உலககோப்பை பரிசுத்தொகை 45 கோடி

துபாய் : உலககோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் தொடருக்கான பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் இணைந்து வரும் 2011 ம் ஆண்டு உலககோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகின்றன. இத்தொடரில் கோப்பை கைப்பற்றும் அணிக்கு, ரூ. 18 கோடி பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த உலககோப்பை தொடரை (2007) விட இரண்டு மடங்கு அதிகம். கடந்த 2007 ம் ஆண்டு நடந்த தொடரில் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணி, ரூ. 9 கோடி வென்றிருந்தது. வரும் 2011 ம் ஆண்டு நடக்க உள்ள தொடருக்கான மொத்த பரிசுத் தொகை ரூ. 45 கோடி.

Posted in Labels: , |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...