சானியா இனி இந்தியாவுக்கு விளையாடமாட்டார் - பாக். டென்னிஸ்

இஸ்லாமாபாத்: சோயப் மாலிக் உடனான திருமணம் முடிந்த பின்னர் சானியா மிர்சா பாகிஸ்தானுக்காக டென்னிஸ் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் திலவார் அப்பாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார்.

டென்னிஸ் வீராங்கணை சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயப் மாலிக்கை திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
வரும் 15ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடக்க உள்ளது. டென்னிஸ் விளையாட்டில் இந்தியாவுக்கு புகழ் சேர்த்ததோடு, ஏராளமான ரசிகர்களையும் பெற்றுள்ள 23 வயது சானியா மிர்சா, திருமணத்துக்கு பின்னர் சோயப் மாலிக்குடன் துபாயில் குடியேற திட்டமிட்டுள்ளார்.

இந்நிலையில் சானியா திருமணம் குறித்து பாகிஸ்தானின் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் திலவார் அப்பாஸ் கூறுகையில்,

'சானியா மிர்சா, மாலிக்கை திருமணம் செய்து கொள்கிறார் என்ற தகவலை கேட்டபோது மிகவும் சந்தோஷமாக உள்ளது.

சானியாவை நாங்கள் பாகிஸ்தானுக்கு மனமுவந்து வரவேற்கிறோம். வருங்காலத்தில் சானியா பாகிஸ்தான் குடிமக்களில் ஒருவராகி விடுவார். மேலும், எங்களுக்காக அவர் டென்னிஸ் விளையாடவும் செய்வார். சானியாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

சானியா பாகிஸ்தானுக்காக டென்னிஸ் விளையாடுகிறார் என்றால் நாங்கள் மிகுந்த பரவசமும், மகிழ்ச்சியும் அடைவோம். ஆசிய பெண்கள் கணவனின் வழியைத் தான் பின்பற்றுவார்கள். இந்த அடிப்படையில் ஒரு நாள் நிச்சயம் சானியா பாகிஸ்தானுக்காக விளையாடுவார் என நம்புகிறோம்.

இது நடந்தாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லைங்க !

Posted in Labels: , |

2 comments:

  1. Anonymous Says:

    veekam keta kandaroli

  2. Anonymous Says:

    ctrl-y's never mind of playing for anybody...

Related Posts Plugin for WordPress, Blogger...