சச்சினே ஒரு பாரத ரத்னா!

மும்பை : "மும்பை யாருக்குச் சொந்தம்' என்ற பிரச்னையில் சச்சினை வார்த்தைகளால் வறுத்தெடுத்த, சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே, இப்போது "சச்சினே ஒரு பாரத ரத்னா தான்' என, புகழாரம் சூட்டியுள்ளார். சமீபத்தில் குவாலியரில் தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சச்சின், 200 ரன் எடுத்து உலக சாதனை புரிந்தார். இதற்காக நாட்டின் தலைவர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சிவசேனா கட்சித் தலைவர் பால்தாக்கரே தன் கட்சிப் பத்திரிகையான "சாம்னா'வில் எழுதியிருப்பதாவது: நூறு கோடி மக்களும் சச்சினை இப்போது பாரத ரத்னாவாகவே மதிக்கின்றனர். சச்சினுக்கு பாரத ரத்னா விருதளிக்க யாருடைய சிபாரிசும் தேவையில்லை. அவரே ஒரு பாரத ரத்னா தான். சிவாஜி மகாராஜா, போர்க்களத்தில் முகலாயர்களை எதிர் கொண்டு வெற்றி பெற்றார். அதேபோல், சச்சினும் கிரிக்கெட் களத்தில் வெற்றி பெற்றுள்ளார். சிவாஜி கையில் இருக்கும் வாள் போன்றது சச்சின் கையில் இருக்கும் கிரிக்கெட் மட்டை. இவ்வாறு பால்தாக்கரே குறிப்பிட்டுள்ளார்.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...