இந்தியாவில் 5.2. கோடி

டெல்லி: இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் (ஆக்டிவ் யூசர்ஸ்) எண்ணிக்கை 5.2 கோடியை (52 மில்லியன்) தாண்டியிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

'இன்டர்நெட் இன் இந்தியா' என்ற தலைப்பில் இந்திய இணையதளங்கள் மற்றும் மொபைல் அசோசியேஷன் மற்றும் ஐஎம்ஆர்பி நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை நடத்தியுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டில் இதுபோன்ற ஆய்வில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4.2 கோடியாக இருந்தது.

கடந்த 2009ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரையிலான நிலவரப்படி பயனாளர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விட 19 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஆக்டிவ் யூசர் என இந்த ஆய்வில் குறிப்பிடப்படுவது, குறைந்தபட்சம் மாதத்தில் ஒரு நாளாவது இணையத்தை பயன்படுத்தும் வழக்கம் உள்ளவர்கள்.

சிறிய நகரங்கள் மற்றும் பின் தங்கிய பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவில் இணைய பயன்பாடு அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Posted in Labels: |

0 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...