வாக்காளர்கள் எச்சரிக்கை

பென்னாகரம் : பென்னாகரம் தொகுதியில், வாக்காளர்கள் காலில் விழுந்து வேட்பாளர்கள், ஓட்டு சேகரிக்கின்றனர். பென்னாகரம் இடைத்தேர்தலில் ஏற்பட்டுள்ள கடுமையான போட்டி காரணமாக, அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு வாக்காளர்களைக் கவர, பல்வேறு யுக்திகளை கையாள்கின்றனர். பா.ம.க., வேட்பாளர் தமிழ்குமரன், கிராமப் பகுதி மக்களிடம், குறிப்பாக பெண்கள் காலில் விழுந்து ஓட்டு சேகரிக்கத் துவங்கியுள்ளார். இது, கிராமப் பகுதி மக்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்திருப்பதோடு, வரவேற்பும் ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம், பென்னாகரத்தில் நடந்த அ.தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் அவைத் தலைவர் மதுசூதனன், "வாக்காளர்களின் காலில் விழுந்தாவது ஓட்டுகளைப் பெற வேண்டும்' என, கட்சியினருக்கு உத்தரவிட்டார். இதனால், வேட்பாளர்கள், தொகுதியில் வாக்காளர்கள் காலில் விழுந்து பிரசாரம் செய்வது அதிகரித்துள்ளது.

மக்கள் கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேண்டும், காலில் விழுவது வாக்குக்கு மட்டுமல்ல காலை வாருவதுர்க்கும் தான்.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...