விரைவில் தடையற்ற மின்சாரம் - கலைஞர்

சென்னை : தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையால், பொதுமக்கள் புழுங்குகின்றனர். தடையற்ற மின்சாரம் எப்போது வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள் நிலையில், 'தமிழகத்தில் மின்பற்றாக்குறை நிலை சீரடைய, இன்னும் சில மாதங்கள் ஆகும். சென்னையில் மின்தடை இல்லை' என, முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை
:

மின்தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மின் உற்பத்தியின் அளவு அதற்கு சமமாக இருக்கவில்லை. நினைத்த நேரத்தில் மின் உற்பத்தியை துவங்கிவிட முடியாது. கடந்த ஆட்சிக் காலத்தில் அதற்கான முயற்சியை துவங்கியிருப்பார்களேயானால், தற்போது மின் உற்பத்தி கூடுதலாகக் கிடைத்திருக்கும். இந்த உண்மையை உணர்ந்து தான் தி.மு.க., அரசு கடந்த 2006ம் ஆண்டு பொறுப்பேற்ற பின், மின் உற்பத்திக்கான முயற்சிகளில் ஈடுப்பட்டுள்ளது. ஆனால், அதன் பயன் கிடைக்க இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகும். அப்போது நம் பற்றாக்குறை பிரச்னை தீரும். அத்தகைய தன்னிறைவு ஏற்படும் வரை, இப்போதுள்ள பற்றாக்குறையைச் சரிக்கட்ட அரசு எந்த வகையில் எல்லாம் முயற்சிகளை மேற்கொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு தேவையான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.

தற்போது, சென்னை மாநகர் மற்றும் அதன் புறநகர்பகுதிகளில் வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் குறைந்த அழுத்த சிறு மற்றும் குறுதொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு 24 மணிநேரமும் தங்குதடையின்றி மின்வினியோகம் செய்யப்படுகிறது. மின்வெட்டு என்பது இந்தப் பகுதிகளில் இல்லை என்பது முழுக்க முழுக்க உண்மை. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வீட்டு உபயோகிப்பாளர்கள் மற்றும் குறைந்த அழுத்த சிறு மற்றும் குறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு 21 மணி நேரம் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிகளுக்கு பகல் நேரத்தில் மட்டும் சுழற்சி முறையில் மூன்று மணிநேரம் மின்தடை செய்யப்படுகிறது. தமிழகத்தின் மின்தேவை 10 ஆயிரத்து 500 முதல் 10 ஆயிரத்து 800 மெகாவாட். மின்சார வாரியம் மூலம் 9,800 மெகாவாட் மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மின்சாரத் தேவையைச் சமாளிக்க 2,000 மெகாவாட் மின்சாரம் வெளிச்சந்தையிலிருந்து அதிக விலைக்கு வாங்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மே மாத இறுதியில், காற்றாலைகள் மூலம் அதிக மின் உற்பத்தி செய்யப்படும்போது மின்வினியோகம் சீரடையும். எந்த அளவிற்கு இதை சமாளிக்க முடியுமோ, அந்த அளவிற்கு சமாளிக்க தமிழக அரசு தன்னால் முடிந்த வரை, அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களும் இந்த நிலையைப் புரிந்து கொண்டு அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Posted in Labels: , , | 0 comments

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக்கொள்ளலாம் - உச்ச நீதிமன்றம்

டெல்லி: திருமணத்துக்கு முன் செக்ஸ் உறவு சட்டபூர்வ குற்றம் அல்ல என்று நடிகை குஷ்பு வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது உச்ச நீதிமன்றம் .

