் காரணம் என்கிறது அந்த ஆய்வு.

இதுகுறித்து ஆய்வை நடத்திய பொது சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் பீட்டர் கெல்லி கூறுகையில், சிபிலிஸ் நோயின் தாக்குதல் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஏராளமான இளம் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள், இணையதளங்கள் மூலம் குறிப்பாக ஃபேஸ்புக் மூலம் அறிமுகம் இல்லாதவர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு செக்ஸ் உறவு வைத்திருப்பதாக கூறியுள்ளனர்.

சோஷியல் நெட்வொர்க்கிங் இணையதளங்கள், சம்பந்தமே இல்லாதவர்களைக் கூட எளிதில் தொடர்பு கொள்ள வைக்க உதவுகிறது. இது செக்ஸ் நோய்களின் அதிகரிப்புக்குக் காரணமாக விடுகிறது.

20 ஆண்டுகளுக்கு முன்புதான் சிபிலிஸ் நோய் மிகப் பெரிய வியாதியாக இருந்தது. அப்போது ஆணுறையை அதிகம் பேர் பயன்படுத்தியதில்லை. ஆனால் இப்போது ஆணுறை குறித்த விழிப்புணர்வு அதிகம் உள்ள இந்தக் காலகட்டத்திலும் சிபிலிஸ் வேகமாகப் பரவுவது வியப்பாக உள்ளது.

பெண்களில் 20 முதல் 24 வயதுக்குட்பட்டோருக்குத்தான் சிபிலிஸ் அதிகம் தாக்கியுள்ளது. ஆண்களைப் பொறுத்தவரை 25 முதல் 34 வயது வரையிலானோரே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்டர்நெட் மூலம் அறிமுகமாகும் பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து விட வேண்டும் என்று பெரும்பாலான ஆண்கள் நினைக்கிறார்கள். இவர்களைப் போன்றோருக்கு ஃபேஸ்புக் மிகப் பெரிய வடிகாலாக உள்ளது என்றார் கெல்லி.

Posted in Labels: | 0 comments
Related Posts Plugin for WordPress, Blogger...