பென்னாகரம் தொகுதியில் அடிதடி

பென்னாகரம்: இன்று இடைத் தேர்தல் நடக்கும் பென்னாகரம் தொகுதி எல்லையில் மேச்சேரி என்ற கிராமத்தில் குவிந்துள்ள திமுக மற்றும் பாமக தொண்டர்களிடையே மோதல் வெடித்தது.

பென்னாகரம் தொகுதிக்குள் வெளியூர்வாசிகள் இருக்கக் கூடாது என்ற தடையால் அவர்கள் மேச்சேரி கிராமத்தில் குவிந்துள்ளனர். இன்று காலை அங்கு குழுமியிருந்த திமுக, பாமகவினரிடையே மோதல் வெடித்தது.

திமுகவினரின் 2 கார்களை பாமகவினர் தாக்கி அடித்து நொறுக்கினர். இதையடுத்து திமுகவினர் பதில் தாக்குதலில் இறங்கினர். மேச்சேரி பாமக அலுவலகத்தை தாக்கி சூறையாடினர். அங்கிருந்த பொருட்கள் ரோட்டில் வீசப்பட்டன. விரைந்து வந்த போலீஸார் இரு தரப்பினரையும் கலைத்தனர்.

பாமக அலுவலகம் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியினர் சேலம்- மேட்டூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் பாமகவினர் மீது தடியடி நடத்தி கலைத்தனர்.

இந்த மோதலால் பெரும் பதற்றம் நிலவுவதால் அப் பகுதியி்ல் கடைகள் அடைக்கப்பட்டன. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...