திருமணத்துக்கு முன்பு பெண்கள் பாதுகாப்பான செக்ஸ் உறவு கொள்வது தவறு இல்லை என்று, நடிகை குஷ்பு கருத்து தெரிவித்து இருந்தார். கடந்த 2005-ம் ஆண்டில் வெளியான குஷ்புவின் இந்த கருத்து தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் 22 வழக்குகள் தொடரப்பட்டு இருந்தன. அந்த வழக்குகளை தள்ளுபடி செய்யவேண்டும் என்ற குஷ்புவின் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அதை எதிர்த்து குஷ்பு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் தீபக்வர்மா, பி.எஸ்.சவுகான் ஆகியோரைக்கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. குஷ்புவுக்கு எதிராக தொடரப்பட்ட 22 வழக்குகளையும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

"பேட்டி ஒன்றில் குஷ்பு தெரிவித்த சொந்த கருத்துக்கு எதிராக கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடருவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் குஷ்புவின் கருத்து அமையவில்லை. இந்த வழக்குகள் உள்நோக்கம் கொண்டவை" என்று, நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.

3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்சுக்காக நீதிபதி சவுகான் தீர்ப்பை எழுதி இருந்தார். தீர்ப்பு முழு விவரம்:
"திருமணத்துக்கு பிறகே 'செக்ஸ்' உறவு என்பது நமது சமுதாயத்தின் பிரதான கருத்தாகும். அதே நேரத்தில், திருமணம் ஆகாமலேயே பரஸ்பரம் சம்மதத்துடன் உறவு வைத்துக்கொள்வது சட்டப்படி கிரிமினல் குற்றம் அல்ல என்று, இந்திய தண்டனை சட்டம் 497-வது பிரிவில் தெளிவாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

திருமணத்துக்கு முன் செக்ஸ் குற்றமாகாது!

சாதாரணமாக தனது கருத்துக்களை வெளியிடும் ஒருவரை தண்டிப்பது குற்றவியல் சட்டத்தின் பணி அல்ல. அது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானதாகும். சட்டபூர்வமான குற்றம் இழைத்ததற்கான ஆதாரங்களை புகார்தாரர்கள் தாக்கல் செய்தால் மட்டுமே, வழக்கு தொடர்வதற்கான நடைமுறைகளை மாஜிஸ்திரேட்டுகள் தொடங்க வேண்டும்.

தவறான, சாரமற்ற புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அது குற்றம் சாட்டப்பட்டவருக்கு கொடுமை இழைப்பதாகிவிடும். நடிகை குஷ்புவுக்கு எதிரான புகார்கள், உள்நோக்கத்துடன் அரசியல் கட்சி நிர்வாகிகள் சார்பில் கூறப்பட்டு இருப்பதால், குற்றவியல் நடைமுறை சட்ட அமைப்பை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில், அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்.

குஷ்பு கூறியது அவதூறு இல்லை

ஆங்கில பத்திரிகைக்கு குஷ்பு அளித்த பேட்டியில் தெரிவித்த கருத்துகள் ஆபாசமானவையோ நற்பண்புகளுக்கு களங்கம் ஏற்படுத்துவதாகவோ இல்லை. திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருக்கிறார், அவ்வளவுதான்.

எந்த ஒரு தனி மனிதருக்கோ, கூட்டாக பலருக்கோ அல்லது ஒரு அமைப்புக்கோ அந்த கருத்தை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடும் நோக்கில் அதை அவர் தெரிவிக்கவில்லை. அவதூறு வழக்கு சட்ட பிரிவின் கீழும் அவருடைய கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது.

Posted in Labels: , | 0 comments

ரானுவத்திர்க்குள்ளேயே ஒற்றுமை இல்லை

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமி்ல் தமிழர் உள்பட இரு சக வீரர்களை ராணுவ வீரர் சுட்டுக் கொன்றார்.

இந்த மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டம் கென்ஜங் என்ற இடத்தில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ மையத்தில் நேற்றிரவு 10.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.

ராணுவ வீரர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் அம்பாடி என்ற வீரர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த முத்து (30) மற்றும் கேரளத்தைச் சேர்ந்த தானப்பன் (31) ஆகிய இருவரும் உடலில் குண்டுகள் பாய்ந்து அந்த இடத்திலேயே பலியாயினர்.

