குஷ்பூவுக்கு கருணாநிதி சப்போர்ட்


சென்னை : தி.மு.க.,வின் அடுத்த தலைமை குறித்து அழகிரி அளித்துள்ள பேட்டிக்கு, முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார்.

மத்திய அமைச்சர் அழகிரி, வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், 'முதல்வர் கருணாநிதிக்குப் பின் யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என கூறியுள்ளார். தி.மு.க.,வின் அடுத்த வாரிசாகவும், அடுத்த முதல்வராகவும் ஸ்டாலின் சித்தரிக்கப்பட்டு வரும் நிலையில், முதல்வரின் மூத்த மகனான அழகிரி இத்தகைய கருத்தை தெரிவித்திருப்பது தி.மு.க.,வில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காக, பென்னாகரம் செல்வதற்கு முன், முதல்வர் கருணாநிதி சென்னையில் நேற்று அளித்த பேட்டி:

* பென்னாகரம் தொகுதியின் வெற்றி வாய்ப்பு பற்றி?

வெற்றி வாய்ப்பு நிச்சயம், அதில் சந்தேகம் வேண்டாம்.

* 'உங்களுக்கு பிறகு யாரையும் தலைவராக ஏற்றுக் கொள்ளப் போவதில்லை' என மத்திய அமைச்சர் அழகிரி கூறியுள்ளாரே?

அதைப் பற்றி அவரையே கேளுங்கள்.

* உங்களுக்கு பிறகு யாருக்கும் திறமை இல்லை என்பதைப் போல் சொல்லியிருக்கிறாரே?

எனக்குப் பிறகு... என்பது, எந்த ஆண்டு முதல் என்று எனக்கே தெரியாது.

* சுப்ரீம் கோர்ட்டில், குஷ்பு வழக்கு விசாரணையின் போது, திருமணத்திற்கு முன்பே உறவு கொள்வது தவறில்லை என்பதைப் போல நீதிபதி சொல்லியிருக்கிறாரே?

சங்க இலக்கியத்திலேயே, 'களவியல்' என்று ஒரு பகுதி உண்டு. அந்த அடிப்படையில் அதை அணுகிடுவோர் உண்டு. இவ்வாறு முதல்வர் பேட்டியளித்தார்.


0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...