ரானுவத்திர்க்குள்ளேயே ஒற்றுமை இல்லை

இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ராணுவ முகாமி்ல் தமிழர் உள்பட இரு சக வீரர்களை ராணுவ வீரர் சுட்டுக் கொன்றார்.

இந்த மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டம் கென்ஜங் என்ற இடத்தில் உள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட் ராணுவ மையத்தில் நேற்றிரவு 10.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது.

ராணுவ வீரர்களுக்குள் ஏற்பட்ட சண்டையில் அம்பாடி என்ற வீரர் திடீரென துப்பாக்கியால் சுட்டார். இதில் தமிழகத்தைச் சேர்ந்த முத்து (30) மற்றும் கேரளத்தைச் சேர்ந்த தானப்பன் (31) ஆகிய இருவரும் உடலில் குண்டுகள் பாய்ந்து அந்த இடத்திலேயே பலியாயினர்.

இதையடுத்து தப்பியோடிய அம்பாடியை ராணுவ வீரர்கள் நள்ளிரவு 12.30 மணியளவில் காட்டுப் பகுதியில் வைத்து வளைத்துப் பிடித்து கைது செய்தனர்.

இது குறித்து ராணுவ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பலியான வீரர்களின் உடல்கள் இன்று அவரவர் மாநிலங்களுக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

மணிப்பூரில் தீவிரவாதிகளை ஒடுக்க ராணுவம் உள்ளிட்ட மத்தியப் படைகள் ஏராளமான அளவில் நிலை நிறுத்தப்ப்டடுள்ளன. கடந்த 2005ம் ஆண்டு முதல் இந்தப் படைப் பிரிவுகளில் வீரர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் பலர் பலியாகியுள்ளனர்.

இந்த மாநிலத்தில் இதுவரை 7 முறை வீரரே சக வீரர்களை சுட்டுக் கொன்றுள்ள சம்பவங்கள் நடந்துள்ளன.

இந்த மாதிரி சிலரால் எல்லோருக்கும் கெட்ட பெயர்.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...