இதையடுத்து தப்பியோடிய அம்பாடியை ராணுவ வீரர்கள் நள்ளிரவு 12.30 மணியளவில் காட்டுப் பகுதியில் வைத்து வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பலியான வீரர்களின் உடல்கள் இன்று அவரவர் மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மணிப்பூரில் தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவம் உள்ளிட்ட மத்தியப் படைகள் ஏராளமான அளவில் நிலை நிறுத்தப்ப்டடுள்ளன. கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்தப் படைப் பிரிவுகளில் வீரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் பலர் பலியாகியுள்ளனர்.

இந்த மாநிலத்தில் இதுவரை 7 முறை வீரரே சக வீரர்களை சுட்டுக் கொன்றுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த மாதிரி சிலரால் எல்லோருக்கும் கெட்ட பெயர்.

Posted in Labels: | 0 comments

நேற்று லட்சுமிராய் இன்று அசின் நாளை?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, மும்பையில் உள்ள நடிகை ஆசின் வீட்டுக்குச் சென்று அவருடன் பிரமாண்ட எல்.சி.டி. டிவியில் ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வீரர்களுடன் நடிகைகளை இணைத்துப் பேசுவது புதிதல்ல. அதிலும் டோணியை பல நடிகைகளுடன் இணைத்து தொடர்ந்து பேச்சு வருவது புதிதே அல்ல. சில காலமாக அவரை லட்சுமி ராயுடன் இணைத்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.

டோணி சென்னைக்கு வரும்போதெல்லாம் தவறாமல் லட்சுமி ராயைப் பார்ப்பார் என்று செய்திகள் கூறி வந்தன. அதேபோல ஒரு முறை டோணி தனது வீட்டுக்கு லட்சுமி ராயை அழைத்துச் சென்று வீட்டினருக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக கூட செய்திகள் கூறின.

இந் நிலையில் லட்சுமி ராய் இடத்திற்கு ஆசின் வந்து விட்டதாக புதுச் செய்தி கூறுகிறது. ஆசின் மும்பையில் ஒரு வீடு வாங்கியுள்ளார். இங்கு தங்கியிருந்தபடிதான் இந்திப் படங்களில் அவர் நடித்து வருகிறார். முதலில் இங்கு ஆசினுடன் அவரது அப்பாவும் தங்கியிருந்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரவே அப்பா தனியாகப் போய்விட்டதாக கூறப்பட்டது.

இந் நிலையில், கடந்த 21ம் தேதி லோகன்ட்வாலா பகுதியில் உள்ள ஆசினின் வீட்டுக்கு டோணி வந்தாராம். பின்னர் ஆசினுடன் இணைந்து, மும்பை இந்தியன்ஸ், ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய அரை இறுதிப் போட்டியை பிரமாண்ட எல்சிடி டிவியில் பார்த்து ரசித்தார் டோணி என்று செய்திகள் கூறுகின்றன.

டோணியுடன் இணைந்து 2 விளம்பரப் படங்களில் ஆசின் நடித்தபோதுதான் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு தற்போது மேம்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

டோணி வந்திருப்பதை அறிந்து ஆசின் வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடி விட்டனராம். இருந்தாலும் அவர்களிடம் சிக்காமல் நைசாக நழுவி விட்டாராம் டோணி.

Posted in Labels: , | 0 comments

ஆகஸ்ட்டில் ஆதார்

டெல்லி: நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் மத்திய அரசு வழங்கவுள்ள தேசிய அடையாள அட்டை 'ஆதார்' என்ற பெயரில் வழங்கப்படவுள்ளது.

இந்த அடையாள அட்டைக்கான புதிய சின்னமும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக தேசிய அளவில் போட்டி நடத்தப்பட்டு இந்த சின்னம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சின்னத்தில் சூரியனும், விரல் ரேகையும் இடம் பெற்றுள்ளது.

திட்டக் கமிஷனின் கீழ் இயங்கும் தேசிய அடையாள அட்டை ஆணையகத்தின் தலைவர் நந்தன் நிலேகனி இதனை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் கூறுகையில், இந்த அடையாள அட்டை 16 இலக்க அடையாள எண் கொண்டதாக இருக்கும்.

இந்த அடையாள அட்டை வினியோகம் வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்கும். 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இவை நாடு முழுவதும் அனைத்து மக்களுக்கும் வினியோகிக்கப்பட்டுவிடும் என்றார்.

Posted in Labels: , | 1 comments

குறள் தரும் பொருள்

சென்னை: படிக்கும்போதே புரிந்து கொள்ளும் அளவு எளிய செய்யுள் அமைப்பு திருக்குறள். அதற்கு தனியான விளக்கமெல்லாம் தேவையில்லை என்று கூறியுள்ளார் இசைஞானி இளையராஜா.

கவிஞர், திரைப்படாலாசிரியர் பூவை செங்குட்டுவன் எழுதி இசை அமைத்துள்ள 'குறள் தரும் பொருள்' ஆடியோ சிடியை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார் இளையராஜா. சென்னை ஆழ்வார்ப்பேட்டை நாரத கான சபாவில் இந்த விழா நடந்தது.

இளையராஜா பேசுகையில், "இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய திருக்குறளை, அனைத்து மக்களும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில் இசை வடிவில் கொண்டு வத்தமைக்காக கவிஞர் பூவை செங்குட்டுவனுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

1969-ம் ஆண்டு சென்னைக்கு வந்தேன். சங்கிலி முருகன் நாடகத்துக்கு இசையமைப்பாளராக இருந்தபோது 'நான் உங்கள் வீட்டு பிள்ளை...' என்ற பாடல் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அந்த பாடலை எழுதிய கவிஞர் செங்குட்டுவனை காண வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

நான் முதன் முதலில் சினிமாவில் கவிஞர் செங்குட்டுவனின், 'ஊரும் பழனியப்பா, பெயரும் பழனியப்பா, ஆறுதலை வேண்டுகிறேன் ஆறுமுக சாமியப்பா' என்ற பாடலுக்கு தான் இசையமைத்தேன். அவர் எனது மூத்த சகோதரர் போன்றவர்.

திருக்குறள் உண்மையிலேயே மிக எளிய கட்டமைப்பு கொண்டது. படித்ததும் புரிந்து கொள்ளும் செய்யுள் வடிவம் அது" என்றார்.

கவிஞர் பூவை செங்குட்டுவன் பேசுகையில், "திருக்குறளுக்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் உரை எழுதியிருக்கிறார்கள். பெரும்பாலான உரைகளைப் படித்து, ஆனால் மு.வ. வின் விளக்கத்தை அடிப்படையாக வைத்து 8 மாதம் பாடல்களை எழுதினேன். இரண்டரை ஆண்டுகளாக முயன்று இசை வடிவாக மாற்றியுள்ளேன். சினிமாவில் குறைவான பாடல்களாக இருந்தாலும் நிறைவான பாடல்களை வழங்கிய மனநிறைவு உள்ளது.." என்றார்.

Posted in Labels: | 0 comments

செக்ஸ் ஆராய்ச்சி

பெங்களூர்: இளம் பெண்களுடன் ஒப்பந்தம் போட்டு செக்ஸ் ஆராய்ச்சியில் ஈடுபட்டதாக கர்நாடக சி.ஐ.டி. போலீசாரிடம் நித்யானந்தா ஒப்புக் கொண்டுள்ளார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், ஆசிரமத்துக்கு வரும் பெண்களில் என்னை முழுமையாக நம்பியவர்களிடம் நான் செக்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கினேன். ஆராய்ச்சிக்காக தேவைப்படும்போது செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றே அதில் கூறப்பட்டுள்ளது. எப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் அதை பெண்கள் வெளியில் சொல்லக் கூடாது என்றும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்ட பெண்களுடன் மட்டுமே, நான் செக்ஸ் வைத்துக் கொண்டேன். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறியுள்ளார்.

Related Posts Plugin for WordPress, Blogger...